search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    17 மில்லியன் பவுண்டுக்காக பிலிப்பே கவுட்டினோவை பார்சிலோனா விடுவிக்குமா?
    X

    17 மில்லியன் பவுண்டுக்காக பிலிப்பே கவுட்டினோவை பார்சிலோனா விடுவிக்குமா?

    100 போட்டியில் விளையாடினால் லிவர்பூல் அணிக்கு 17 மில்லியன் பவுண்டு வழங்க வேண்டும் என்பதால், இந்த சீசனில் கவுட்டினோவை பார்சிலோனா டிரான்ஸ்பர் செய்யும் எனத் தெரிகிறது.
    பிரேசில் கால்பந்து அணியின் சிறந்த வீரர் பிலிப்பே கவுட்டினோ. இவர் லிவர்பூல் அணிக்காக விளையாடி வருந்தார். கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் 106 மில்லின் பவுண்டுக்கு பார்சிலோனா வாங்கியது. அப்போது சில நிபந்தனைகள் கூடுதலாக சில 36 மில்லியன் பவுண்டு வழங்க வேண்டும் என்று ஒப்பந்தத்தில் கூறப்பட்டிருந்தது.

    அதில் ஒன்று பார்சிலோனா அணிக்காக கவுட்டினோ 100 போட்டிகளில் பங்கேற்றால் 17 மில்லியன் பவுண்டு லிவர்பூல் அணிக்கு வழங்க வேண்டும் என்பதுதான்.



    தற்போது வரை பார்சிலோனா அணிக்காக கவுட்டினோ 71 போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்த சீசன் முடிந்தவுடன் வீரர்கள் டிரான்ஸ்பர் நடைபெறும். அப்போது கவுட்டினோவை வெளியேற்றாவிடில், அடுத்த சீசனில் அவர் தொடர்ந்து விளையாட வாய்ப்புள்ளது.

    இதனால் கவுட்டினோவை 17 மில்லியன் பவுண்டுக்காக பார்சிலோனா வெளியேற்றுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
    Next Story
    ×