search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    பெண்களுக்கு ஏற்படும் தோஷங்கள்
    X

    பெண்களுக்கு ஏற்படும் தோஷங்கள்

    • நவராத்திரி விழாவில் கலகம் செய்தவர்களுக்கும்.
    • கண்பார்வை தோஷம் விலக சில பரிகாரங்கள் உள்ளது.

    கண்டதோஷம் ஒருவரது ஜாதகத்தில் லக்னத்துக்கு 8-ல் புதன் வருமேயானால் அவருக்கு தண்ணீரில் கண்டம் உண்டு என்று அர்த்தம். லக்னத்துக்கு 8-ல் உள்ள புதன் தசை அல்லது புதன் புக்தி வரும் நேரங்களில் ஜாதகருக்குத் தண்ணீரில் கண்டம் ஏற்பட்டு ஆயுளையும் எடுத்து விடும். ஒரு புதன்கிழமையில் 50 கிராம் வெந்தயம் எடுத்து ஊற வைத்து அரைத்துக்கொள்ள வேண்டும்.

    அதனை ஒரு வெண்கலக் கிண்ணத்தில் வைத்து பூஜை அறையில் வைக்க வேண்டும். தொடர்ந்து ஒன்பது நாட்களுக்கு தினசரி காலையில் அந்த வெந்தயத்திற்கு சாம்பிராணி தூபம் காட்ட வேண்டும். அந்த வேளையில் புதன் பகவானால் ஏற்படவுள்ள தண்ணீர் கண்டம் விலக வேண்டும் என்று 108 முறை ஜெபிக்க வேண்டும். 10-வது நாள் காலையில் யாருக்காக பூஜை செய்யப்பட்டதோ அவருக்கு வெந்தயத்தை திருஷ்டி சுற்றி, பின்னர் அதை கண்மாயில் அல்லது குளத்தில் வெண்கலக் கிண்ணத்தோடு போட்டுவிட வேண்டும்.

    இந்த பரிகாரத்தை செய்து விட்டால் ஒருவருக்கு தண்ணீரில் வரவுள்ள கண்டம் விலகும். அதிகமாக மதுவுக்கு அடிமையான வருக்கு மேற்சொன்ன முதல் பரிகாரத்தைச் செய்வதோடு வெண் கலக்கிண்ணத்தில் உள்ளதில் பாதி வெந்தயத்தை எடுத்து அவரது உடம்பில் தடவிக் குளிக்கச் செய்ய வேண்டும் மீதியை தண்ணீரில் போட்டுவிட வேண்டும். இதனால் மது குடிக்கும் தோஷம் விலகும்.

    ஜாதகத்தில் சூரியன் லக்னத்துக்கு 8-ல் வந்தால் கண் பார்வை இளம் வயதிலேயே பாதிக்கப்பட்டு விடும். நவராத்திரி விழாவில் கலகம் செய்தவர்களுக்கும். அம்மன் கோவில்களில் நடைபெற்ற குடமுழுக்கு நீராட்டு விழாவில் கலகம் செய்தவர்களுக்கும் கண்பார்வை திடீரென மங்கி விடும் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது. இத்தகைய கண்பார்வை தோஷம் விலக சில பரிகாரங்கள் உள்ளது."

    தொடர்ந்து ஒன்பது வெள்ளிக்கிழமைகள் பைரவருக்கு வில்வ மாலை அல்லது செவ்வரளி மாலை போட்டு,நெய் விளக்கு ஏற்றி வந்தால் கண்பார்வைக் கோளாறு நீங்கி பார்வை வந்து விடும். தோஷம் நீங்க ஆலயத்துக்குச் சென்று பைரவரை வழிபட முடியாதவர்கள் தொடர்ந்து ஒன்பது வெள்ளிக்கிழமைகளில், உங்கள் பகுதியில் உள்ள ஏழை மூதாட்டிகள் ஐந்து பேருக்கு அன்னதானம் கொடுத்தால் கண் பார்வைக் கோளாறு நீங்கி தோஷம் விலகும்.

