என் மலர்

    சிறப்புக் கட்டுரைகள்

    வினை தீர்க்கும் விநாயகர் சதுர்த்தி வழிபாடு
    X

    வினை தீர்க்கும் விநாயகர் சதுர்த்தி வழிபாடு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வாழ்வில் 16 வகை செல்வங்களும் பெற்று வாழ இறைவனை நினைத்து இருப்பது விரதம்.
    • விநாயகரை வழிபட்டால் ஜனன கால ஜாதகத்தில் உள்ள நவகிரக தோஷங்களும் அகலும்.

    கணபதியை தொழுதால் காரியம் கைகூடும் என்பது அருளாளர்கள் வாக்கு.எந்த காரியத்தையும், நற்காரியமாக மாற்றுவிக்கும் வல்லமை மிக்க மூலமுதல்வன், முழுமுதற் கடவுள் விநாயகர். தன்னை வழிபடும் பக்தர்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றுவது விநாயகரின் தனிச்சிறப்பு. நினைத்த காரியங்கள் நிறைவேறவும், மன நிம்மதி கிடைக்கவும், வாழ்வில் 16 வகை செல்வங்களும் பெற்று வாழ இறைவனை நினைத்து இருப்பது விரதம். விரதம் என்பது ஒரு விசேஷ நாளில் ஒரு குறிப்பிட்ட தெய்வத்தை நினைத்து ஐம்புலனை அடக்கி, உண்ணாமல் இருக்கும் நிலை ஆகும். விரதம் இருப்பதால் மனம், புத்தி, உடல் முதலியவை தூய்மை அடையும்.

    விரதங்களை கடைபிடிப்பது ஆன்மீக ரீதியாக மட்டுமல்லாமல். அறிவியல் ரீதியாகவும் உடலுக்கும், உள்ளத்திற்கும் உகந்தது.

    பிரார்த்தனைகளை நிறைவேற்றும் விராதாதி நாட்களை திதி மற்றும் நட்சத்திரங்கள் அடிப்படையில் கடைபிடிப்பது இந்துக்களின் வழக்கம். திதிகளின் அதி தேவதைகளை வழிபாடு செய்தால் அது அவர்களுக்கு காவல் தெய்வங்களாக இருந்து வறுமை பிணி பீடை,கஷ்டம் என அனைத்து பிரச்சினைகளையும் நீக்கி சுபிட்சமான வாழ்வு கிடைக்கச் செய்யும். பொதுவாக அமாவாசை, பவுர்ணமி, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, ஏகாதசி, திரயோதசி போன்ற ஒரு சில குறிப்பிட்ட திதிகள் காலத்தால் தீர்க்க முடியாத பல பிரச்சினைகளுக்கு தீர்வு கொடுக்கும் வலிமை பெற்றவை. அந்த வகையில் வளர்பிறை சதுர்த்தி திதியின் அதிதேவதை விநாயகரை வளர்பிறை சதுர்த்தி திதியில் வழிபடுவது மிகவும் உன்னதமானது.

    ஒவ்வொரு தமிழ் மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி திதிக்கும் மனிதர்கள் வாழ்வில் சந்திக்கும் பல்வேறு தடை தாமதங்கள் மற்றும் நவகிரக தோஷத்தை நீக்கும் வலிமை உண்டு. என்றாலும் ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி விநாயகர் அவதரித்த நாள் என்பதால் மேலும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த விநாயகர் சதுர்த்தி வழக்கமாக விநாயகர் சதுர்த்தியானது ஆவணி மாதத்தில் தான் வரும். ஆனால் இந்த ஆண்டு புரட்டாசி மாதத்தில் வருகிறது. பெருமாளுக்குரிய புரட்டாசி மாதம் முதல் நாளிலேயே, முழு முதற்கடவுளான விநாயகருக்கு உரிய விநாயகர் சதுர்த்தியும் இணைந்து வருவதால் இது கூடுதல் சிறப்பு வாய்ந்த நாளாக பார்க்கப்படுகிறது.காலண்டர்களில் செப்டம்பர் 17 ம் தேதி தான் அரசு விடுமுறை என்றும், செப்டம்பர் 18 ம் தேதி விநாயகர் சதுர்த்தி என்றும் குறிப்பிடப்பட்டிருந்ததால் எந்த நாளில் விநாயகர் சதுர்த்தி விடுமுறை என்ற குழப்பம் ஏற்பட்டது. இதனால் தமிழக அரசு விநாயகர் சதுர்த்தி விடுமுறையை செப்டம்பர் 17 க்கு பதிலாக செப்டம்பர் 18-ந் தேதி மாற்றியது.

