search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    4 ஓவரில் 47 ரன் - அஸ்வினை கிண்டல் செய்த ரசிகர்கள்
    X

    4 ஓவரில் 47 ரன் - அஸ்வினை கிண்டல் செய்த ரசிகர்கள்

    கொல்கத்தா அணிக்கு எதிராக 4 ஓவரில் 47 ரன் ரன்களை விட்டுகொடுத்த அஸ்வினின் மோசமான பந்து வீச்சை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கிண்டல் செய்துள்ளனர். #Ashwin

    அஸ்வினை கிண்டல் செய்த ரசிகர்கள்

    கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கேப்டன் அஸ்வினின் பந்து வீச்சு எடுபடவில்லை. அவர் 4 ஓவர் வீசி 47 ரன்களை விட்டுக் கொடுத்தார். ஒரு விக்கெட் கூட கைப்பற்ற வில்லை.

    அஸ்வினின் இந்த மோசமான பந்து வீச்சை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கிண்டல் செய் துள்ளனர். ராஜஸ்தான் அணி வீரர் பட்லரை மன்கட் முறையில் ரன் அவுட் செய்த விவகாரத்தில் ரசிகர்கள் அவரை கலாய்த்து உள்ளனர்.


    அஸ்வினின் செயல் அநாகரீகமானது, கிரிக்கெட் ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல என்று ஏற்கனவே விமர்சிக்கப்பட்டது. விதிப் படிதான் நான் செயல் பட்டேன் என்று அவர் விளக் கம் அளித்து இருந்தார்.

    இதன் எதிரொலியாகத் தான் அஸ்வினின் நேற்றைய போட்டியின் பந்து வீச்சை ரசிகர்கள் கிண்டல் செய்துள்ளனர்.

    Next Story
    ×