search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்- இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் பிவி சிந்து
    X

    தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்- இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் பிவி சிந்து

    பாங்காக்கில் நடைபெற்று வரும் தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய வீராங்கனை பிவி சிந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். #PVSindhu
    தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் பாங்காக்கில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற பெண்களுக்கான அரையிறுதி ஒன்றில் இந்திய வீராங்கனை பிவி சிந்து இந்தோனேசியாவின் கிரிகோரியா மரிஸ்காவை எதிர்கொண்டார்.

    பிவி சிந்துவிற்கு கிரிகோரியா மரிஸ்கா முதல் செட்டில் கடும் நெருக்கடி கொடுத்தார். இருந்தாலும் சமாளித்து விளையாடிய பிவி சிந்து 23-21 எனக்கைப்பற்றினார். ஆனால் 2-வது செட்டை 16-21 என இழந்தார்.



    வெற்றியை தீர்மானிக்கும் 3-வது மற்றும் கடைசி செட்டில் பிவி சிந்து ஆக்ரோசத்துடன் விளையாடினார். முதல் இரண்டு செட்டில் ஈடுகொடுத்த கிரிகோரியா மரிஸ்காவால் 3-வது செட்டில் ஈடுகொடுக்க முடியவில்லை. இதனால் 21-9 என எளிதில் கைப்பற்றி பிவி சிந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

    இறுதிப் போட்டியில் ஜப்பான் வீராங்கனை நோசோமி ஒகுஹாராவை எதிர்கொள்கிறார்.
    Next Story
    ×