    திருக்கணித பஞ்சாங்கப்படி சோபகிருது வருடம் புரட்டாசி 1-ம் நாள் திங்கட்கிழமை 18. 9.2023 அன்று பகல் 12.40 முதல் புரட்டாசி 2-ம் நாள் செவ்வாய்கிழமை 19.9.2023 நண்பகல் 1.44 மணி வரை வளர்பிறை சதுர்த்தி திதி உள்ளது. திதியின் பெரும் பகுதி ராகுவின் சுவாதி நட்சத்திரத்தில் சம்பவிக்கிறது. இந்த நாளில் விநாயகரை வழிபட்டால் ஜனன கால ஜாதகத்தில் உள்ள நவகிரக தோஷங்களும் அகலும்.

    விநாயகரின் சிறப்புகள்

    ஓங்கார நாயகனாக திகழும் விநாயகரின் உடலில் நவக்கிரகங்களும் இருப்பதாக ஐதீகம். அவரது நெற்றியில் சூரியனும், நாபி (தொப்புள்)யில் சந்திரனும், வலது தொடையில் செவ்வாய் எனப்படும் அங்காரகனும், வலது கீழ் கையில் புதனும், வலது மேல் கையில் சனி பகவானும், சிரசில் குரு பகவானும், இடது கீழ் கையில் சுக்கிர பகவானும், இடது மேல் கையில் ராகு பகவானும், இடது தொடையில் கேது பகவானும் இருப்பதால் நவக்கிரகங்களால் ஏற்படும் தீமைகளை கட்டுப்படுத்தும் சக்தி விநாயகருக்கு உண்டு. மேலும் அவரது ஐந்து கரங்களும் படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் ஆகிய ஐந்தொழில்களைக் குறிப்பதுடன் சிவாயநம என ஐந்தெழுத்து மந்திரத்தை உணர்த்துவதால் 'ஐங்கரன் என்று அழைக்கப்படுகிறார். அதாவது பாசத்தை ஏந்திய கை படைத்தலை குறிக்கிறது. தந்தம் ஏந்திய கை காத்தலை குறிக்கிறது. அங்குசம் ஏந்திய கை அழித்தலை குறிக்கிறது என்பதால் படைத்தல், காத்தல்,அழித்தல் ஆகியவற்றை செய்யும் மும்மூர்த்தியாகிறார். மோதகம் ஏந்திய கை அருளை குறிப்பதால் இவர் பராசக்தியாகவும் தும்பிக்கை ஏந்திய கை மறைத்தலை குறிப்பதால் இவர் எல்லாம் வல்ல பரமேஸ்வரராகவும் இருக்கிறார்.

    விநாயகரின் திருவடிகள் இரண்டும் ஞானம்,கிரியை எனும் சக்திகளை உணர்த்துபவை.

    சூரியன்,சந்திரன்,அக்னி ஆகிய மூன்றையும் முக்கண்களாகப் பெற்றவர் என்பதால் விநாயகர் தத்துவப் பொருள். முக்காலத்துக்கும் வழிகாட்டு பவர், நாம் செய்யும் நற்காரியங்கள் அனைத்துக்கும் அவரே ஆதாரம்.அவரை வழிபடுவதால் சுகம்,ஞானம்,ஆனந்தம் என அனைத்தும் தேடி வரும்.

