search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தாய் இறந்த சோகத்துக்கிடையிலும் அணிக்காக விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் வீரர்
    X

    தாய் இறந்த சோகத்துக்கிடையிலும் அணிக்காக விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் வீரர்

    வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர் ஜோசப், தனது தாய் இறந்த சோகத்துக்கிடையிலும் அணிக்காக பேட்டிங் செய்ததோடு, பந்து வீசியும் அசத்தினார். #WIvENG
    வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் ஆண்டிகுவாவில் நடைபெற்றது. கடந்த மாதம் 31-ந்தேதி தொடங்கிய இந்த ஆட்டம் நேற்றுடன் முடிவடைந்தது.

    2-வது நாள் ஆட்ட முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 6 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்கள் எடுத்திருந்தது. பிராவோ 33 ரன்னுடனும், ஹோல்டர் 19 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    நேற்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. நேற்றைய ஆட்டம் தொடங்குவதற்கு முன் வெஸ்ட் இண்டீஸ் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான ஜோசப்பின் தாயார் மரணம் அடைந்தார். இதனால் ஜோசப் விளையாடுவாரா? என்ற கேள்வி எழுந்தது.



    ஆனால் ஹோல்டர், ரோச் ஆட்டமிழந்த பின்னர், 9-வது விக்கெட்டுக்கு பேட்டிங் செய்ய களம் இறங்கினார். 7 ரன் எடுத்து பென் ஸ்டோக்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார். பின்னர் விளையாடிய இங்கிலாந்து 132 ரன்னில் சுருண்டது. ஜோசப் டென்லி (17), ஜோ ரூட் (7) ஆகியோரை வெளியேற்றினார்.

    தாயார் இறந்த சோகத்துக்கிடையிலும் அணிக்காக விளையாடி அனைத்து ரசிகர்களின் மனதையும் ஈர்த்தார். ஜோசப். ஜோசப் தாயாராக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்து வீரர்கள் கையில் கருப்புப்பட்டை அணிந்து விளையாடினார்கள்.
    Next Story
    ×