என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

3-ம் எண் ஆதிக்கத்தின் பலன்கள்
- 30- தனித்த குருவின் ஆதிக்கம் நிறைந்த எண்.
- கல்வியில் சாதனை மேல் சாதனை செய்யும் அமைப்பு உண்டாகும்.
3, 12, 21, 30, 39, 48, 57, 66, 75, 84, 93, 102 ஆகிய எண்களில் பெயர் அமைந்தவர்களும் 3,12,21,30-ந் தேதிகளில் பிறந்தவர்களும் குருவின் ஆதிக்கம் பெற்றவர்கள். மூன்றாம் எண் குருவின் ஆதிக்கம் கொண்டது. ஒன்பது எண்களில் 3ம் எண்ணிற்குத் தனி மகத்துவம் உண்டு. அடக்கம்,பொறுமை,பெரியோருக்கு கீழ்படிதல், தன்னம்பிக்கை, நீதி, நேர்மை, கவுரவம் ஆகிய குணங்கள் மிகுதியாகவே இருக்கும். முன்னோர்களை பின்பற்றி நடப்பவர். முன்னோர்களின் நல்லாசி பெற்றவர்கள். மற்றவர்கள் போற்றத்தக்க குணங்களைக் கொண்டவர்கள். எதையும் நேர்வழியில் செய்யக் கூடியவர்கள். புகழ், அந்தஸ்து சுயகவுரவம் இவர்களது தாரக மந்திரம்.
பெயரெண்:3- தனித்த குருவின் ஆதிக்கம் நிறைந்த எண். சிறந்த சிந்தனையாளர்கள். பொறியியல், கணிதம், விஞ்ஞானம் போன்ற ஏதாவது ஒரு துறையில் வல்லுநர்களாக வருவார்கள். வெற்றியையும் மகிழ்ச்சியான வாழ்க்கை கல்வியையும் அந்தக் கல்வியால் மகிழ்ச்சியையும் மனநிறைவையும் அடைவார்கள்.
பெயரெண்:12- சூரியன் மற்றும் சந்திரனின் ஆதிக்கம் இணைந்த எண். பேச்சுத் திறமை உண்டு. இவர்களின் திறமையான பேச்சாற்றலே இவர்கள் வாழ்க்கை உயர்வுக்கு காரணமாக அமையும். சிறந்த எழுத்தாளராகவும் கதை, கவிதை போன்றவற்றில் அதிக ஈடுபாடு இருக்கும்.
பெயரெண்:21- சந்திரன் மற்றும் சூரியனின் ஆதிக்கம் சேர்ந்த எண். அதிகாரமாகப் பேசி தங்கள் காரியங்களைச் சாதித்துக் கொள்வார்கள். படிப்பு, தொழில் ஆகியவற்றில் இவர்கள் சுயமாகவே போராடி முன்னேறிவிடுவார்கள். சுய லாபத்தில் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். பணத்தால் சாமர்த்தியமாக எதையும் சமாளிப்பார்கள்.
பெயரெண்:30- தனித்த குருவின் ஆதிக்கம் நிறைந்த எண். வாழ்க்கையில் தனியாகப் போராடப்பிறந்தவர்கள். தாய், தந்தை, உறவினர்களின் ஆதரவு குறைவாகவே கிடைக்கும். நுண்ணிய அறிவு மற்றும் தீர்க்கமான யோசனையால் இஷ்டம்போல் செயல்படுவார்கள். அடுத்தவர் மனதை சுலபமாக அறிந்து வெற்றியை பெறுபவர்கள். தங்கள் தகுதியால் நீதிபதிகள், வக்கீல்கள், பேராசிரியர்கள் ஆகிய பெரும்பதவிகளை வகிப்பவர்கள்.
பெயரெண்:39- குரு மற்றும் செவ்வாய் சேர்க்கை கலந்த பிரதிபலன் தரும் எண். தீவிர உழைப்பாளி. புகழுக்காக உழைத்தாலும் புகழ் பெற மாட்டார்கள். பலமுறை தோல்விகளைச் சந்தித்தாலும் சளைக்காமல் உழைப்பார்கள். நடுவயதில் இவர்கள் பல வாழ்க்கைப் பிரச்சினைகளை சந்திப்பார்கள். ஆரோக்கிய குறைவு உண்டு. இவரின் உழைப்பு இவரைவிட பிறருக்கே பயன்படும். வாழ்வின் பிற்பகுதியில், தாங்கள் பெற்ற அனுபவங்களைக் கொண்டு, ஆனந்தமான வாழ்க்கை வாழ்வார்கள்.
