search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புரோ கபடி லீக்- தமிழ் தலைவாஸ் அணி 2-வது வெற்றியை பெறுமா? உபி யோதாவுடன் இன்று மோதல்
    X

    புரோ கபடி லீக்- தமிழ் தலைவாஸ் அணி 2-வது வெற்றியை பெறுமா? உபி யோதாவுடன் இன்று மோதல்

    புரோ கபடி ‘லீக்’ போட்டியின் இரண்டாவது ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி உ.பி.யை யோதை வீழ்த்தி 2-வது வெற்றியை பெறுமா? என்று ஆவலுடன் எதிர்நோக்கப்படுகிறது. #Prokabbadi #tamilthalaivas
    சென்னை:

    6-வது புரோ கபடி ‘லீக்‘ போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று தொடங்கியது.

    ஜனவரி 5-ந்தேதிவரை நடைபெறும் இந்த புரோ கபடி ‘லீக்‘ போட்டியில் 12 அணிகள் பங்கேற்றன.

    அவை 2 பிரிவாக பிரிக் கப்பட்டுள்ளது. ‘ஏ’  பிரிவில் புனே பில்தான், யு மும்பா, அரியானா ஸ்டீலர்ஸ், தபாங் டெல்லி, குஜராத் பார்ச்சுன் ஜெய்ட்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் ஆகிய அணிகளும், ‘பி’ பிரிவில் தமிழ் தலைவாஸ், நடப்பு சாம்பியன் பாட்னா பைரேட்ஸ், உ.பி. யோதா, தெலுங்கு டைட்டன்ஸ், பெங்களூரு புல்ஸ், பெங்கால் வாரியர்ஸ் அணிகளும் இடம் பெற்றுள்ளன.

    ‘லீக்‘ முடிவில் இரண்டு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும், ஒவ்வொரு அணியும் 22 ‘லீக்‘ ஆட்டத்தில் விளையாடும்.

    தொடக்க ஆட்டத்தில் அஜய் தாகூர் தலைமையிலான தமிழ் தலைவாஸ்- பர்தீப் நார்வால் தலைமையிலான பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதின. இதில் தமிழ் தலைவாஸ் வெற்றியுடன் கணக்கை தொடங்கியது. 42-20 என்ற புள்ளிக் கணக்கில் பாட்னாவை எளிதில் வீழ்த்தியது.

    தமிழ் தலைவாஸ் அணியில் அஜய் தாகூர் 14 புள்ளிகளும், காஜித்சிங் 7 புள்ளிகளும், அமித் ஹோடா 7 புள்ளியும், ஜஸ்விர்சிங், மன்ஜித்சில்லார் தலா 3 புள்ளியும் எடுத்தனர். பாட்னா அணியில் பிர்தீப் நார்வால் 11 புள்ளியும், மன்ஜித் 8 புள்ளியும் பெற்றனர்.

    புனே- மும்பை அணிகள் மோதிய 2-வது ஆட்டம் மிகவும் பரபரப்பாக இருந்தது. இந்த ஆட்டம் 2-2 என்ற கணக்கில் டையில் முடிந்தது.

    தமிழ் தலைவாஸ் அணி 2-வது ஆட்டத்தில் உ.பி.யோதாவை இன்று எதிர்கொள்கிறது. இரவு 9 மணிக்கு இந்த ஆட்டம் நடக்கிறது. தமிழ் தலைவாஸ் அணி உ.பி.யை வீழ்த்தி 2-வது வெற்றியை பெறுமா? என்று ஆவலுடன் எதிர்நோக்கப்படுகிறது.

    இந்த சீசனில் முற்றிலும் மாறுபட்ட அணியாக திகழும் தமிழ் தலைவாஸ் தொடக்க ஆட்டத்தில் அபாரமான திறமையை வெளிப்படுத்தியது. ரெய்டில் கேப்டன் அஜய் தாகூர், சர்ஜித்சிங் ஆகியோரை மடக்கி பிடிப்பதில் அமித் ஹூடா, மன்ஜித், தர்‌ஷன் ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.

    உ.பி. யோதா அணியில் கேப்டன் ரிஷாங்க் தேவதிகா, சாகர் கிருஷ்ணா ஆகியோர் நல்ல நிலையில் உள்ளார்.

    முன்னதாக இரவு 8 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் கிரிஷ் தலைமையிலான புனே- சுரேந்தர் நாடா தலைமையிலான அரியானா அணிகள் மோதுகின்றன. #Prokabbadi #tamilthalaivas
    Next Story
    ×