என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    மன நிம்மதிக்கான வழிமுறைகள்!
    X

    மன நிம்மதிக்கான வழிமுறைகள்!

    • நல்லவனுக்கு தீயவர்களிடம் இருந்து தன்னை காத்துக் கொள்வதே பெரும் பாடாக இருக்கின்றது.
    • நம்ப வேண்டும், கடைபிடிக்க வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் கிடையாது.

    மனிதன் முழு மனநிம்மதியுடன் வாழ்ந்தான்' -என்பது எந்த காலத்திலாவது ஒத்து வந்த வார்த்தையா- வாக்கியமா என்று பார்த்தால் சற்று யோசித்து தான் பார்க்க வேண்டும். ஆமாம்... என்று முழுமையாக மனம் ஒப்புக் கொள்ளவில்லை. ஏற்றுக் கொள்ளவில்லை. காரணம் நல்லவனோ, தீயவனோ இரு பிரிவினருமே 'நிம்மதி' இல்லாமல்தான் வாழ்ந்துள்ளனர். நல்லவனுக்கு தீயவர்களிடம் இருந்து தன்னை காத்துக் கொள்வதே பெரும் பாடாக இருக்கின்றது. ஞானிகளையும், மகான்களையும் இந்த இடத்தில் நாம் பேசக்கூடாது.

    அவர்கள் எல்லாம் கடந்தவர்கள். அதனால் தான் அவர்கள் சித்தர்கள், ஞானிகள், மகான்கள், முனிவர்கள் என குறிப்பிடப்படுகின்றனர். ஆக மனிதன் தனக்கு தேவையான ஒன்றிற்காக உயர் சக்தியினை நாடுகின்றான். வணங்குகின்றான். தன்னால் முடிந்த பரிகாரங்களை செய்து நடக்கும் என்ற நம்பிக்கையுடன் வாழ்கின்றான்.

    நம்பினால் உறுதியான நம்பிக்கை இருந்தால் மலையினைக் கூட நகர்த்திவிட முடியும் என்ற ஆங்கில சொற்றொடர் உண்டு. அதன்படி நம் முன்னோர்கள், வழிகாட்டிகள் கூறிய உரிய வழி முறைகளை நாம் பின்பற்றி வருகின்றோம். அதனை பரிகாரங்கள் என்று சொல்கின்றோம். இதனைப் பற்றி வயதில் மூத்த ஒரு பெரியவரிடம் பேசிக் கொண்டிருந்த போது அவர், கூறியவற்றினை இங்கு பகிர்ந்து கொள்கின்றேன். அவர் இதனை ஆன்மீக நம்பிக்கை சார்ந்த பரிகாரங்கள் என்றார். இவை அவரவர் நம்பிக்கையினைப் பொறுத்தது. நம்ப வேண்டும், கடைபிடிக்க வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் கிடையாது. பாரம்பரிய வழியில் வருவனவற்றை அவர் கூறினார். அவர் கூறியது மற்றும் படித்தவை தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

    * செவ்வாய்க்கிழமை சக்தி தேவிகளுக்குரியது. அன்று காளியம்மனை சிவப்பு மலர் சாற்றி தேன் சிறிது வைத்து எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபட்டால் எதிர்மறை சக்திகள், மன அழுத்தம் நீங்கும் என்றார். சிறு வெல்ல துண்டு, கற்கண்டு கூட வைக்கலாம். சர்க்கரை பொங்கல், மசால் வடை காளிக்கு பிடித்தமானவை.

    * அமாவாசை அன்று எள் தீபம் ஏற்றுவது பித்ருகள் மற்றும் சூட்சும சக்திகளுக்குரிய நாள். கருப்பு எள், நல்லெண்ணை இட்டு தீபம் ஏற்றுவது பித்ரு தோஷ நிவாரணத்திற்கும், மறைமுக தடைகள் நீங்கவும் செய்யப்படுகின்றது.

    * விபூதி மனிதனின் நிலையற்ற வாழ்வினை உணர்த்தும். மனக்கட்டுப்பாடு, வைராக்கியத்தினைத் தரும்.

    * அமாவாசை அன்று பித்ரு தர்ப்பணம் செய்வது குடும்பத்தில் தொடர்ச்சியாக வரும் தடைகள், மனச்சோர்வு, வம்ச தோஷம் ஆகியவை குறைய உதவும்.

    * செவ்வாய், சனிக்கிழமைகளில் ராகு காலத்தில் மந்திரஜபம் செய்வது திருஷ்டி, பயம், பகை இவற்றினைக் குறைக்கும்.

