என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இதைவிட்டால் ஆஸி.யை வீழ்த்த இந்திய டெஸ்ட் அணிக்கு வாய்ப்பே இல்லை- பரூக் என்ஜினீயர் சொல்கிறார்
Byமாலை மலர்27 Nov 2018 4:03 PM GMT (Updated: 27 Nov 2018 4:03 PM GMT)
ஸ்மித் மற்றும் வார்னர் இல்லாத ஆஸ்திரேலியா அணியை வீழ்த்த இதை விட்டால் இந்திய அணிக்கே வாய்ப்பே இல்லை என்று பரூப் என்ஜினீயர் தெரிவித்துள்ளார். #AUSvIND
ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் 1-1 என சமநிலையில் முடிந்தது. நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அடுத்த மாதம் 6-ந்தேதி தொடங்குகிறது. முன்னணி பேட்ஸ்மேன்களான வார்னர் மற்றும் ஸ்மித் ஆகியோர் இல்லாதது ஆஸ்திரேலியா அணிக்கு மிகப்பெரிய இழப்பாகும். இதுவரை ஆஸ்திரேலியா மண்ணில் தொடரை வெல்லாத இந்தியாவிற்கு தொடரை வெல்ல அதிக வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.
இந்நிலையில் இந்தியாவின் முன்னாள் வீரரான பரூக் என்ஜினீயர், இந்த வாய்ப்பை இந்தியா தவறவிட்டால், அதன்பின் வாய்ப்பே கிடைக்காது என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பரூக் அப்துல்லா கூறுகையில் ‘‘ஆஸ்திரேலியா வார்னர் மற்றும் ஸ்மித் என்ற மிகப்பெரிய வீரர்களை இழந்திருக்கிறது. மிகப்பெரிய இரு வீரர்களை ஆடும் லெவனில் இழக்கும்போது, அந்த அணி மிகப்பெரிய அளவில் பலவீனமாகத்தான் இருக்கும்.
ஆஸ்திரேலியாவை வீழ்த்த இதைவிட மிகச்சிறந்த வாய்ப்பு கிடைக்காது. இரு வீரர்கள் இல்லாத தற்போதைய ஆஸ்திரேலியா ஒரு சராசரியான அணிதான். இந்த வாய்ப்பை நாம் கட்டாயம் பறித்துக் கொள்ள வேண்டும். இந்தியா மிகவும் சிறந்த ஆட்டத்தை விளையாடிகிட்டு இருக்கிறது.
சிறந்த கேப்டனை பெற்றிருக்கிறோம். சிறப்பாக விளையாடிகிட்டு வருகிறார். சிறந்த ஆல்ரவுண்டர்களை பெற்றிருக்கிறோம். அதேபோல் சிறந்த வேகப்பந்து, சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். இதை சாதகமாக்கி ஆஸ்திரேலியாவை ஆஸ்திரேலியா மண்ணில் வீழ்த்த வேண்டும்’’ என்றார்.
இந்நிலையில் இந்தியாவின் முன்னாள் வீரரான பரூக் என்ஜினீயர், இந்த வாய்ப்பை இந்தியா தவறவிட்டால், அதன்பின் வாய்ப்பே கிடைக்காது என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பரூக் அப்துல்லா கூறுகையில் ‘‘ஆஸ்திரேலியா வார்னர் மற்றும் ஸ்மித் என்ற மிகப்பெரிய வீரர்களை இழந்திருக்கிறது. மிகப்பெரிய இரு வீரர்களை ஆடும் லெவனில் இழக்கும்போது, அந்த அணி மிகப்பெரிய அளவில் பலவீனமாகத்தான் இருக்கும்.
ஆஸ்திரேலியாவை வீழ்த்த இதைவிட மிகச்சிறந்த வாய்ப்பு கிடைக்காது. இரு வீரர்கள் இல்லாத தற்போதைய ஆஸ்திரேலியா ஒரு சராசரியான அணிதான். இந்த வாய்ப்பை நாம் கட்டாயம் பறித்துக் கொள்ள வேண்டும். இந்தியா மிகவும் சிறந்த ஆட்டத்தை விளையாடிகிட்டு இருக்கிறது.
சிறந்த கேப்டனை பெற்றிருக்கிறோம். சிறப்பாக விளையாடிகிட்டு வருகிறார். சிறந்த ஆல்ரவுண்டர்களை பெற்றிருக்கிறோம். அதேபோல் சிறந்த வேகப்பந்து, சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். இதை சாதகமாக்கி ஆஸ்திரேலியாவை ஆஸ்திரேலியா மண்ணில் வீழ்த்த வேண்டும்’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X