என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஐஎஸ்எல் கால்பந்து - ஒடிசாவை வீழ்த்தி முதல் வெற்றி பெற்றது நார்த் ஈஸ்ட் யுனைடட்
Byமாலை மலர்26 Oct 2019 4:50 PM GMT (Updated: 26 Oct 2019 4:50 PM GMT)
கோவாவில் நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் ஒடிசா அணியை வீழ்த்தி நார்த் ஈஸ்ட் யுனைடட் அணி வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது.
கோவா:
10 அணிகள் இடையிலான 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
கோவாவின் நேரு ஸ்டேடியத்தில் இன்று இரவு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடட் எப்சி, ஒடிசா எப்சி அணிகள் மோதின.
ஆட்டத்தின் 2வது நிமிடத்திலேயே நார்த் ஈஸ்ட் அணி வீரர் ரிதிம் தியாக் ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார். அதற்கு பிறகு யாரும் கோல் அடிக்கவில்லை. முதல் பாதியில் நார்த் ஈஸ்ட் யுனைடட் அணி 1-0 என முன்னிலை பெற்றது.
ஆட்டத்தின் 71வது நிமிடத்தில் ஒடிசா அணியின் சிஸ்கோ ஹெர்னாண்டஸ் ஒரு கோல் அடித்து 1-1 என சமனிலைக்கு கொண்டு வந்தார்.
கடைசி கட்டத்தில் நார்த் ஈஸ்ட் வீரர் அஸ்மோ கியான் 84வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து தனது அணியை வெற்றி பெற வைத்தார்.
இறுதியில், நார்த் ஈஸ்ட் யுனைடட் எப்சி அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஒடிசா எப்சி அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X