search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய அணிக்கு திரும்புவதற்காக கவுன்ட்டி கிரிக்கெட்டில் விளையாடவில்லை- முரளி விஜய்
    X

    இந்திய அணிக்கு திரும்புவதற்காக கவுன்ட்டி கிரிக்கெட்டில் விளையாடவில்லை- முரளி விஜய்

    இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு திரும்ப வேண்டும் என்ற நோக்கத்தில் கவுன்ட்டி கிரிக்கெட்டில் விளையாடவில்லை என்று முரளி விஜய் தெரிவித்துள்ளார். #MuraliVijay
    இங்கிலாந்து - இந்தியா இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இதில் இங்கிலாந்து 4-1 என வெற்றி பெற்றது. முதல் இரண்டு போட்டியில் விளையாடிய தொடக்க வீரர் முரளி விஜய்  20,0,6,0 என சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார்.

    இதனால் 3-வது டெஸ்டில் இருந்து இடம்பெறவில்லை. 4-வது மற்றும் 5-வது டெஸ்டிற்கான இந்திய அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். அதன்பின் கவுன்ட்டி போட்டியில சசக்ஸ் அணிக்காக விளையாடினார். சசக்ஸ் அணிக்காக 56, 100, 85, 80 மற்றும் 2 என அசத்தினார்.

    இதனால் ஆஸ்திரேலியா தொடருக்கான நான்கு போட்டிகள் டெஸ்டிற்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார். இந்திய அணியில் இடம் பிடிப்பதற்கான கவுன்ட்டி போட்டியில் விளையாடவில்லை என்று முரளி விஜய் தெரிவி்த்துள்ளார்.



    இதுகுறித்து முரளி விஜய் கூறுகையில் ‘‘நான் என்மீது நம்பிக்கை வைத்திருக்க வேண்டும் என்பதுதான் முக்கியமான விஷயம். மீண்டும் இந்திய அணிக்கு திரும்ப வேண்டும் என்பதற்காக கவுன்ட்டி கிரிக்கெட் விளையாடவில்லை.

    கவுன்ட்டி போட்டியில் விளையாட இதுதான் சரியான நேரம் என்று நினைத்தேன். இதனால் கவுன்ட்டி கிரிக்கெட்டில் விளையாடினேன். சிறப்பாக விளையாடினால், இந்திய அணியில் தானாக இடம் கிடைக்கும்’’  என்றார்.
    Next Story
    ×