என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அடுத்த 5 ஆண்டுக்கு ஐ.பி.எல். ஒளிபரப்பு உரிமம் மூலம் ரூ.14 ஆயிரம் கோடி கிடைக்கும்
Byமாலை மலர்31 Aug 2017 10:19 AM GMT (Updated: 31 Aug 2017 10:19 AM GMT)
அடுத்த 5 ஆண்டுக்கு ஐ.பி.எல். ஒளிபரப்பு உரிமம் மூலம் ரூ12 ஆயிரம் முதல் ரூ.14 ஆயிரம் கோடி வரை கிடைக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
மும்பை:
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.
இதுவரை 10 சிசன் முடிந்துவிட்டது. இந்த 10-வது சீசன் வரை ஐ.பி.எல். போட்டிக்கான ஒளிபரப்பும் உரிமையை சோனி நிறுவனம் பெற்று இருந்தது.
இதையடுத்து அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஐ.பி.எல். தொடரை ஒளிபரப்பும் உரிமத்துக்கான ஏலம் செப்டம்பர் 4-ந்தேதி நடக்கிறது. முன்னதாக இந்த ஏலம் கடந்த 28-ந்தேதி நடைபெற இருந்தது. சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கால் தாமதம் ஆனது. சுப்ரீம் கோர்ட்டு ஏலத்தை நடத்த அனுமதி அளித்ததை தொடர்ந்து 4-ந்தேதி நடைபெறுகிறது.
ஐ.பி.எல். ஏலத்துக்கான போட்டியில் 20-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஐ.பி.எல். ஒளிபரப்பு உரிமம் மூலம் ரூ12 ஆயிரம் முதல் ரூ.14 ஆயிரம் கோடி வரை கிடைக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே ஐ.பி.எல். டைடில் ஸ்பான்சர் மூலம் கிரிக்கெட் வாரியம் ரூ.2,199 கோடி பெற்று இருந்தது.
ஐ.பி.எல். போட்டியில் விளையாடும் 8 அணிகளிடம் ஒப்பந்தம் இந்த ஆண்டுடன் முடிகிறது. இதனால் ஒவ்வொரு அணியுடன் அடுத்த ஆண்டுக்கு ரூ.150 கோடி வரை கொடுக்க வேண்டி இருக்கும் என்று தெரிகிறது.
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.
இதுவரை 10 சிசன் முடிந்துவிட்டது. இந்த 10-வது சீசன் வரை ஐ.பி.எல். போட்டிக்கான ஒளிபரப்பும் உரிமையை சோனி நிறுவனம் பெற்று இருந்தது.
இதையடுத்து அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஐ.பி.எல். தொடரை ஒளிபரப்பும் உரிமத்துக்கான ஏலம் செப்டம்பர் 4-ந்தேதி நடக்கிறது. முன்னதாக இந்த ஏலம் கடந்த 28-ந்தேதி நடைபெற இருந்தது. சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கால் தாமதம் ஆனது. சுப்ரீம் கோர்ட்டு ஏலத்தை நடத்த அனுமதி அளித்ததை தொடர்ந்து 4-ந்தேதி நடைபெறுகிறது.
ஐ.பி.எல். ஏலத்துக்கான போட்டியில் 20-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஐ.பி.எல். ஒளிபரப்பு உரிமம் மூலம் ரூ12 ஆயிரம் முதல் ரூ.14 ஆயிரம் கோடி வரை கிடைக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே ஐ.பி.எல். டைடில் ஸ்பான்சர் மூலம் கிரிக்கெட் வாரியம் ரூ.2,199 கோடி பெற்று இருந்தது.
ஐ.பி.எல். போட்டியில் விளையாடும் 8 அணிகளிடம் ஒப்பந்தம் இந்த ஆண்டுடன் முடிகிறது. இதனால் ஒவ்வொரு அணியுடன் அடுத்த ஆண்டுக்கு ரூ.150 கோடி வரை கொடுக்க வேண்டி இருக்கும் என்று தெரிகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X