    குடும்பத்தில் யாராவது மிருகசீரிஷம், சித்திரை, விசாகம். உத்திராடம் ஆகிய நட்சத்திரத்தில் இறந்தால் அது இறப்பு தோஷம் என்று கூறப்படுகிறது. இத்தகைய தோஷம் ஏற்பட்டால், மரணம் நிகழ்ந்த வீட்டை 2 மாதங்கள் வரை மூடி வைக்க வேண்டும். கிருத்திகை. உத்திரத்தில் இறந்தால் நான்கு மாதங்களும், அவிட்டம், புனர்பூசம் ஆகிய நட்சத்திரத்தில் இறந்தால் ஆறு மாதங்களும் வீட்டை மூடிவைக்க வேண்டும்.


    இவை சாத்தியம் இல்லாத பட்சத்தில் பரிகாரம் ஒன்று உள்ளது. மேற்கண்ட காலகட்டங்கள் வரையோ அல்லது 48 நாட்களுக்கு மாலை 5.30 மணி முதல் பொழுது விடியும் வரை இறப்பு நிகழ்ந்த வீட்டில் விளக்கு எரிய வேண்டும். உயிர் நீங்கிய இடத்தில் நல்லெண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும். 48 நாட்களின் முடிவில் இரவு 11 மணிக்கு மேல் நவக்கிரக ஹோமம் செய்து ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் விட்டு யாருக்காவது தானம் தரவேண்டும். இதனால் இறப்பு தோஷம் முழுமையாக கழிந்து விடும்.

    பெண்களுக்கு தொடு தோஷம், காழ்ப்பு தோஷம், தீட்டு தோஷம் போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது. இத்தோஷங்கள் நீங்க பெண்கள் கண்ணாடி வளையல்கள் 21" வாங்கி அவற்றை சுடு நீரில் போட்டு எடுத்து பின்னர் மஞ்சள் கலந்த நீரில் நனைத்து ஆடிப் பூரத்தன்று அம்மன் சன்னதியில் கட்டி தொங்க விட வேண்டும். இவ்வாறு செய்வதால் பெண்களுக்கு உண்டாகும் மூன்று விதமான தோஷங்கள் நீங்கும். கணவன்- மனைவிக்கிடையே சண்டை ஏற்பட்டு பிரிந்து வாழ்வதும் கூட ஒரு வகை தோஷம்தான் இந்த தோஷம் நீங்க 3 பரிகாரம் உள்ளது.

    கணவனைப்பிரிந்து வாழும் மனைவி, தன் கணவன் பயன்படுத்திய ஒரு துணியை எடுத்துக் கொண்டு, அதில் 27 கொண்டைக் கடலையை வைத்து முடிந்து அதனை தான் பயன்படுத்தும் தலையணைக்குள் கீழ் வைத்து உறங்க வேண்டும்.

    27 நாட்களுக்கு பிறகு காலை அதனை உள்ளங்கையில் வைத்துக் கொண்டு பிரிந்து சென்ற என் கணவரை கொண்டு வந்து சேர் குருபகவானே! என்று 108 முறை சொல்ல வேண்டும். பின்பு அதனைத் தண்ணீரில் போட்டு விட வேண்டும். இவ்வாறு செய்தால் பிரிந்து சென்ற கணவர் திரும்பி வந்து விடுவார். மனைவியைப் பிரிந்து வாழும் கணவன் தங்கள் பகுதியில் அமைந்துள்ள சிவன் கோவிலில் இரண்டு இரண்டு பாம்புகள் இணைந்த நிலையில் உள்ள சிலையை வணங்கி வர, பிரிந்து சென்ற மனைவி உங்களுடன் மீண்டும் வந்து சேர்ந்து வாழ்வார்.

