என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்
- லட்சியத்துடன் வாழ்க்கை பயணத்தை நடத்துபவர்கள்.
- பிறருக்கு உதவி செய்யும் தன்மை நிறைந்தவர்கள்.
27 நட்சத்திரங்களில் முதல் நட்சத்திரம் அஸ்வினியாகும். இந்த நட்சத்திரம் மேஷ ராசியில் அமைந்துள்ளது. அஸ்வினி என்ற பெயர் அஸ்வம் என்ற சொல்லில் இருந்து உருவானது. சமஸ்கிருதத்தில் அஸ்வம் என்றால் குதிரை என்று பெயர். வானில் குதிரை தலை போல் காட்சியளிப்பதால் இதற்கு அஸ்வினி என்று பெயர் வைக்கப்பட்டது. இதன் தமிழ் பெயர் புரவி. இதன் அதிபதி கேதுவாகும். இதில் உச்சமடையும் கிரகம் சூரியனாகும். மனித உடலில் தலை பாகத்தையும் மூளையையும் ஆளுமை செய்யும் நட்சத்திரம்.
இது கேதுவின் ஆதிக்கத்திற்குரிய நட்சத்திரம் என்பதால் இதில் பிறந்தவர்கள் எடுத்த காரியத்தை சிறப்பாகச் செய்து முடிக்கும். வல்லமை மனோதிடம் உள்ளவர்கள்.
நியாய, தர்மத்திற்கு கட்டுப்பட்டவர்கள். உண்மைக்குப் புறம்பாக பேசமாட்டார்கள். முன்கோபத்தால் உற்றார் உறவினர்களைப் பகைத்துக் கொள்வார்கள். லட்சியத்துடன் வாழ்க்கை பயணத்தை நடத்துபவர்கள். பிறருக்கு உதவி செய்யும் தன்மை நிறைந்தவர்கள்.
நல்ல சுறுசுறுப்பும், துடிப்புடன் செயல்படும் குணத்தைப் பெற்றிருப்பவர்கள். மிகப்பெரிய சாதனைகளை நிகழ்த்திக் காட்ட வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்கள். எந்த விஷயமாக இருந்தாலும் எளிதாக புரிந்து கொண்டு முடிவுகளை உடனுக்குடன் எடுப்பதில் வல்லவர்களாக இருப்பார்கள். எதிரிகளை சமாளிப்பதில் கைதேர்ந்தவர்களாக இருப்பார்கள். எதையும் ஆராய்ந்து தீர்க்கமாக முடிவெடுப்பார்கள். எந்த கடினமான சூழலிலும் பொறுமையையும், தெய்வ பக்தியையும் கைவிடமாட்டார்கள். பாரம்பரியமான விஷயங்களை விரும்புபவராக இருந்தாலும் கூட நவீனத்திற்கும் முக்கியத்துவம் அளிப்பார்கள். மன உறுதியும், உடல் வலிமையும் கொண்டவர்கள். இவர்களின் கண்களில் எப்போதும் பிறரை ஈர்க்கும் கவர்ச்சி இருக்கும். எடுத்த காரியத்தை சிறப்பாக முடிப்பதில் வல்லவர்கள். சுயகவுரவத்தை ஒரு போதும் விட்டுக் கொடுக்காதவர்கள். எந்த விஷயத்தையும் நன்கு ஆராய்ந்த பிறகே ஏற்றுக் கொள்வார்கள். நண்பர்கள் குறைவாக இருப்பார்கள். பல மொழி பேசுவதில் வல்லவர்களாக இருப்பார்கள். நுட்ப அறிவு மற்றும் அதிர்ஷ்டம் நிரம்பியவர்கள். பூர்வீகச் சொத்து கிடைக்கும். குல தெய்வ அனுகிரகம் இருக்கும்.
