search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப்- இந்திய ஜூனியர் அணி அரையிறுதிக்கு முன்னேற்றம்
    X

    தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப்- இந்திய ஜூனியர் அணி அரையிறுதிக்கு முன்னேற்றம்

    நேபாளத்தில் நடைபெற்று வரும் தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய ஜூனியர் அணி அரையிறுதிக்கு முன்னேறியது. #SAFFChampionship #IndianFootball #SAFFU15Championship
    புதுடெல்லி:

    தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு (எஸ்ஏஎப்எப்) சார்பில் நேபாள தலைநகர் காத்மாண்டுவில் 15 வயதிற்குட்பட்டோருக்கான சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இந்திய அணி இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் பூட்டான் அணியை எதிர்கொண்டது.

    துவக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய இந்திய வீரர்கள், பூட்டான் வீரர்களை முன்னேற விடாமல் தடுத்ததுடன், வாய்ப்புகளை வீணடிக்காமல் கோல் அடித்தனர். 4-வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பில் ஷுபோ கோல் அடித்து கணக்கை தொடங்கினார்.

    அதன்பின்னர் 66-வது நிமிடத்தில் சுபாவும், 83-வது நிமிடத்தில் ஷுபோவும், 89-வது நிமிடத்தில் அமானும் கோல் அடித்து அசத்தினர். பூட்டான் வீரர்களின் கோல் முயற்சி வீணானது. இறுதியில் 4-0 என இந்தியா வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. #SAFFChampionship #IndianFootball #SAFFU15Championship
    Next Story
    ×