search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாய்னா நேவால்
    X
    சாய்னா நேவால்

    டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: சாய்னா நேவால் முதல் சுற்றிலேயே அதிர்ச்சி தோல்வி

    டென்மார்க் ஓபன் பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் முதல் சுற்றிலேயே அதிர்ச்சி தோல்வியடைந்தார்.
    டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் ஒடேன்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது. பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு தொடக்க சுற்றில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான பிவி சிந்து வெற்றி பெற்றுள்ள நிலையில், மற்றொரு முன்னணி வீராங்கனையான சாய்னா நேவால் முதல் சுற்றிலேயே அதிர்ச்சி தோல்வியடைந்தார்.

    சாய்னா நேவால் முதல் சுற்றில் ஜப்பானைச் சேர்ந்த சயாகா தகாஹாஷியை எதிர்கொண்டார். இதில் சாய்னா 15-21, 21-23 நேர்செட்டில் தோல்வியடைந்தார்.

    சீனா மற்றும் கொரியா ஓபனில் 32 பேர் கொண்ட சுற்றில் வெளியேறிய நிலையில், தற்போது முதல் சுற்றிலேயே தோல்வியடைந்தனர்.

    முதல் செட்டில் சாய்னாவும் ஜப்பான் வீராங்கனையும் ஒரு கட்டத்தில் 7-7 என சமநிலையில் இருந்தனர். அதன்பின் ஜப்பான் வீராங்கனை தகாஹாஷி 11-8 என முன்னிலைப் பெற்றார். இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியதும் தகாஹாஷி சாய்னாவுக்கு கடும் நெருக்கடி கொடுத்தார். அவரது நெருக்கடியை சாய்னாவால் எதிர்கொள்ள முடியவில்லை. இதனால் தகாஹாஷி 20-13 என முன்னிலைப் பெற்று, அதன்பின் 21-15 என முதல் செட்டை கைப்பற்றினார்.

    2-வது செட்டிலும் இடைவேளை வரை இழுபறியாகவே சென்றது. தகாஹாஷி 11-9 என முன்னிலைப் பெற்றிருந்தார். அதன்பின் தகாஹாஷி 15-10 என முன்னிலைப் பெற்றார். அதன்பின் தகாஹாஷி 15-13 என முன்னிலைப் பெற்ற பிறகு, ஆட்டம் 20-20 என சமன் பெற்றது. இறுதியில் தகாஹாஷி 23-21 என வெற்றி பெற்றார்.
    Next Story
    ×