search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றார் அமித் பங்கால்
    X

    ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றார் அமித் பங்கால்

    தாய்லாந்தில் நடைபெற்று வரும் ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில், இந்திய வீரர் அமித் பங்கால் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.#AsianChampionships #AmitPanghal
    பாங்காக்:

    ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி தாய்லாந்தில் நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான 52 கிலோ எடைப்பிரிவில், இந்திய வீரர் அமித் பங்கால், இறுதிச்சுற்றில் தென்கொரிய வீரர் கிம் இங்கியூவை எதிர்கொண்டார்.

    இந்திய வீரர் பங்காலின் ஆக்ரோஷமான தாக்குதலுக்கு, கொரிய வீரரால் பதிலடி கொடுக்க முடியவில்லை. அடுத்தடுத்து குத்துகளை விட்டு புள்ளிகளைக் குவித்த அமித் பங்கால் எளிதில் வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இதன் மூலம் ஆண்டில் இரண்டாவது தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.

    இதேப்போல் 65 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் கவிந்தர் சிங் பிஸ்த் 3-2 என்ற கணக்கில் மங்கோலியா வீரர் எங்க் அமர் காக்ஹூவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.  49 கிலோ பிரிவில் இந்தியாவின் தீபக் சிங் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். ஆஷிஷ் குமார் (75 கிலோ), ஈரானின் செயெத்ஷஹின் மொய்சாவியை சாய்த்து இறுதிசுற்றுக்கு முன்னேறினார். #AsianChampionships #AmitPanghal
    Next Story
    ×