    ஸ்வஸ்திக் சின்னமும் விநாயகரும்

    எந்த செயலையும் தொடங்கும்முன் விநாயகரை வணங்குவது நமது மரபு. எத்தனையோ தெய்வங்கள் இருந்தாலும் விநாயகர் வழிபாடு வெற்றியை தருவதற்கு காரணம் அவரது கையில் உள்ள மங்களம் மற்றும் வெற்றியின் சின்னமான ஸ்வஸ்திக். உலகில் பல்வேறு நாடுகளில் ஸ்வஸ்திக் சின்னம் அதிர்ஷ்டத்தின் சின்னமாக பல்லாயிரம் வருடமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. உலகத்தை தன் வசப்படுத்த நினைத்த ஹிட்லரின் வெற்றிச் சின்னமும் ஸ்வஸ்த்தி தான்.

    செங்கோண வடிவில் மேலிருந்து கீழாகவும், இடமிருந்து வலமாகவும் ஒன்றுக்கொன்று குறுக்கில் செல்லும் கோடுகளே ஸ்வஸ்திக். இதிலுள்ள எட்டு கோடுகளும் எட்டு திசைகளை குறிக்கும். ஸ்வஸ்திக் சின்னத்தில் நடுவில் வைக்கப்படும் புள்ளி நமது ஆன்மா. மனக் கட்டுப்பாடு இல்லாமல் அலைபாயும் ஆன்மாவை கட்டுபடுத்தி பிரார்த்தனைகளை நிறைவேற்றித் தரும் சக்தி ஸ்வஸ்திக் சின்னத்திற்கு இருக்கிறது. எனவே விநாயகர் வழிபாடு தடையற்ற நல்வாழ்வு , பொருள், வெற்றியைத் தேடி தரும் ஸ்வஸ்திக் சின்னத்தை பூஜை அறையில் வரைய வேண்டும். அல்லது ஸ்வஸ்திக் சின்னம் கையில் உள்ள விநாயகரை வைத்து வழிபட வேண்டும்.

    விநாயகரும் தோஷ நிவர்த்தியும்

    வளர்பிறை சதுர்த்தி திதியில் அரச மரத்தடியில் இருக்கும் விநாயகர் மற்றும் நாகர்சிலைக்கு பாலபிஷேகம் செய்து வழிபட வேண்டும் . விநாயகர் சதுர்த்தி திதி ராகுவின் சுவாதி நட்சத்திரத்தில் சம்பவிக்கிறது. ஜனன கால ஜாதகத்தில் கடுமையான சர்ப்ப தோஷம் மற்றும் காலசர்ப்ப தோஷம் இருப்பவர்கள் 13,22,31-ம் தேதியில் பிறந்தவர்கள், ராகு, கேது தசை நடப்பவர்கள், ஜனன ஜாதகத்தில் அதிக கிரகங்கள் ராகு/கேது சாரம் பெற்றவர்கள் வாசுகி, ஆதிசேஷன், கார்க்கோடகன், அனந்தன், குளிகன், தட்சகன், சங்கபாலன், பதுமன், மகாபதுமன் எனும் ஒன்பது தெய்வத்தன்மை மிகுந்த நாகங்களை மனதில் நிறுத்தி பால் மற்றும் மஞ்சள் அபிஷேகம் செய்தால் ஜாதகத்தில் உள்ள அனைத்துவிதமான சர்ப்ப தோஷங்களும் நிவர்த்தி ஆகும். திருமணத்தடை அகலும். தீர்க்க சுமங்கலி பாக்கியம் கிடைக்கும். அத்துடன் கண்திருஷ்டி, செய்வினை பயம், ஏதாவது ஒரு ரூபத்தில் அடுக்கடுக்காக வந்து கொண்டே இருக்கும் பிரச்சினைகள், முன்னேற்றமின்மை போன்றவை நீங்கும். சம்பள உயர்வு. வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும். கொடுத்த கடன் திரும்பி வசூலாகும்..

