search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நேற்று நடப்பு சாம்பியன், இன்று நம்பர்-1 வீராங்கனை: பிவி சிந்து அசத்தல்
    X

    நேற்று நடப்பு சாம்பியன், இன்று நம்பர்-1 வீராங்கனை: பிவி சிந்து அசத்தல்

    உலக பேட்மிண்டன் பைனல்ஸ் தொடரில் நம்பர் ஒன் வீராங்கனையை 2-1 என பிவி சிந்து தோற்கடித்து 2-வது வெற்றியை ருசித்துள்ளார். #PVSindhu
    குவாங்சோவ்:

    ‘டாப்-8’ வீரர்- வீராங்கனைகள் மட்டும் கலந்து கொள்ளும் உலக பேட்மிண்டன் பைனல்ஸ் தொடர் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான உலக பேட்மிண்டன் பைனல்ஸ் சீனாவில் உள்ள குவாங்சோவ் நகரில் நேற்று தொடங்கியது. வரும் 16-ந்தேதி வரை இத்தொடர் நடக்கிறது.

    இந்தியாவைச் சேர்ந்த பிவி சிந்து ‘ஏ’ பிரிவில் இடம்பிடித்துள்ளார். இதே பிரிவில் நடப்பு சாம்பியன் அகானே யமாகுச்சி (ஜப்பான்), நம்பர் ஒன் வீராங்கனை தாய் ஜூ யிங் (சீனதைபே), தரவரிசையில் 8-வது இடத்தில் இருக்கும் ஷாங் பீவென் (அமெரிக்கா) ஆகியோர்  இடம்பிடித்துள்ளனர்.

    நேற்றைய முதல் ஆட்டத்தில் பிவி சிந்து நடப்பு சாம்பியனான அகானே யமாகுச்சியை எதிர்கொண்டார். இதில் பிவி சிந்து 24-22, 21-15 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

    இன்று நம்பர் ஒன் வீராங்கனையான சீனதைபேயின் தாய் ஜூ யிங்கை எதிர்கொண்டார். முதல் செட்டை 14-21 என பிவி சிந்து இழந்தார். பின்னர் சுதாரித்துக் கொண்ட அவர், ஆக்ரோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 2-வது செட்டை 21-16 என கைப்பற்றிய பிவி சிந்து, 3-வது செட்டை 21-18 எனக் கைப்பற்றி வெற்றி பெற்றார்.

    தாய் ஜூ யிங்கிற்கு எதிராக பிவி சிந்து 7 முறை மோதியுள்ளார். இதில் தற்போதுதான் வெற்றியை ருசித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×