search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோல் அடித்த மகிழ்ச்சியில் ஒடிசா வீரர்கள்
    X
    கோல் அடித்த மகிழ்ச்சியில் ஒடிசா வீரர்கள்

    ஐஎஸ்எல் கால்பந்து - மும்பையை வீழ்த்தி முதல் வெற்றி பெற்றது ஒடிசா

    மும்பையில் நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் மும்பை அணியை வீழ்த்திய ஒடிசா அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.
    மும்பை:

    10 அணிகள் இடையிலான 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

    மும்பையில் இன்று இரவு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி எப்.சி மற்றும் ஒடிசா எப்.சி அணிகள் மோதின.

    ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே ஒடிசா வீரர்கள் அபாரமாக ஆடினர். இதனால் முதல் பாதியின் முடிவில் ஒடிசா அணி 3-0 என முன்னிலை வகித்தது.

    இரண்டாவது பாதியில் மும்பை அணி வீரர்கள் கோல் அடித்து பதிலடி கொடுத்தனர். ஆனாலும், இறுதியில், மும்பை சிட்டி அணியை 4 - 2  என்ற கோல் கணக்கில் ஒடிசா எப்.சி. அணியை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் தனது முதல் வெற்றியை பதிவுசெய்த ஒடிசா  எப்.சி. அணி புள்ளிப் பட்டியலில் ஆறாவது இடம் பிடித்துள்ளது.
    Next Story
    ×