என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றார் அமித் பங்கால்
Byமாலை மலர்26 April 2019 10:09 AM GMT (Updated: 26 April 2019 10:09 AM GMT)
தாய்லாந்தில் நடைபெற்று வரும் ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில், இந்திய வீரர் அமித் பங்கால் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.#AsianChampionships #AmitPanghal
பாங்காக்:
ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி தாய்லாந்தில் நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான 52 கிலோ எடைப்பிரிவில், இந்திய வீரர் அமித் பங்கால், இறுதிச்சுற்றில் தென்கொரிய வீரர் கிம் இங்கியூவை எதிர்கொண்டார்.
இந்திய வீரர் பங்காலின் ஆக்ரோஷமான தாக்குதலுக்கு, கொரிய வீரரால் பதிலடி கொடுக்க முடியவில்லை. அடுத்தடுத்து குத்துகளை விட்டு புள்ளிகளைக் குவித்த அமித் பங்கால் எளிதில் வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இதன் மூலம் ஆண்டில் இரண்டாவது தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.
இதேப்போல் 65 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் கவிந்தர் சிங் பிஸ்த் 3-2 என்ற கணக்கில் மங்கோலியா வீரர் எங்க் அமர் காக்ஹூவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். 49 கிலோ பிரிவில் இந்தியாவின் தீபக் சிங் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். ஆஷிஷ் குமார் (75 கிலோ), ஈரானின் செயெத்ஷஹின் மொய்சாவியை சாய்த்து இறுதிசுற்றுக்கு முன்னேறினார். #AsianChampionships #AmitPanghal
ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி தாய்லாந்தில் நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான 52 கிலோ எடைப்பிரிவில், இந்திய வீரர் அமித் பங்கால், இறுதிச்சுற்றில் தென்கொரிய வீரர் கிம் இங்கியூவை எதிர்கொண்டார்.
இந்திய வீரர் பங்காலின் ஆக்ரோஷமான தாக்குதலுக்கு, கொரிய வீரரால் பதிலடி கொடுக்க முடியவில்லை. அடுத்தடுத்து குத்துகளை விட்டு புள்ளிகளைக் குவித்த அமித் பங்கால் எளிதில் வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இதன் மூலம் ஆண்டில் இரண்டாவது தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.
இதேப்போல் 65 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் கவிந்தர் சிங் பிஸ்த் 3-2 என்ற கணக்கில் மங்கோலியா வீரர் எங்க் அமர் காக்ஹூவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். 49 கிலோ பிரிவில் இந்தியாவின் தீபக் சிங் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். ஆஷிஷ் குமார் (75 கிலோ), ஈரானின் செயெத்ஷஹின் மொய்சாவியை சாய்த்து இறுதிசுற்றுக்கு முன்னேறினார். #AsianChampionships #AmitPanghal
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X