    செய்வினை காரணமாக தொழிலில் நஷ்டம், வறுமை, பிள்ளைகள் கல்வி மந்தம், கடன் தொல்லை போன்றவை ஏற்படலாம். செய்வினை பாதிப்புக்கு குல தெய்வக் குற்ற மும் காரணமாக இருக்கலாம். செல்வம் வரும் போது குல தெய்வத்தை மறந்து விடுவதே இதற்குக் காரணம் எனவே குடும்பத்தோடு குல தெய்வத்தை மூன்று பவுர்ணமிக்கு நேரில் சென்று வழிபட்டு வந்தால் ஒருவர் செய்த செய்வினை உங்களை பாதிக்காது.


    ஒரு சனிக் கிழமையில் உங்கள் பகுதியில் அமைந்துள்ள சிவன் கோவிலுக்குச் சென்று அங்குள்ள நவகிரகங்களுக்கு தேங்காய்-9. நாட்டு வாழைப்பழகம்- 18, கொட்டைப்பாக்கு-18, வெற்றிலை -18, கதம்பப்பூ- ஒன்பது முழம். பூஜைப் பொருட்களைக் கொண்டு வழிபாடு செய்தால், உங்களுக்குக் கெடுதல் செய்ய வைக்கப்பட்ட செய்வினை நீங்கும். செய்வினை தோஷத்தை விரட்டும் மற்றொரு பரிகாரம் வருமாறு:-

    முதலில் குலதெய்வத்துக்குக் காணிக்கை எடுத்து வைக்க வேண்டும். 27 எலுமிச்சைப் பழம் எடுத்து, அதனைச் சாறுபிழிந்து ஒரு பாத்திரத்தில் எடுக்க வேண்டும். (சாறோடு தேவையான அளவு தண்ணீர் கலந்து வைத்துக் கொள்ளலாம்) பிழியப்பட்ட சாறை, உங்கள் வீட்டைச் சுற்றியும், வியாபார இடத்தைச் சுற்றியும் வெளிப்புறமாக ஊற்றுங்கள் சாறு பிழியப்பட்ட எலுமிச்சைத் தோல்களை உங்கள் வீட்டு முன்பு வைத்து, அதனோடு 27 அரசங்குச்சிகளைச் சேர்த்து எரிக்க வேண்டும். அது சாம்பலானபின், அந்த சாம்பலை உங்கள் வியாபார தலம், உங்கள் வீடு முதலிய இடங்களில் தூவி விடுங்கள். செய்வினை பறந்தோடிவிடும். யோக நரசிம்மரின் படத்தை வீட்டில் வைத்து தினமும் காலையில் நீராடிய பின்பு 12 தடவை வலம் வந்து வணங்கி வாருங்கள் செய்வினை தோஷம் இருந்தால் யோக நரசிம்மரின் சக்தியால் அது முறிந்து விடும்.

    உங்கள் ஜாதகத்தில் லக்னத்துக்கு 2-ம் இடமான தன ஸ்தானமும் 4-ம் இடமான வீடு அமைப்பு ஸ்தானமும் பாதிக்கப்பட்டிருந்தால், செல்வம் சேராத தோஷம் ஏற்பட்டுவிடும். செல்வம் சேர்வதற்காகசேமிப்பை உயர்த்த வேண்டுமானால் சில பரிகாரம் செய்ய வேண்டும்.

    வள்ளி-தெய்வானையுடன் கூடிய முருகப் பெருமான் ஆலயத்துக்கு செவ்வாய் கிழமையன்று காலை 6 மணி அல்லது மாலை 6 மணிக்குச் சென்று பசும் நெய்யைக் கொண்ட நெய் தீபம் ஏற்ற வேண்டும். தீபம் ஒரு மணி நேரம் தொடர்ந்து எரிய வேண்டும். அந்த அளவிற்கு நெய் எடுத்துச் செல்ல வேண்டும். தீபம் ஏற்றப்பட்டவுடன் சந்நிதானத்தின் முன் அமர்ந்து ஓம் சரவணபவ என்று தொடர்ந்து ஒரு மணிநேரம் பாராயணம் செய்ய வேண்டும். கண்களை மூடிக்கொள்ளாமல் விளக்கின் ஒளியை உற்று நோக்க வேண்டும்.