அசுவினி நட்சத்திரத்தின் அதிதேவதை சரஸ்வதி என்பதால் மிகச்சிறந்த உயர் கல்வி கற்கும் யோகத்தைப் பெற்றவர்களாக இருப்பார்கள். எந்தத் துறையாக இருந்தாலும் அதில் ஞானம் பெற்றிருப்பார்கள். கலையில் ஆர்வம் உள்ளவர்களாக இருப்பார்கள். மருத்துவம். கணிதம், வானவியல், ஜோதிடம் அமானுஷ்யம், மந்திர தந்திரங்களில் ஆர்வம் உள்ளவராகவும் இருப்பார்கள்.
எந்த தொழில் செய்தாலும் அதில் நேர்மையையும், கண்ணியத்தையும் கடைப்பிடிப்பார்கள். எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பார்கள். எதிலும் வேகமாக செயல்பட எண்ணுபவர்கள்போலீஸ், ராணுவம், மருத்துவம், அறுவை சிகிச்சை மருத்துவம், தீயணைப்பு, மாந்திரீகம், ஆராய்ச்சி, ஜோதிடம், விஞ்ஞானம், வானியல், வங்கி, ரசாயனம், மருந்து, மின்சாரம், ரியல் எஸ்டேட், கட்டிடக்கலை போன்ற துறைகளில் ஈடுபடக் கூடியவர்கள்.
ஐ.ஆனந்தி
பொருளாதாரத்தில் தன் நிறைவு உண்டு. வெளியூர், வெளிநாட்டிற்கு சென்று பொருள் திரட்டும் வல்லமை நிரம்பியவர்கள். சொல்லாலும் செயலாலும் ஒன்று படக் கூடியவர்கள். தந்தை வழி குலத்தொழில் மூலம் ஆதாயம் உள்ளவர்கள். அரசாங்க உயர் பதவியை அடைய விரும்புபவர்கள். அரசியல் செல்வாக்கு உள்ளவர்கள். தொழில் உத்தியோகத்தின் மூலம் நிலையான நிரந்தரமான பெயர், புகழ், அந்தஸ்து உண்டு. ராசி அதிபதி செவ்வாயும், தனம் வாக்கு குடும்ப ஸ்தான அதிபதி சுக்ரனும் பலம் பெற்றால் காதல் திருமணம் நடக்கும். சுக்ரன் பலம் குறைந்தால் பெற்றோர்கள் பார்த்து செய்து வைக்கும் திருமணம் கைகூடும். வாழ்க்கைத் துணைவியிடமும், பிள்ளைகளிடமும் பாசமாக இருப்பார்கள். அவர்கள் தன்னைப் போலவே நீதி, நேர்மை தவறாமல் இருக்க வேண்டும் என்று எண்ணுவார்கள். பெரிய நோய்கள் அண்டாது. எப்போதும் நல்ல ஆரோக்கியத்துடன் விளங்குவார்கள். நீண்ட ஆயுளைப் பெற்றிருப்பார்கள். பூமி, மனை, வீடு, வாகனம் யாவும் வாங்கும் யோகம் இவர்களுக்கு கிடைக்கும்.
கேது தசா: அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கேது தசா முதலில் வரும். கேது தசா மொத்தம் 7 ஆண்டுகள். செல் இருப்பு நீக்கி பிறந்த நேரத்தைக் கணக்கிட்டு கேது தசா எத்தனை ஆண்டுகள் நீடிக்கும் என்பதை அறியலாம். குழந்தை பருவ ஜென்ம கேது தசா என்பதால் தாய் மற்றும் குழந்தையின் உடல் ஆரோக்கியம் அடிக்கடி பாதிக்கப்படும். சோம்பல் காரணமாக கல்வியில் மந்தம்
சுக்கிர தசா: இரண்டாவது தசையாக வரும். சுக்கிர தசை மொத்தம் 20 ஆண்டுகள் நீடிக்கும். சுக்ரன் சம்பத்து தாரையின் நட்சத்திரம் என்பதால் சுக்ரன் கேந்திர திரிகோணங்களில் அமைந்தோ, ஆட்சி உச்சம் பெற்று சுபர் பார்வையுடன் அமைந்தோ இருந்தால் மேன்மையான பலன்கள் உண்டு. ஆரோக்கியமான மற்றும் ஆடம்பரமான வாழ்க்கையை தரும். வாழ்க்கைத் தரம் உயரும்.
