என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வங்காள தேச வீரர்கள் அணியாக போராடும் உத்வேகம் படைத்தவர்கள்- தினேஷ் கார்த்திக்
Byமாலை மலர்17 March 2018 3:00 PM GMT (Updated: 17 March 2018 3:00 PM GMT)
வங்காள தேச வீரர்கள் அணியாக போராடும் உத்வேகம் படைத்தவர்கள் என்று இந்திய அணி விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். #nidahasTrophy #INDvBAN
இலங்கையில் இந்தியா, வங்காள தேசம், இலங்கை அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் நிதாஹாஸ் என்ற பெயரில் நடைபெற்று வருகிறது. லீக் போட்டிகள் அடிப்படையில் இந்தியா மூன்று வெற்றிகளுடனும், வங்காள தேசம் இரண்டு வெற்றிகளுடனும் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
இறுதிப் போட்டி நாளை இரவு 7 மணிக்கு கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடைபெறுகிறது. வங்காள தேச அணி இதுவரை டி20 கிரிக்கெட்டில் இந்தியாவை வீழ்த்தியது கிடையாது. நாளையும் இந்த சாதனை தொடரும் என்ற நம்பிக்கையில் இந்திய ரசிகர்கள் இருக்கும் நிலையில், வங்காள தேச அணியை எளிதாக எடுத்துக் கொள்ளமாட்டோம் என்று இந்திய அணி விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.
இதுகுறித்து தினேஷ் கார்த்திக் கூறுகையில் ‘‘வங்காள தேச வீரர்கள் ஒரு அணியாக போராடும் உத்வேகம் உடையவர்கள். அவர்கள் கடின முயற்சியை மேற்கொள்வார்கள். அவர்கள் நீண்ட காலத்திற்கு முன்பு டெஸ்ட் அந்தஸ்து பெறவில்லை. குறுகிய காலத்திற்குள் அனைத்து வகை கிரிக்கெட்டிலும் முன்னேறியுள்ளனர்.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் வங்காள தேச வீரர்கள், துணைக் கண்டத்தில் அபாரமான ஆடக்கூடியவர்கள். அவர்கள் சிறந்த அணி. நாங்கள் எங்களுடைய வழக்கமான பணிகள் மீது கவனம் செலுத்த முயற்சி செய்து வருகின்றோம். தற்போதுவரை இதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது’’ என்றார்.
இறுதிப் போட்டி நாளை இரவு 7 மணிக்கு கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடைபெறுகிறது. வங்காள தேச அணி இதுவரை டி20 கிரிக்கெட்டில் இந்தியாவை வீழ்த்தியது கிடையாது. நாளையும் இந்த சாதனை தொடரும் என்ற நம்பிக்கையில் இந்திய ரசிகர்கள் இருக்கும் நிலையில், வங்காள தேச அணியை எளிதாக எடுத்துக் கொள்ளமாட்டோம் என்று இந்திய அணி விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.
இதுகுறித்து தினேஷ் கார்த்திக் கூறுகையில் ‘‘வங்காள தேச வீரர்கள் ஒரு அணியாக போராடும் உத்வேகம் உடையவர்கள். அவர்கள் கடின முயற்சியை மேற்கொள்வார்கள். அவர்கள் நீண்ட காலத்திற்கு முன்பு டெஸ்ட் அந்தஸ்து பெறவில்லை. குறுகிய காலத்திற்குள் அனைத்து வகை கிரிக்கெட்டிலும் முன்னேறியுள்ளனர்.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் வங்காள தேச வீரர்கள், துணைக் கண்டத்தில் அபாரமான ஆடக்கூடியவர்கள். அவர்கள் சிறந்த அணி. நாங்கள் எங்களுடைய வழக்கமான பணிகள் மீது கவனம் செலுத்த முயற்சி செய்து வருகின்றோம். தற்போதுவரை இதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X