என் மலர்tooltip icon

    செய்திகள்

    டென்னிஸ் நடுவருக்கு தடை0
    X
    டென்னிஸ் நடுவருக்கு தடை0

    டென்னிஸ் கோர்ட்டில் பந்தை சேகரிக்கும் சிறுமியிடம் ஆபாச பேச்சு: நடுவருக்கு தடை

    இத்தாலியில் நடைபெற்ற 2-ம் நிலை ஏடிபி டென்னிஸ் தொடரின்போது பந்தை சேகரிக்கும் சிறுமியை நோக்கி ஆபாசமாக பேசிய நடுவருக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
    இத்தாலியில் கடந்த வாரம் ஆண்களுக்கான 2-ம் நிலை ஏடிபி டென்னிஸ் தொடர் நடைபெற்றது. பெட்ரோ சவுசா - என்ரிகோ டல்லா ஆகியோர் விளையாடிக் கொண்டிருக்கும்போது, வீரர்கள் அடித்த பந்தை சேகரிக்கும் சிறுமியிடம் நடுவர் ஆபாச முறையில் பேசியுள்ளார். இது அங்குள்ள கேமராவில் பதிவாகியுள்ளது.

    இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை எழுப்பியது. இதனால் நடுவர் ஜியான்லுகா மோஸ்கரெல்லாக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    ஜியான்லுகா மோஸ்கரெல்லா ஒரு சிறுமியை நோக்கி, ‘‘மிகவும் கவர்ச்சியாக இருக்கிறார். உடல் அளவில் அல்லது எமோசன் அல்லது இரண்டிலும் ஹாட்டாக இருக்கிறாயா’’ என்று கேட்டுள்ளார்.
    Next Story
    ×