என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மோசமான ஆட்டம்- ராஜஸ்தான் ராயல்ஸ் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டார் வார்னே
Byமாலை மலர்21 April 2018 10:48 AM GMT (Updated: 21 April 2018 10:48 AM GMT)
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிராக 140 ரன்னில் சுருண்டு மோசமான தோல்வியை சந்தித்ததால் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார் வார்னே. #RR
ஐபிஎல் தொடரின் 17-வது ஆட்டம் நேற்று புனேவில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சு தேர்வு செய்தது. வாட்சனின் அபார சதத்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் 5 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்கள் குவித்தது. பின்னர் 205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் களம் இறங்கியது. அந்த அணி 18.3 ஓவரில் 140 ரன்களில் சுருண்டு 64 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இந்த போட்டிக்கு முன்பு கொல்கத்தா அணியிடம் தோல்வியடைந்தது. நேற்றைய தோல்வியின் மூலம் தொடர்ச்சியாக இரண்டு தோல்வியை சந்தித்துள்ளது. புள்ளிகள் பட்டியலில் 5 போட்டிகளில் மூன்றில் தோல்வியடைந்து 4 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளது.
மோசமான தோல்விக்காக அந்த அணியின் தலைமை பயிற்சியாளரும், ஆலோசகரும் ஆன ஷேன் வார்னே ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
இதுகுறித்து ஷேன் வார்னர் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் மூன்று வகையிலும் (பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங்) மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்காக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். வீரர்கள் நம்பிக்கையை இழக்கவில்லை. முயற்சி செய்து சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள்.
நாங்கள் சரியான நிலைக்கு திரும்புவோம். அடுத்த இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றால், முதல் பாதி சீசனில் 4 வெற்றி, 3 தோல்வி என்ற நிலை ஏற்படும், இரண்டு வெற்றி, ஐந்து தோல்வி என்றால் அது சரியானது அல்ல’’ என்று பதவிட்டுள்ளார்.
இந்த போட்டிக்கு முன்பு கொல்கத்தா அணியிடம் தோல்வியடைந்தது. நேற்றைய தோல்வியின் மூலம் தொடர்ச்சியாக இரண்டு தோல்வியை சந்தித்துள்ளது. புள்ளிகள் பட்டியலில் 5 போட்டிகளில் மூன்றில் தோல்வியடைந்து 4 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளது.
மோசமான தோல்விக்காக அந்த அணியின் தலைமை பயிற்சியாளரும், ஆலோசகரும் ஆன ஷேன் வார்னே ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
இதுகுறித்து ஷேன் வார்னர் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் மூன்று வகையிலும் (பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங்) மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்காக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். வீரர்கள் நம்பிக்கையை இழக்கவில்லை. முயற்சி செய்து சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள்.
நாங்கள் சரியான நிலைக்கு திரும்புவோம். அடுத்த இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றால், முதல் பாதி சீசனில் 4 வெற்றி, 3 தோல்வி என்ற நிலை ஏற்படும், இரண்டு வெற்றி, ஐந்து தோல்வி என்றால் அது சரியானது அல்ல’’ என்று பதவிட்டுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X