search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டிஎன்பிஎல் - திருச்சி வாரியர்ஸ் அணி வெற்றி பெற 137 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது காஞ்சி வீரன்ஸ் அணி
    X

    டிஎன்பிஎல் - திருச்சி வாரியர்ஸ் அணி வெற்றி பெற 137 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது காஞ்சி வீரன்ஸ் அணி

    தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் இன்று நடைபெற்று வரும் போட்டியில் திருச்சி வாரியர்ஸ் அணி வெற்றி பெற 137 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது காஞ்சி வீரன்ஸ் அணி. #TNPL2018 # RTWvVKV
    தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 27 - வது லீக் ஆட்டம் திருநெல்வேலியில் நடைபெற்று வருகிறது. இதில் திருச்சி வாரியர்ஸ் அணியும், காஞ்சி வீரன்ஸ் அணியும் மோதின.

    டாஸ் வென்ற காஞ்சி வீரன்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.  இதையடுத்து, அந்த அணியின் சித்தார்த், பாபா அபராஜித் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.

    ஆனால், திருச்சி வாரியர்ஸ் அணி சிறப்பாக பந்து வீசினர். இதனால் காஞ்சி வீரன்ஸ் அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது.

    காஞ்சி வீரன்ஸ் அணியில் பிரான்சிஸ் ரோகின்ஸ் மட்டும் அதிரடியாக ஆடி 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    விஷால் 25 ரன்னிலும், சித்தார்த் மற்றும் மோகித் ஹரிஹரன் ஆகியோர் தலா 17 ரன்களும் எடுத்தனர். இறுதியில், காஞ்சி வீரன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 136 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.

    திருச்சி வாரியர்ஸ் அணி சார்பில் கண்ணன் விக்னேஷ், சோனு யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    இதையடுத்து, 137 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருச்சி வாரியர்ஸ் அணி விளையாடி வருகிறது. #TNPL2018 # RTWvVKV 
    Next Story
    ×