    மாங்கல்ய தோஷம்

    ஜோதிட சாஸ்திரப்படி விநாயகர் கேதுவின் அதிதேவதையாகும். ஜனன கால ஜாதகத்தில் எட்டாமிட கேது, செவ்வாய் மற்றும் சனியினால் ஏற்படும் களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம், செவ்வாய் தோஷம் நீங்கி திருமணத் தடைகள் அகன்று மங்கல வாழ்வு அமையவும். சனி பகவானின் தோஷம் நீங்கி, ஆயுள் அபிவிருத்தி, பதவி உயர்வு போன்றவை கிடைக்கவும் விநாயகர் சதுர்த்தியில் விரதமிருந்து விநாயகரை தரிசித்து, விநாயகருக்கு சூரைத்தேங்காய் உடைத்து வழிபட்டால் அனைத்து தடை தாமதங்களும் விலகி சுப பலன் தேடி வரும்.

    ஜாதகத்தில் கேது திசை மற்றும் கேது புத்தி நடப்பில் இருப்பவர்களுக்கு நிச்சயம் விநாயகர் வழிபாடே சிறந்த பரிகாரமாகும். இப்படியாக நமக்கு வாழ்க்கையில் ஏற்படும் எல்லா வகையான இன்னல்களுக்கும் விநாயகரை வழிபடுவதன் மூலம் நல்ல தீர்வு கிடைக்கும். வாழ்க்கையில் நிம்மதியும் உண்டாகும்.

    பணவரவை அதிகரிக்கும் குன்றின் மணி கருப்பு வண்ணத்தையும் சிகப்பு வண்ணத்தையும் ஒன்றாக சேர்த்தால் போல் இருக்கும் குன்றின் மணியை நாம் அனைவரும் பார்த்திருக்க வாய்ப்பு உண்டு. விநாயகர் சதுர்த்தி அன்று மண் பிள்ளையாருக்கு கண்ணாக இதை வைப்பார்கள். கிராமப்புறங்களில் விலையும் இந்தக் குன்றின் மணிக்கு சக்தி அதிகம் உள்ளது. வீட்டில் பணக் கஷ்டங்கள் தீர்ந்து நிம்மதியான வாழ்க்கையை வாழ்வதற்கு இந்த சிகப்பு கருப்பு குன்றின் மணியை நம் வீட்டு பூஜை அறையில் வைக்கலாம். வீண் விரயங்களையும் தவிர்க்கும் சக்தியானது இந்த சிகப்பு கருப்பு குன்றின் மணிக்கு உள்ளது.

    மன நிம்மதி

    ஓம் சுமுகாய நமஹ' இம்மந்திரம், நம் மனதின் சமநிலையையும், அமைதியையும் நிலைப்படுத்த உதவும் ஒரு இனிய மந்திரம் ஆகும். எப்போதெல்லாம் உங்களுடைய மனம் அமைதி நிலையை இழந்து தவிக்கிறதோ, அப்போதெல்லாம் இந்த மந்திரத்தை மனதார ஸ்ரீ விநாயகரின் திருவுரு வத்தோடு நினைத்து துதித்தால் மனம் அமைதி நிலை பெற்று மகிழ்ச்சி உணர்வு உண்டாகும். விருட்சமும் விநாயகரும். அரச மரத்தடி விநாயகரை வணங்கினால் குழந்தைப்பேறு விரைவில் உண்டாகும். வன்னி மரத்தடி விநாயகர், கிரஹ தோஷங்கள் விலக்குவார்.

    ஆலமரத்தடி விநாயகரை வழிபடுவதால் சூன்யங்கள் அகலும். வேப்பமர விநாயகர் அருளால் தீராத, நாட்பட்ட நோய்கள் மறையும். நாவல் மரத்தடி விநாயகரை வழிபடுவதால் பிள்ளைகளுக்கு அறிவு வளரும்.

    விநாயகர் சதுர்த்தி விரத முறைகள்

    அதிகாலையிலேயே எழுந்து, சுத்தமாக குளித்துவிட்டு, வீட்டையும் சுத்தமாக்கிக் கொள்ள வேண்டும். வாசலில் மாவிலைத் தோரணம் கட்டி இரண்டு வாழைக் கன்றுகளையும் கட்டவேண்டும்.

