search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியா தென்ஆப்பிரிக்கா டெஸ்ட் கிரிக்கெட்
    X
    இந்தியா தென்ஆப்பிரிக்கா டெஸ்ட் கிரிக்கெட்

    இந்தியா - தென்ஆப்பிரிக்கா ராஞ்சி டெஸ்ட்: 1500 டிக்கெட்டுக்கள் மட்டுமே விற்பனை ஆகியுள்ளதாம்...

    இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டியை பார்க்க இரண்டு நாட்களுக்கு முன்பு வரை 1500 ரசிகர்கள் மட்டுமே டிக்கெட்டுக்கள் வாங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.
    இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சியில் அமைந்துள்ள ஸ்வாங்க் மைதானத்தில் நடக்கிறது. முதன்முதலாக 2017-ல் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி இங்கு நடைபெற்றது.

    அதன்பின் தற்போது 2-வது டெஸ்ட் நடைபெற இருக்கிறது. இந்த டெஸ்ட் போட்டியை காண அதிக அளவில் ரசிகர்கள் மைதானத்திற்கு திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்று வரை 1500 டிக்கெட்டுக்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளதாக ஜார்க்கண்ட் கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளார்.

    டிக்கெட்டின் விலை ரூ. 200-ல் இருந்து ரூ. 2000 வரையும், சீசன் டிக்கெட் 1000 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ராணுவம் மற்றும் போலீசார்களுக்கு ஐந்தாயிரம் டிக்கெட்டுக்கள் இலவசமாக வழங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சமீப காலமாகவே டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான ரசிகர்களின் ஆதரவு குறைந்து வருவதை இந்த புள்ளிவிவரம் தெளிவுப்படுத்தியுள்ளது.
    Next Story
    ×