சூரிய தசா: சூரிய தசை 6 ஆண்டுகள் மட்டுமே நடக்கும் சிறிய தசையாகும். மூன்றாவது தசாவான சூரிய தசை விபத்து தாரையின் தசை என்பதால் சுமாரான முன்னேற்றத்தை மட்டுமே தரும். புதிய ஒப்பந்தங்கள், டாக்குமென்ட் சம்பந்தப்பட்ட விஷயங்கள், ஜாமீன், கடன் போன்றவற்றை எதிர்த்து நீந்த வேண்டியிருக்கும். இது மன உளைச்சல் மற்றும் பிரச்சனைகளை கொடுக்கும், உஷ்ண சம்பந்தமான உடல்நலக் குறைபாடுகள் ஏற்படும்.
சந்திர தசா: நான்காவது தசா வரும் சந்திர தசை காலங்கள் 10 ஆண்டுகள் ஆகும். சேஷம தாரையின் நட்சத்திரம் என்பதால் இந்த காலத்தில் வீடு, வாகன யோகம் தொழில், உத்தியோக முன்னேற்றம் சிறப்பாக இருக்கும்.
தாய், தாய் வழி உறவுகளின் ஆதரவும், ஆசியும் உண்டு. வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தையும் வளத்தையும் தரும்.
செவ்வாய் தசா: ஐந்தாம் தசாவாக வரும் செவ்வாய் தசை மொத்தம் 7 ஆண்டுகள் நீடிக்கும். பிரத்தியத் தாரையின் நட்சத்திரம் என்பதால் உடல் நிலையில், மன நிலையில் சிறுசிறு பாதிப்புகள் இருக்கும்.
செவ்வாய் பலம் பெற்று சிறந்த பார்வையுடன் இருந்தால் பொருளாதார மேன்மையும், யோகமும் உண்டாகும். நிலம் வாங்கும் யோகத்தையும், நல்ல சுக வாழ்க்கையையும் பெறுவார்கள்.
ராகு தசா: 6ம் தசையாக வரும் ராகு தசை சாதக தாரையின் நட்சத்திரம். மொத்தம் 18 வருட தசையில் ராகு சுபர் பார்வையுடன் சுபர் வீட்டில் வலுவாக அமைந்திருந்தால் வாழ்க்கையில் பல்வேறு முன்னேற்றங்கள் வசதி வாய்ப்புகளைப் பெறலாம்.
குரு தசா: 7-வது தசையாக வரும் குரு 16 ஆண்டுகள் தசை நடத்துவார். இது வதை தாரையின் நட்சத்திர தசை என்பதால் ஆரோக்கிய கேடு, வயோதிகம் காரணமாக வாழ்க்கையில் பல போராட்டங்களை சந்திக்க வேண்டியிருக்கும். குரு தசை முடியும் போது 80 வயதை கடந்து விடுவார்கள். கேதுவின் நட்சத்தி ரத்தில் பிறந்தவர்களுக்கு சனி, புதன் தசைகள் வரும் வாய்ப்புகள் குறைவு.