    * கறுப்பு உளுந்து சனிக்கிழமைகளில் தானம் செய்ய சனி சம்பந்தமான தோஷங்களை நீக்கும்.

    * துர்கா கவசம் படிப்பது பாதுகாப்பு கவசம்.

    * வீட்டில் அன்றாடம் முடிந்தால் நெய் தீபம் ஏற்றலாம்.

    * சிவனுக்கு விளக்கு காணிக்கை செய்வது கர்ம வினைகளை குறைக்கும் என ஆகமங்கள் கூறுகின்றன.

    * நவதானியங்களை தானம் செய்வது நவக்கிரக தோஷங்களை குறைக்கும். ஒவ்வொரு தானியமும் 100 கிராம் இருந்தால் கூட போதும்.

    * பஞ்சமுக ஆஞ்சநேயர் வழிபாடு பயம், திடீர் அபாயம் இவைகளை வெகுவாய் குறைக்கும்.

    * பைரவருக்கு சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்வது கோப சக்தியை சாந்தப்படுத்தும் என்று சொல்லப்படுகின்றது.

    * வேப்பிலை தீய சக்திகளை விரட்டும் என்பது நாட்டுப்புற ஐதீகம். காளி,மாரியம்மன் வழிபாட்டில் முக்கியம்.

    * கால பைரவருக்கு எள் தீபம் ஏற்ற கால தோஷம், திடீர் தடைகள் குறையும்.

    * சனி பகவானுக்கு எள் எண்ணை தீபம் ஏற்ற வேலை தாமதம், மன அழுத்தம் குறையும்.

    * கருப்பு ஆடை தானம் செய்வது சனி பாதிப்பை குறைக்கும்.

    * அம்மன் கோவிலில் கூழ் ஊற்றுவது பாரம்பரிய படையல் போடுவதால் நோய், தொற்று, குடும்ப அச்சம் நீங்கும்.

    * 'ஓம் நமச்சிவாய'- ஆன்மீக உயர்வு தரும்.

    * வீட்டில் வடகிழக்கு திசையில் விளக்கு ஏற்றுவது வாஸ்து தோஷத்தினை நீக்கும்.

    * தாமிரம் உலோகம் காந்த சக்தி போல் செயல்படும்.

    * அன்னதானம்-மகா சக்தி, பெரிய புண்ணியம்.

    * வெள்ளிக்கிழமை பால் பாயாசம் நைவேத்தியம் அம்பாளுக்கு உகந்தது.

    * சனி பகவானுக்கு நல்ல எண்ணை (எள் எண்ணை) அபிஷேகம் சிறந்தது.

    * சிவ பூஜைக்கு வில்வம் அவசியமானது.

    * சிவனுக்குச் செய்யும் தேன் அபிஷேகம் வாக்கு இனிமை, மன அமைதி தரும்.

    * தினமும் நாம ஜபம் செய்வதால் மனக் கட்டுப்பாடு கிடைக்கும்.

    கமலி ஸ்ரீபால்


    * அம்மன் கோவிலில் குங்கும தானம் செய்வது பெண் சக்தி அனுக்கிரகம் கிடைக்கும்.

    * பைரவருக்கு வெல்லம் நிவேதனம் செய்வது கோப சக்தியினை சாந்தம் செய்யும்.

    * அமாவாசை அன்று மவுன விரதம் இருப்பதால் உள் உணர்வு அதிகரிக்கும்.

    * சிவ பூைஜயில் வெள்ளை மலர் இருந்தால் சமத்துவ குணம் பெருகும்.

    * துர்கா அஷ்டோத்ரம், நாம ஜபம் இவை தினமும் பாதுகாப்பு தரும்.

    * சிவ ராத்திரியில் முழு இரவு ஜபம் ஆன்மீக உயர்வு தரும்.

    * நாக பிரதிஷ்டை செய்வது வம்ச நன்மை தரும்.

    * சிவனுக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் செய்வது ஆரோக்கியம் தரும்.

    * துர்க்கைக்கு விளக்கு தானம் செய்வது வாழ்க்கையை ஒளி மயமாக்கும்.

    * குல தெய்வ பூஜை ஆண்டுக்கொரு முறையாவது செய்ய வேண்டும்.

    * ஸ்ரீ சக்தி நவாவரண பூஜை உயர்ந்த சக்தி தரும்.

    * பைரவருக்கு தேங்காய் தீபம் ஏற்றுவது திடீர் தடைகளை நீக்கும்.

