என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மழையால் முதல்நாள் ஆட்டம் தேனீர் இடைவேளையோடு முடிவுக்கு வந்தது: இந்தியா விக்கெட் இழப்பின்றி 202
Byமாலை மலர்2 Oct 2019 10:42 AM GMT
விசாகப்பட்டினத்தில் இன்று தொடங்கிய முதல்நாள் ஆட்டத்தில் ரோகித் சர்மா சதத்தால் இந்தியா விக்கெட் இழப்பின்றி 202 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் விசாகப்பட்டினத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்தார்.
அதன்படி மயங்க் அகர்வால், ரோகித் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. தென்ஆப்பிரிக்காவின் இரண்டு வேகப்பந்து வீச்சாளர்கள், மூன்று சுழற்பந்து வீச்சாளர்களால் இருவரையும் அவுட்டாக்க முடியவில்லை. ரோகித் சர்மா 84 பந்தில் அரைசதம் அடித்தார்.
ரோகித் சர்மா 154 பந்தில் சதம் அடித்தார். தொடக்க வீரராக களம் இறங்கிய முதல் போட்டியிலேயே சதம் அடித்தார். இந்திய அணி 59.1 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 202 ரன்கள் எடுத்திருக்கும்போது மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.
அத்துடன் தேனீர் இடைவேளை விடப்பட்டது. தேனீர் இடைவேளை முடிந்த பின்பும், மழை பெய்ததால் முதல்நாள் ஆட்டம் அத்துடன் முடிவு பெற்றதாக நடுவர்கள் அறிவித்தனர். ரோகித் சர்மா 115 ரன்களுடனும், மயங்க் அகர்வால் 84 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
அதன்படி மயங்க் அகர்வால், ரோகித் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. தென்ஆப்பிரிக்காவின் இரண்டு வேகப்பந்து வீச்சாளர்கள், மூன்று சுழற்பந்து வீச்சாளர்களால் இருவரையும் அவுட்டாக்க முடியவில்லை. ரோகித் சர்மா 84 பந்தில் அரைசதம் அடித்தார்.
இந்தியா மதிய உணவு இடைவேளை வரை விக்கெட் இழப்பின்றி 91 ரன்கள் எடுத்திருந்தது. உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியது. மயாங்க் அகர்வால் 114 பந்தில் அரைசதம் அடித்தார்.
ரோகித் சர்மா 154 பந்தில் சதம் அடித்தார். தொடக்க வீரராக களம் இறங்கிய முதல் போட்டியிலேயே சதம் அடித்தார். இந்திய அணி 59.1 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 202 ரன்கள் எடுத்திருக்கும்போது மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.
அத்துடன் தேனீர் இடைவேளை விடப்பட்டது. தேனீர் இடைவேளை முடிந்த பின்பும், மழை பெய்ததால் முதல்நாள் ஆட்டம் அத்துடன் முடிவு பெற்றதாக நடுவர்கள் அறிவித்தனர். ரோகித் சர்மா 115 ரன்களுடனும், மயங்க் அகர்வால் 84 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X