search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புரோ கபடி லீக் - பாட்னா, பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டி சமனில் முடிந்தது
    X

    புரோ கபடி லீக் - பாட்னா, பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டி சமனில் முடிந்தது

    புரோ கபடி லீக் போட்டியில் அரியானாவில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ் மற்றும் பெங்களூரு புல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி சமனில் முடிந்தது. #ProKabaddi #PatnaPirates #BengaluruBulls
    சண்டிகர்:

    12 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவின் பல மாநிலங்களில் நடைபெற்று வருகிறது. 

    அரியானா மாநிலம் பஞ்சகுலா நகரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ் மற்றும் பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதின.

    ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே இரு அணி வீரர்களும் சிறப்பாக ஆடினர். இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் பெங்களூரு அணி 12 - 11 என முன்னிலை வகித்தது.

    ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் பெங்களூரு அணியினர் அதிரடியாக விளையாடினர். இதனால் ஒரு கட்டத்தில் பாட்னா பைரேட்ஸ் அணியை விட கூடுதலாக புள்ளிகள் பெற்றிருந்தனர். இறுதிக்கட்டத்தில் பாட்னா அணியினர் துடிப்பாக விளையாடி 40 - 40 என சமனிலைக்கு கொண்டு வந்தனர். 

    பரபரப்பான ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ் மற்றும் பெங்களூரு புல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி சமனில் முடிந்தது. #ProKabaddi #PatnaPirates #BengaluruBulls
    Next Story
    ×