என் மலர்tooltip icon

    செய்திகள்

    காயத்திற்குப் பிறகு வலைப்பயிற்சியை தொடங்கினார் விராட் கோலி
    X

    காயத்திற்குப் பிறகு வலைப்பயிற்சியை தொடங்கினார் விராட் கோலி

    காயம் காரணமாக கவுன்ட்டி போட்டியில் இருந்து விலகிய இந்திய அணி கேப்டன் விராட் கோலி, மும்பையில் வலைப்பயிற்சி மேற்கொண்டுள்ளார். #ViratKohli
    இந்திய கிரிக்கெட் அணி கேப்டனான விராட் கோலி ஐபிஎல் தொடரில் விளையாடும்போது காயம் அடைந்தார். சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிரான ஆட்டத்தின்போது கழுத்துப் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனால் கவுன்ட்டி போட்டியில் சர்ரே அணிக்காக விளையாட இருந்ததில் இருந்து விலகினார்.

    தற்போது காயத்தில் இருந்து குணமாகி வருகிறார். ஜூன் 15-ந்தேதிக்குள் உடற்தகுதியை நிரூபிக்க வேண்டும் என்று பிசிசிஐ கூறியது.



    இந்நிலையில் நேற்ற மும்பையில் உள்ள பந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸ் பெசிலிடியில் உள்ள உள்விளையாட்டு அரங்கில் பயிற்சி மேற்கொண்டார். தற்போது இலேசான பயிற்சியை மேற்கொண்டுள்ளார். இன்னும் இரண்டு மூன்று நாட்கள் கழித்து மைதானத்தில் பயிற்சி மேற்கொள்வார்.

    இரண்டு வார பயிற்சிக்குப்பின் பெங்களூருவில் உள்ள கிரிக்கெட் தேசிய அகாடமியில் உடற்தகுதியை நிரூபிப்பார். அதன்பின் இங்கிலாந்து தொடருக்கான பயிற்சியை மேற்கொள்வார் என்று கூறப்படுகிறது.
    Next Story
    ×