என் மலர்
செய்திகள்

விஜய் ஹசாரே டிராபி- காலிறுதி ஆட்டங்கள் நாளை தொடக்கம்
விஜய் ஹசாரே டிராபியின் காலிறுதி ஆட்டங்கள் நாளை தொடங்குகின்றன. ஒரு ஆட்டத்தில் மும்பை - பீகார் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. #VijayHazareTrophy
உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே டிராபி தற்போது நடைபெற்று வருகிறது வருகிறது. 37 அணிகள் பங்கேற்ற இந்த தொடரின் லீக் ஆட்டங்கள் முடிவில் ‘ஏ’ பிரிவில் இருந்து மும்பை, மராட்டியம், ‘பி’ பிரிவில் டெல்லி, ஆந்திரா, ஐதராபாத், ‘சி’ பிரிவில் அரியானா, ஜார்க்கண்ட், கீழ்நிலை பிரிவான பிளேட் பிரிவில் பீகார் ஆகிய அணிகள் கால் இறுதிக்கு தகுதி பெற்றன.
கால் இறுதி ஆட்டங்கள் நாளை பெங்களூரில் தொடங்குகின்றன. நாளை இரண்டு ஆட்டம் நடக்கிறது. இதில் ஒரு ஆட்டத்தில் மும்பை - பீகார் மோதுகின்றன. மற்றொரு ஆட்டத்தில் டெல்லி - அரியானா பலப்பரீட்சை நடத்துகின்றன.
15-ந்தேதி நடக்கும் கால் இறுதி ஆட்டங்களில் மராட்டியம்- ஜார்க்கண்ட், ஆந்திரா - ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.
கால் இறுதி ஆட்டங்கள் நாளை பெங்களூரில் தொடங்குகின்றன. நாளை இரண்டு ஆட்டம் நடக்கிறது. இதில் ஒரு ஆட்டத்தில் மும்பை - பீகார் மோதுகின்றன. மற்றொரு ஆட்டத்தில் டெல்லி - அரியானா பலப்பரீட்சை நடத்துகின்றன.
15-ந்தேதி நடக்கும் கால் இறுதி ஆட்டங்களில் மராட்டியம்- ஜார்க்கண்ட், ஆந்திரா - ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.
Next Story