    இதே போல ஒன்பது செவ்வாய்க்கிழமைக்கு செய்ய வேண்டும். இதனால் கஷ்டம் விலகும். இத்தகைய பரிகாரம் செய்ய முடியாதவர்கள் அவரவர் வீட்டிலேயே வள்ளி- தெய்வானையுடன் கூடிய முருகன் படத்தை வைத்து வணங்கலாம்.

    சிலருக்கு என்ன வியாபாரம் செய்தாலும் விருத்தி அடையாதபடி தோஷம் இருக்கும். அப்படிப்பட்டவர்கள் தினசரி காலை குளித்து விட்டு மகாலட்சுமி படத்திற்கு முன்பு பால், தேன், ஏலக்காய். கிஸ்மிஸ் பழம், முந்திரிப்பருப்பு ஆகிய ஐந்தையும் கலந்து, ஒரு புதிய கிண்ணத்தில் வைத்து காய்ச்சி எடுக்கப்பட்ட பஞ்சாமிர்தத்தை படைத்து வழிபட வேண்டும். அப்போது ஐந்து முகம் கொண்ட வெள்ளி விளக்கு ஏற்ற வேண்டும். பிறகு சிறிது பஞ்சாமிர்தத்தை எடுத்துச்சென்று உங்கள் வியாபார தலத்தில் உள்ள முக்கிய வேலையாட்களுக்குக் கொடுக்க வேண்டும். இவ்வாறு தினசரி செய்து வந்தால் தொழிலில் நஷ்டம் வராது. அப்படி செய்ய இயலாவிட்டால் நவதானியங்களை ஒரு மஞ்சள் துணியில் முடிந்து உங்கள் கடைவாசலில் கட்டுங்கள். கல்லாவிலும் போட்டு வையுங்கள். உங்கள் வியாபாரம் பெருகும். பனம்பழத்துக் கடுக்காயில் மஞ்சள் தடவி கல்லாவில் வைத்தாலும் வியாபாரம் பெருகும்.

    மருதாணிக்காய், நூறு வருட வேப்பம் பட்டை, பளிங்கு சாம்பிராணி,நன்றாக வெயிலில் காய வைத்து இடித்து தூளாக்கி, நெருப்பில் போட்டு வீடு முழுவதும் காட்ட வேண்டும். இதனால் வீட்டுக்கு ஏற்பட்ட தோஷம் விலகி விடும்.

    தெற்கு முகமாய் பத்மாசனத்தில் அமர்ந்து கையில் ருத்திராட்சை மாலையை ஏந்தி சிவபெருமானை மனதில் கொண்டு, 'நமசிவாய' என 108 முறை ஜெபித்து கற்பூர தூப தீபம் காட்டி வணங்க வேண்டும்.

    கண்களை மூடியபடி மனதிற்குள் சிவபெருமான் உருவத்தை எண்ணியபடி கீழ்க்கண்ட மந்திரத்தை ஒரு லட்சம் முறை உருபோட வேண்டும்.

    ஓம் சிங்-நசி நசி-மசி-சுவாஹ" மந்திர சித்தி ஏற்பட்ட பின்பு, இந்த மந்திரத்தை பிரம்பில் உருவேற்றி தோஷமுடைய குழந்தைகள் மீது தடவினாலும், நீரில் உருவேற்றி முகத்தில் தெளித்தாலும், விபூதியில் உருவேற்றி பூசினாலும் வேப்பிலையில் உருவேற்றி அடித்தாலும் குழந்தைகள், பெரியவர்கள் எல்லோருடைய தோஷங்களும் நிவர்த்தியாகும்.

    Next Story
    ×