அஸ்வினி நட்சத்திரத்தின் சிறப்பு அம்சங்கள்:
இந்த நட்சத்திரத்தின் அதி தேவதை சரஸ்வதி. சமநோக்கு நட்சத்திரம். இதன் அதிபதி கேது ஞான காரகன் என்பதால் ஆலய வழிபாடு மற்றும் சாஸ்திர பயிற்சியில் ஈடுபடுவதற்கும் ஏற்ற நட்சத்திரமாகும். அன்று தங்கம், வெள்ளி, வைரம், போன்ற ஆபரணங்கள் வாங்க லாம். இந்த நட்சத்திரம் மனித உடலில் தலைப் பகுதியை குறிக்கும் செவ்வாயின் மேஷ ராசியில் தலைமுடியைக் குறிக்கும் காரக கிரகமான கேதுவின் நட்சத்திரத்தில் இருப்பதால் மொட்டை அடித்துக் கொள்பவர்கள் இந்த நட்சத்திரத்தில் அடித்துக் கொள்வது சிறப்பு. குறிப்பாக பிறந்த குழந்தைகளுக்கு மொட்டை அடிக்க, அரைஞான் கயிறு கட்ட, பூணூல் போட திருமணத்திற்கு உகந்த நட்சத்திரமாகும். வண்டி, வாகனம், ஆடு, மாடு கால்நடைகள் வாங்க, மாட்டு வண்டி வாங்க, வயல்களை உழுவதற்கும், மரம் நடுவதற்கும் ஏற்ற நட்சத்திரம் ஆகும். இந்த நட்சத்திரம் நடப்பில் உள்ள நாளில் சிவபெருமானை வணங்கிவிட்டு அரசு சம்பந்தமான காரியங்களில் முயற்சி செய்தால் நிச்சயம் வெற்றி உண்டாகும். அரசாங்கத்தில் உயர் பதவியை அடைய விரும்புபவர்கள் அரசியல் செல்வாக்கு பெற விரும்புபவர்கள் பெயர் புகழ் அடைய விரும்புபவர்கள் தொடர்ந்து ஆறு மாத காலம் அஸ்வினி நட்சத்திரம் வரும் நாளில் திருவண்ணாமலை சென்று அங்குள்ள அருணாசலேஸ்வரரை வழிபட்டு வந்தால் நினைத்த பதவியை அடையலாம். இவர்கள் மஞ்சள், சாதம்,பொன் தானம், செய்வது மிகச் சிறப்பு.
நட்சத்திர பட்சி: . இராஜாளி
யோகம் : விஸ்கம்பம்.
நவரத்தினம் : வைடூரியம்
உடல் உறுப்பு : மேல் பாதம்
திசை: கிழக்கு
பஞ்ச பூதம் : நிலம்
அதி தேவதை : விநாயகர், சரஸ்வதி
நட்சத்திர மிருகம் : ஆண் குதிரை
நட்சத்திர விருட்சம் : எட்டி
நட்சத்திர வடிவம்: குதிரை தலை
அதிர்ஷ்ட நிறம் சிவப்பு.
அஸ்வினிக்கு நன்மை தரும் நட்சத்திர தாரைகள்.
சம்பத்து தாரை : பரணி, பூரம், பூராடம்
சேம தாரை: ரோகிணி, ஹஸ்தம், திருவோணம்.
சாதக தாரை : திருவாதிரை, சுவாதி, சதயம்.
பரம மித்ர தாரை: ஆயில்யம், கேட்டை, ரேவதி.
பொதுவான பரிகாரங்கள்
இது கேதுவின் நட்சத்திரம் என்பதால் தினமும் எமகண்டத்தில் விநாயகர் வழிபாடு செய்ய மேன்மையான பலன்கள் உண்டு.
தினமும் பச்சை கிளிகளுக்கு தானியம் வழங்கிட பொருளாதா ரத்தில் தன்னிறைவு உண்டாகும். ஜென்ம நட்சத்திர நாளில் ஊர வைத்த கொள்ளு அல்லது கோது மையை குதிரைகளுக்கு வழங்க வாழ்க்கை வளமாகும். ஜென்ம நட்சத்திர நாளில் குல தெய்வ வழிபாட்டை தவறாமல் கடைபிடிப்பதுடன், முன்னோர்களின் நல்லாசியை பெற வேண்டும். இவர்களின் சாதக தாரையான 6 வது நட்சத்திரமான திருவாதிரை நாளில் நடராஜரை வழிபட வாழ்வில் வெற்றி பெற முடியும்.
செல்: 98652 20406






