search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரோஜர் பெடரர்
    X
    ரோஜர் பெடரர்

    ஏடிபி கோப்பை டென்னிஸில் இருந்து ரோஜர் பெடரர் விலகல்

    குடும்பத்துடன் நேரத்தை செலவிட விரும்பிய ரோஜர் பெடரர், ஏடிபி கோப்பை டென்னிஸில் இருந்து விலகியுள்ளார்.
    ஆஸ்திரேலியாவில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 3-ந்தேதியில் இருந்து 12-ந்தேதி வரை ஏடிபி கோப்பை டென்னிஸ் தொடர் நடைபெற இருக்கிறது. உலகளவில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் 24 அணிகள் இந்தத் தொடரில் பங்கேற்க இருக்கிறது.

    ஸ்பெயின் அணிக்காக நடாலும், செர்பியா அணிக்காக ஜோகோவிச்சும் விளையாட இருக்கின்றனர். சுவிட்சர்லாந்து அணிக்காக ரோஜர் பெடரர் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால், போட்டி நடைபெறும் இரண்டு வாரங்களும் குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவதற்காக இந்தத் தொடரில் இருந்து பெடரர் விலகியுள்ளார்.
    Next Story
    ×