என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஸ்டட்கர்ட் ஓபன் டென்னிஸ் - சாம்பியன் பட்டம் வென்றார் ரோஜர் பெடரர்
Byமாலை மலர்17 Jun 2018 6:05 PM GMT (Updated: 17 Jun 2018 6:05 PM GMT)
ஜெர்மனியில் நடைபெற்ற ஸ்டட்கர்ட் ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில் மிலொஸ் ராவ்னிக்கை வீழ்த்தி ரோஜர் பெடரர் சாம்பியன் பட்டம் வென்றார். #RogerFederer #MilosRaonic #StuttgartOpen2018
ஸ்டட்கர்ட் ஓபன் டென்னிஸ் ஜெர்மனியில் கடந்த 9-ம் தேதி தொடங்கியது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் முதல்நிலை வீரரான ரோஜர் பெடரர், ஏழாம் நிலை வீரரான மிலொஸ் ராவ்னிக்கை எதிர்கொண்டார்.
இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய பெடரர் முதல் செட்டை 6-4 என கைப்பற்றினார். அடுத்த செட்டில் ராவ்னிக், பெடரரின் ஆட்டத்திற்கு ஈடுகொடுத்து விளையாடினார். இதனால் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது. இறுதியில் பெடரர் இரண்டாவது செட்டை 7-6 (7-3) என போராடி கைப்பற்றினார்.
இதன்மூலம் 6-4, 7-6(7-3) என்ற நேர் செட்களில் வெற்றி பெற்ற பெடரர் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். நேற்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் பெடரர் வெற்றி பெற்றதால் சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறினார் என்பது குறிப்பிடத்தக்கது. #RogerFederer #MilosRaonic #StuttgartOpen2018
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X