search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான 2-வது டெஸ்ட்: இலங்கை 154 ரன்னில் சுருண்டது
    X

    தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான 2-வது டெஸ்ட்: இலங்கை 154 ரன்னில் சுருண்டது

    தென்ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இலங்கை முதல் இன்னிங்சில் 154 ரன்னில் சுருண்டது. #SAvSL
    தென்ஆப்பிரிக்கா - இலங்கை இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி போர்ட் எலிசபெத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    தொடக்க வீரர் மார்க்கிராம் 60 ரன்களும், விக்கெட் கீப்பர் டி காக் 86 ரன்களும் சேர்த்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 222 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இலங்கை அணி சார்பில் பெர்னாண்டோ, ரஜிதா தலா மூன்று விக்கெட்டுக்கள் வீழ்த்தினர்.

    பின்னர் இலங்கை முதல் இன்னிங்சில் விளையாடியது. நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் இலங்கை 3 விக்கெட் இழப்பிற்கு 60 ரன்கள் எடுத்திருந்தது. திரிமானே 25 ரன்னுடனும், ரஜிதா ரன்ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.

    இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ரஜிதா 1 ரன் எடுத்த நிலையிலும், திரிமானே 29 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தனர். விக்கெட் கீப்பர் டிக்வெல்லா தாக்குப்பிடித்து 42 ரன்கள் அடிக்க இலங்கை அணி 37.4 ஓவர்கள் மட்டுமே விளையாடி 154 ரன்னில் சுருண்டது. ரபாடா 4 விக்கெட்டும், ஆலிவியர் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.



    தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 68 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இந்த முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கியது. மார்கிராம், டீன் எல்கர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். டீன் எல்கர் 2 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். அத்துடன் 2-வது நாள் உணவு இடைவேளை விடப்பட்டது. அப்போது தென்ஆப்பிரிக்கா ஒரு விக்கெட் இழப்பிற்கு 10 ரன்கள் எடுத்துள்ளது.
    Next Story
    ×