பெயரெண்:48- ராகு மற்றும் சனியின் ஆதிக்கம் ஒருங்கிணைந்த எண். நித்திய கண்டம் பூரண ஆயுளான வாழ்க்கை அமையும். திடீர் ஏற்றம் அல்லது எதிர்பாராத இறக்கம் மிகைப்படுத்தலாக இருக்கும். பரிட்சயம் இல்லாத தொழிலில் ஆர்வத்துடன் இறங்குவார்கள். எல்லாம் தெரிந்தவர்கள் போல் பாசாங்கு செய்வார்கள். மத விஷயங்களில் தீவிரவாத எண்ணம் உண்டு.
பெயரெண்: 57- புதன் மற்றும் கேதுவின் ஆதிக்கம் நிறைந்த எண். சுய நலம் மிகுந்தவர்கள். எப்போதும் தங்களின் நலன் பற்றியே சிந்திப்பார்கள். வாழ்க்கையின் முன் பகுதியில் பல ஏற்றத் தாழ்வுகள் மூலம் நல்ல அனுபவங்களைப் பெறுவார்கள். உலகத்தில் புதிதாக ஏதாவது சாதிக்க வேண்டும் என்று நினைப்பார்கள். வாழ்நாள் முழுவதும் யாரையாவது காதலித்துக் கொண்டே இருப்பார்கள்.
பெயரெண்: 66- சுக்கிரன் ஆதிக்கம் நிறைந்த எண். அழகு ஆடம்பரம் பற்றிய சிந்தனை மிகைப்படுத்தலாக இருக்கும். கலை உணர்வு உண்டு. இசை, நாட்டியம், நடிப்பு, சின்னத்திரை, சினிமா போன்றவற்றில் இவர்களின் பங்களிப்பு பாராட்டத் தகுந்த வகையில் இருக்கும். சூழ்நிலைக்கு
ஏற்ப தங்களை மாற்றி அனுசரித்து செல்பவர்கள். பேச்சாற்றல் மிக்கவர்கள். அரசாங்க அரசியல் தொடர்பு சுகபோக வாழ்க்கை உண்டு.
பெயரெண்: 75- கேது மற்றும் புதனின் பண்புகள் இணைந்த எண்.மிகுந்த திறமைசாலிகள், பணத்தைவிடச் சுய திருப்தியை பிரதானமாக நினைப்பார்கள். எதையும் துருவித் துருவி ஆராயும் குணம் உண்டு. திடீரென புகழ் ஏற்படும். வெகுவிரைவில் அதிக நண்பர்களை அடைவார்கள். கதை, கவிதை, கட்டுரை, எழுதுவார்கள். இசைக் கலையில் தனித்துவம் படைப்பவர்கள். காதலுக்காக உயிரையும் தியாகம் செய்பவர்கள்.
பெயரெண்: 84- சனி மற்றும் ராகுவின் ஆதிக்கம் நிறைந்த எண். பால்ய வயதில் கஷ்டமான வாழ்க்கை வீண் விரோதம் உண்டு. கவலையே அதிகம். முயற்சிக்கு தகுந்த முன்னேற்றம் இல்லை. காரணமே இல்லாமல் பலருடைய விரோதமும் எதிர்ப்பும் ஏற்படும்.
பெயரெண்: 93- செவ்வாய் மற்றும் குருவின் ஆதிக்கம் நிறைந்த எண். கவுரவம் எப்போதும் கிடைக்கும். தனிமையிலே சிந்திப்பதில் நாட்டம் உள்ளவர்கள். அரசியல் தொடர்பும் ஏற்படும். உலக அறிவு மிகுதியாக உண்டு. அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றும் எண். வெளிநாட்டு வாணிபம் தொடர்புடைய தொழில்கள் சிறப்படையும். பல அரிய காரியங்களை சாதிக்கும் வல்லமை பெற்றிருப்பார்கள்.
பெயரெண்: 102- சூரியன் மற்றும் சந்திரனின் ஆதிக்கம் நிறைந்த எண். பொதுவாக பூஜ்யத்துடன் இணைந்த எண்கள் சுப பலனைத் தருவதில்லை.ஆரம்பத்தில் வெற்றியும் நடுவில் சோர்வும் முடிவில் குழப்பமும் ஏற்படும். விசேஷமான பலன்களை தராது. வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும். பிறவி எண் என்பது ஒருவர் பிறந்த தேதியைக் குறிக்கும் எண் ஆகும். விதி எண் என்பது ஒருவரின் முழு பிறந்த தேதி மாதம், வருடம் அனைத்தையும் கூட்டி வரும் ஒற்றை இலக்க எண் ஆகும்.
'பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தி
பிறவி எண் 3 விதி எண்.1
குரு மற்றும் சூரியனின் ஆதிக்கம் கலந்த எண். சுய ஜாதகத்தில் குருவும், சூரியனும் பலம் பெற்றால் அதிர்ஷ்டமும், பேரதிர்ஷ்டமும் நிரம்பியவர்கள். மிடுக்கான தோற்றமும் நளினமும் நிரம்பியவர்களாக இருப்பார்கள். தாயும், தந்தையும் உயர்ந்த குடும்பத்தில் பிறந்தவர்களாக இருப்பார்கள். கல்வி, நிதி, நீதி, ஆசிரியர், வங்கிப் பணி, நிர்வாகப் பதவியில் இருப்பார்கள். சுய ஜாதகத்தில் குருவும், சூரியனும் வலிமை இழந்தால் பணத்தால் பிரிந்த குடும்பங்கள், பல உண்டு. சில நேரங்களில் அதீத இரக்கப்பட்டு ஏமாறும் நிலையும் ஏற்படும்.
பிறவி எண் 3 விதி எண்.2
குரு மற்றும் சந்திரனின் ஆதிக்கத்தை பிரதிபலிக்கும் குருச் சந்திர யோகம் நிறைந்த எண். இவர்களுக்கு பணப் புழக்கம் எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும். சுய ஜாதகத்தில் தன, லாப கிரகம் பலம் பெற்றால் தொட்டது துலங்கும். அசையும், அசையாச் சொத்துக்களின் சேர்க்கை நல்ல நிலையில் இருக்கும். பள்ளிப் படிப்பில் கெட்டிக்காரர்களாக இருப்பார்கள். தொழில் உத்தியோகம் மூலமாக வருமானம் வந்து கொண்டே இருக்கும். அதன் மூலம் புகழ், அந்தஸ்து, கவுரவம் கூடும். சுய ஜாதகத்தில் குருவும் சந்திரனும் கெட்டால் இது கெடுதியான கொடூரமான அமைப்பு. கடனில் வாழ்க்கை எனும் கப்பல் முழ்கும்.
பிறவி எண் 3 விதி எண்.3
தனித்த குருவின் ஆதிக்கம் நிறைந்த எண் என்பதால் அற்புதமான உன்னத பலன்களை அனுபவிக்கிறார்கள் என்றால் அது மிகைப்படுத்தலாகாது. சுய ஜாதகத்தில் குரு பலம் பெற்றால் தொழில், வியாபாரம், வேலைவாய்ப்பு என நூற்றுக்கணக்கான வகையில் தன வரவு உண்டாகிறது. கல்வியில் சாதனை மேல் சாதனை செய்யும் அமைப்பு உண்டாகும். சிறப்பான மண வாழ்க்கை, தொழில் ரீதியாக மேன்மை, பொருளாதார உயர்வுகள், சமுதாயத்தில் பெயர், புகழ் உயரக்கூடிய வாய்ப்பு போன்ற யாவும் உண்டாகும். சுய ஜாதகத்தில் குரு பலவீனமாக இருந்தால் முறையான திட்டமிடுதல் இல்லாமல் ஏற்ற இறக்கமான வாழ்க்கை வாழுகிறார்கள்.
பிறவி எண் 3 விதி எண்.4
குரு மற்றும் ராகுவின் ஆதிக்கம் நிறைந்த எண். இதை ஜோதிட ரீதியாக குரு சண்டாள யோகம் என்று கூறலாம். இந்த கிரக கூட்டணி சுபமாகவோ அல்லது பலமாகவோ அமைந்து விட்டால் அங்கு யோகம் தான் அதிகமாக வேலை செய்யும். மாறாக ஜனன ஜாதகத்தில் பலவீனமாகவோ அல்லது அசுபமாகவோ அமைந்து விட்டால் அங்கு தோஷமே அதிகமாக வேலை செய்யும். கடுமையான புத்திர தோஷத்தை ஏற்படுத்துகிறது. குரு ராகுவோடு 8 டிகிரிக்குள் இணைந்தால் ராகு தசையில் சம்பாதித்த அனைத்தும் குரு தசையில் இழக்க நேருகிறது.
பிறவி எண் 3 விதி எண்.5
குரு மற்றும் புதனின் ஆதிக்கம் கலந்த அற்புதமான எண்கள். இந்த அமைப்பில் பிறந்தவர்கள் ஜாதகத்தில் தனகாரகன் குரு மற்றும் புத்திக்காரகன் புதன் பலம் பெற்றால் தொழில், வியாபாரம், செய்பவர்களை பார்த்து தாமும் தொழில் செய்ய வேண்டும் என்று ஓர் உந்து சக்தி இவர்கள் மனதில் தோன்றும். வாக்கு சாதுர்யத்தால் உடல் உழைப்பு இல்லாமல் மூளையை பயன்படுத்தி பேச்சின்மூலம் பணம் சேர்க்கிறார்கள். சுய ஜாதகத்தில் குருவும் புதனும் பலம் குறைந்தால் முறையான திட்டமிடுதல் இன்மை யால் தவறான கூட்டாளிகள் மற்றும் நண்பர்களால் கூட்டுத் தொழிலில் பிரிவினை அல்லது நட்டம் ஏற்படுகிறது.
