என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பிரியாணி சாப்பிட்டுக் கொண்டிருந்தால் உலகக்கோப்பையை வெல்ல முடியாது- பாக். வீரர்களுக்கு வாசிம் அக்ரம் அறிவுரை
Byமாலை மலர்9 April 2019 1:45 PM GMT (Updated: 9 April 2019 1:45 PM GMT)
பிரியாணி சாப்பிட்டுக் கொண்டிருந்தால் உலகக்கோப்பையை வெல்ல முடியாது என வாசிம் அக்ரம் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களை விளாசி உள்ளார்.
உலகக்கோப்பை போட்டித் தொடர் இங்கிலாந்தில் மே 30-ம் தேதி தொடங்குகிறது. இதற்காக ஒவ்வொரு நாட்டு அணியும் வீரர்களை தயார் செய்து வருகின்றன. இன்னும் இரு மாதங்கள் இருக்கும் நிலையில், வீரர்களின் உடற்தகுதிக்கு ஒவ்வொரு அணியும் அதிக முக்கியத்துவம் அளித்து வருகின்றன.
ஆனால், பாகிஸ்தான் அணியின் நிலைமை மிகவும் மோசமாக இருந்து வருகிறது. குறிப்பாக 50 ஓவர்கள் போட்டியில் கடந்த 2017-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபிக்குப்பின் அந்த அணியால் சிறப்பாகச் செயல்பட முடியவில்லை.
நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, ஆசியக்கோப்பை என அனைத்திலும் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்தது. சமீபத்தில் துபாயில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் 0-5 என்ற கணக்கில் பாகிஸ்தான் படுதோல்வி அடைந்தது.
துபாயில் பாகிஸ்தானுக்கு சாதகமான சூழல் இருந்தபோதிலும் கூட அந்த அணி வீரர்களின் மோசமான செயல்பாட்டால் கோப்பையை வெல்ல முடியாமல் போனது. பாகிஸ்தான் அணியில் 6 முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டாலும், பாகிஸ்தான் அணியில் இருந்த இளம் வீரர்கள் எதிர்பார்த்த அளவுக்கு விளையாடவில்லை.
இந்நிலையில், முன்னாள் இடது கை வேகபந்து வீச்சாளரும், கேப்டனுமான வாசிம் அக்ரம் அந்நாட்டு எழுத்தாளர் சாத் சஜிக்குக்கு அளித்த பேட்டியில் வீரர்களின் உடல்தகுதியை விளாசியுள்ளர். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
பாகிஸ்தான் வீரர்களுக்கு இன்னும் பிரியாணி சப்ளை செய்யப்பட்டு வருகிறது. வீரர்கள் அனைவரும் ருசியாக பிரியாணி சாப்பிட்டால், சாம்பியன்களுடன் போட்டியிட முடியாது. வெற்றி பெறவும் முடியாது.
இவ்வாறு வாசிம் அக்ரம் கூறினார்.
உலகக்கோப்பைப் போட்டிக்கான அணியை பாகிஸ்தான் வரும் 18-ம் தேதி அறிவிக்கிறது. இந்திய அணி வரும் 15-ம் தேதி அறிவிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், பாகிஸ்தான் அணியின் நிலைமை மிகவும் மோசமாக இருந்து வருகிறது. குறிப்பாக 50 ஓவர்கள் போட்டியில் கடந்த 2017-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபிக்குப்பின் அந்த அணியால் சிறப்பாகச் செயல்பட முடியவில்லை.
நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, ஆசியக்கோப்பை என அனைத்திலும் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்தது. சமீபத்தில் துபாயில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் 0-5 என்ற கணக்கில் பாகிஸ்தான் படுதோல்வி அடைந்தது.
துபாயில் பாகிஸ்தானுக்கு சாதகமான சூழல் இருந்தபோதிலும் கூட அந்த அணி வீரர்களின் மோசமான செயல்பாட்டால் கோப்பையை வெல்ல முடியாமல் போனது. பாகிஸ்தான் அணியில் 6 முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டாலும், பாகிஸ்தான் அணியில் இருந்த இளம் வீரர்கள் எதிர்பார்த்த அளவுக்கு விளையாடவில்லை.
இந்நிலையில், முன்னாள் இடது கை வேகபந்து வீச்சாளரும், கேப்டனுமான வாசிம் அக்ரம் அந்நாட்டு எழுத்தாளர் சாத் சஜிக்குக்கு அளித்த பேட்டியில் வீரர்களின் உடல்தகுதியை விளாசியுள்ளர். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
பாகிஸ்தான் வீரர்களுக்கு இன்னும் பிரியாணி சப்ளை செய்யப்பட்டு வருகிறது. வீரர்கள் அனைவரும் ருசியாக பிரியாணி சாப்பிட்டால், சாம்பியன்களுடன் போட்டியிட முடியாது. வெற்றி பெறவும் முடியாது.
இவ்வாறு வாசிம் அக்ரம் கூறினார்.
உலகக்கோப்பைப் போட்டிக்கான அணியை பாகிஸ்தான் வரும் 18-ம் தேதி அறிவிக்கிறது. இந்திய அணி வரும் 15-ம் தேதி அறிவிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X