search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லி அணி இன்னும் அதிக ரன்கள் அடித்திருக்க வேண்டும்- ஜோக்கிற்காக கூறிய தவான்
    X

    டெல்லி அணி இன்னும் அதிக ரன்கள் அடித்திருக்க வேண்டும்- ஜோக்கிற்காக கூறிய தவான்

    டெல்லிக்கு எதிராக 92 ரன்கள் எடுத்த தவான், நான் சதம் அடிக்க டெல்லி அணி இன்னும் அதிக ரன்கள் அடித்திருக்க வேண்டும் என ஜோக்கிற்காக கூறினார். #IPL2018 #SRH
    ஐபிஎல் தொடரில் நேற்று டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த டெல்லி டேர்டெவில்ஸ் 5 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் குவித்தது.

    பின்னர் 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி தவான் (92), கேன் வில்லியம்சன் (83) ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் 18.5 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ஷிகர் தவான் 50 பந்தில் 9 பவுண்டரி, 4 சிக்சருடன் 92 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். அவருடன் விளையாடிய கேப்டன் கேன் வில்லியம்சன் 53 பந்தில் 8 பவுண்டரி, 2 சிக்சருடன் 83 ரன்கள் சேர்த்தார்.

    92 ரன்கள் அடித்த தவான் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 8 ரன்னில் சதம் வீணாகிவிட்டதே என்று கேட்டதற்கு, நகைச்சுவையாக, அதற்கு டெல்லி டேர்டெவில்ஸ் இன்னும் அதிக ரன்கள் அடித்திருக்க வேண்டும் என்று கூறினார்.



    இதுகுறித்து தவான் கூறுகையில் ‘‘டெல்லி டேர்டெவில்ஸ் இன்னும் கூடுதலாக ரன்கள் அடித்திருந்தால், செஞ்சூரி அடித்திருக்க முடியும் (நகைச்சுவையாக). செஞ்சூரி வரும்போது, அந்த வந்தே தீரும்.

    காயம் அடைந்து, மீண்டும் அணிக்கு திரும்பியபோது என்னால் ரன்கள் அடிக்க முடியவில்லை. என்னுடைய நம்பிக்கை எப்போதும் வலுவானதாகவே இருக்கும். கோட்லா மைதானத்தில் நான் ஏராளமான போட்டிகளில் விளையாடியுள்ளேன். இது ஒரு பிளாட் ஆடுகளத்துடன், சிறிய மைதானம். என்னுடைய அட்டக் ஆட்டத்தில் நான் நம்பிக்கை வைத்திருந்தேன். நான் என்மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளேன் என்பதை எனக்கு நானே எப்போதும் சொல்லிக் கொள்வேன்’’ என்றார்.
    Next Story
    ×