பிறவி எண் 3 விதி எண்.6
குரு மற்றும் சுக்கிரனின் ஆதிக்கம் கலந்த எண்.ஜோதிட ரீதியாக குரு, சுக்ரன் பகை கிரகச் சேர்க்கை என கூறப்பட்டாலும் இந்த கிரக இணைவு பலமான பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துகிறது. அதிர்ஷ்டமான தொழில், உத்தியோகம் மூலம் பொன், பொருள், அசையும், அசையா சொத்துகள் அமைகிறது. இந்த அமைப்பு பொருளாதாரத்தில் தன் நிறைவைத் தந்தாலும் ஆண்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட திருமண வாழ்க்கை அல்லது பெண்கள் தொடர்பை ஆண்களுக்கு வழங்கத் தவறுவது இல்லை.
பிறவி எண் 3 விதி எண்.7
குரு மற்றும் கேதுவின் ஆதிக்கம் கலந்த கோடீஸ்வர யோகமான அமைப்பாகும். குருவிற்கு கேந்திரம் திரிகோண இடங்களில் கேது நிற்பதும், குரு 5, 7, 9ம் பார்வையால் கேதுவைப் பார்ப்பதும், உயர்தர கோடீஸ்வர யோகத்தைத் தரும். சொகுசான வாழ்க்கை ஏற்பட்டு, கோடீஸ்வரனாகும் யோகம் உண்டாகும். வெளி போர்வைக்கு பணக்காரனாக வாழ்ந்தாலும் கையில் காசு பணம் தங்காத நிலை, வட்டி, வட்டிக்கு வட்டி, கடன், நகைக் கடன், வங்கிக் கடன் வாகனக் கடன், வீடு, நிலம் வாங்கியதில் கடன் என்று பணம் பல்வேறு வகைகளில் கையில் இருப்பு இல்லாத அமைப்பு ஏற்படும்.
பிறவி எண் 3 விதி எண்.8
குரு மற்றும் சனியின் ஆதிக்கம் இணைந்த தர்மகர்மாதிபதி யோக அமைப்பாகும்.ஒருவருக்கு இந்த கிரக எண்களால் வாழ்நாள் முழுவதும் புண்ணிய பலன்கள் கிடைக்க ஜனன கால ஜாதகத்தில் குருவும் சனியும் சுப வலிமை பெற வேண்டும். கூரை வீட்டில் வாழ்ந்தவரை கூட குபேரனாக மாற்றி யுள்ளது என்பதிலும் மாற்றுக் கருத்துஇல்லை. பிள்ளைகள் பிறந்த பின்பு வளர்ச்சி மேலும் அதிகரிக்கும். சுய ஜாதகத்தில் குருவும், சனியும் பலம் குறைந்தால் குல தெய்வ அனுகிரகம், முன்னோர்களின் நல்லாசி இருக்காது. கஷ்ட ஜீவனம் கடன் வறுமை நீடிக்கும்.
பிறவி எண் 3 விதி எண்.9
குரு மற்றும் செவ்வாயின் ஆதிக்கம் கலந்த குரு மங்கள யோகமாகும். சுய ஜாதகத்தில் குரு செவ்வாய் பலம் பெற்ற இந்த எண் ஆதிக்கத்தில் பிறந்தவர்களுக்கு பூமி, மனை சேர்க்கை, செல்வச் செழிப்பு அதிகரிக்கும்.தாய், தாய் வழி உறவி னர்களின் அன்பும் அனுசரனையும் பெற்றவர்கள். இல்வாழ்க்கை சிறப்பாக இருக்கும். ஆடம்பர பொருட்கள் வீட்டில் அதிகம் இருக்கும்.ரியல் எஸ்டேட் துறையில் கொடி கட்டி பறப்பவர்களுக்கு இந்த அமைப்பு இருக்கும். குரு, செவ்வாய் பலம் குறைந்தால் வீடு மனை அமைவது சிரமம். பொதுவாக மூன்றாம் எண் ஆதிக்கத்தில் பெயர் அமைந்தால் கவுரவத்திற்காகவும் தற்பெரு மைக்காகவும் வாழ்வார்கள்.
செல்: 98652 20406