    பூஜையறையை சுத்தம் செய்து ஒரு மணையை வைத்து கோலம் போட்டு, அதன்மேல் ஒரு தலை வாழை இலையை வைக்க வேண்டும். இலையின் நுனி வடக்கு பார்த்ததுபோல இருப்பது நல்லது. இலையின் மேல் பச்சரிசியைப் பரப்பி வைத்து, நடுவில் விநாயகரை வைக்க வேண்டும். களிமண் பிள்ளையார். உலோகம், கற்சிலை விக்ரகங்களையும், படம் வைக்கலாம்.

    விநாயகருக்கு கொழுக்கட்டை, எள்ளுருண்டை, பாயாசம், வடை பால், தேன், வெல்லம், முந்திரி, அவல், பொரி, சோளம், விளாம்பழம், நாவல்பழம், வடை, சுண்டல், வெற்றிலை, பாக்கு வாழைப்பழம், ஆப்பிள், கரும்பு என அவரவர் வசதிக்கேற்ப நைவேத்யம் செய்யலாம்.

    நிவேதனப் பொருட்கள் ஒவ்வொன்றிலும் 21 என்ற கணக்கில் வைக்கலாம்.பூஜையின் போது மண் அகலில் நெய் தீபம் ஏற்ற வேண்டும்.அதன் பிறகு எருக்கம்பூ மாலை, அருகம்புல், சாமந்தி, மல்லி பூக்களால் அலங்காரம் செய்து 21 வகை இலைகள் மற்றும் அறுகம் புல்லினால் 108 முறை அவரின் திருநாமத்தைச் சொல்லியும், அஷ்டோத்திரம் படித்து அர்ச்சனை செய்யலாம்.விநாயகர் பாடல்கள் விநாயகர் அகவல், காரிய சித்தி மாலை படிப்பது விசேஷமான பலன்களைத்தரும். பிறகு கற்பூரம் காட்டி விரதத்தை முடிக்கலாம். இந்த விரதத்தை பட்டினியாக இருந்து அனுஷ்டிப்பது சிறப்பு. உலகில் மனிதனுக்கு போதும் என்ற எண்ணம் தோன்றுவது உணவருந்தும் போது தான். ஒருவர் வயிறு நிரம்பி, மனதார வாழ்த்தினால் அனைத்து செல்வங்களும் தேடி வரும். எனவே இயன்ற உணவுகளை தான தர்மங்களை செய்ய பலன் இரட்டிப்பாகும்.

    ஆன்மீகம் என்பது நெற்றியில் விபூதி அணிந்து கொண்டு, எந்நேரமும் இறைவனின் நாமத்தை உச்சரித்துக் கொண்டும், பலர் பார்க்கும்படி கோவிலுக்கு நன்கொடை செய்வதும், அடுத்த வருக்கு பலர் முன்னிலையில் உதவி செய்வது மட்டுமல்ல. மனதில் தீய எண்ணங்கள் இல்லாமல், அடுத்தவருக்கு நல்லது செய்யா விட்டாலும், கெடுதல் செய்யாமல் மனசாட்சிக்கு பயந்து வாழ்வதே ஆன்மீகம்.

    அடுத்ததாக, பல மணி நேரம் வேறு பல சிந்தனையுடன் பூஜை செய்யாமல், இறைவனை ஒரு நிமிடம் வணங்கினாலும் எந்தவித தீய சிந்தனையுமின்றி ஆத்மார்த்தமாக வணங்கி, எனக்கு உன்னை தவிர வேறு யாரும் தெரியாது, உன்னை தவிர வேறு யாரும் கிடையாது. இந்த உடலையும் ஆன்மாவையும் நீயே வழிநடத்தி செல், என விநாயகரிடம் சரணடைந்து வழிபட்டால் நவகிரக தோஷங்கள் நீங்கும். பொன், பொருள் ஆபரணங்கள் சேரும்.

    Next Story
    ×