    * வெள்ளிக்கிழமை-ஸ்ரீ சக்ர பூஜை- ஸ்ரீ சக்ரம் லலிதா பரமேஸ்வரியின் எந்திர வடிவம். வெள்ளிக்கிழமை பூஜை செய்தால் மனநிலை உறுதியாய் இருக்கும். குடும்பம் அன்புடன் ஒற்றுமையுடன் இருக்கும். செல்வ நிலை பெருகும் என நம்பப்படுகின்றது.

    * ஓம் நமசிவாய என்ற பஞ்சாட்சரம் சிவ தத்துவத்தின் சாரம். சிவராத்திரி அன்று ஜபம் செய்வதால் கர்ம வினைகள் குறையும் என அனுபவங்கள் கூறுகின்றன.

    * தினமும் குங்குமம் கொண்டு லலிதா தரிஸதி சொல்லி வீட்டிலேயே பாராயணம் செய்தால் பெண்களுக்கான மனம், உடல்நிலை நன்கு இருக்கும்.

    * கறுப்பு எள் தானம் செய்வது சனி, ராகு சம்பந்தமான தோஷங்களை நீக்கும். எள்ளு பொடி சாதம் செய்து கொடுக்கலாம்.

    * நவக்கிரக ஹோமம் என்பது ஒன்பது கிரகங்களையும் சமநிலைப்படுத்தி தடை, நோய், தாமதங்களை நீக்கும் என்பது நம்பிக்கை.

    * குல தெய்வத்திற்கு நெய் தீபம் ஏற்றுவது நல்லது.

    * துர்கா சப்தசதி பாராயணம் செய்வது எதிரிகள், பயம், மனதளர்வு ஆகியவற்றில் இருந்து பாதுகாப்பு தரும் என்பது ஐதீகம்.

    * சிவனுக்கு செய்யும் பால் அபிஷேகம் பாவ நிவாரணம், மன அமைதி தரும்.

    * செவ்வாய்க்கிழமைகளில் சிகப்பு மலர் கொண்டு அம்மனுக்கு சமர்ப்பிக்கலாம். இது சக்தி ரூபம்.

    * கால பைரவரை ஜபம் செய்ய பயம், திருஷ்டி நீங்கும்.

    * எலுமிச்சை எதிர்மறை சக்திகளை நீக்கும் என நாட்டுப்புற நம்பிக்கை உள்ளது.

    * பிரதோஷ நாளில் விளக்கேற்றுவது காரிய சித்தி தரும்.

    * சர்ப்ப தோஷ நிவாரண பூஜை-நாக தேவதை வழிபாடு செய்வது குழந்தை பாக்கியம் தரும், திருமணத் தடை நீக்கும்.

    * கால பைரவ அஷ்டகத்தினை படிப்பது திடீர் பயம், தடைகள் நீங்க உதவும்.

    * தாமரை கொண்டு லட்சுமி வழிபாடு செய்வது செல்வம் தரும்.

    * அம்மன் கோவிலில் வெற்றிலை தானம் செய்வது வாக்கு சக்தி அதிகரிக்கும்.

    * தினமும் மன சுத்தியுடன் தியானம் செய்வது அனைத்து பரிகாரங்களின் சாரம் எனப்படுகின்றது.

    இந்திய ஆன்மீக மரபில் பரிகாரங்கள் வாழ்வில் உடல், மனம், ஆன்மா இந்த மூன்றினையும் சமநிலைப்படுத்தும் வழிகளாகக் கருதப்படுகின்றன. இவை மந்திரம், எந்திரம், தந்திரம், பூஜை, விரதம், தானம், ஹோமம், ஜபம், தானம் போன்ற பல பிரிவுகளை உள் கொண்டவை. ஆகமங்கள், சாஸ்திரங்கள், புராணங்கள் மற்றும் தமிழ்நாட்டுப் புற வழிபாட்டு மரபுகள் ஆகியவற்றின் அடிப்படையில் உருவானவை இப்பரிகாரங்கள்.

    வாழ்க்கையில் ஏற்படும் தடைகள், பயம், மன அமைதி குறைவு, குடும்ப சிக்கல், பொருளாதார நெருக்கடி, நோய், திருமண தாமதம், பித்ரு தோஷம், நாக தோஷம் போன்ற பல கஷ்டங்களுக்கு ஆன்மீகத் தீர்வாக இவை கருதப்படுகின்றன.

    ஆயிரம், லட்சம் என பணம் செலவழிக்காமல் நாம் விரும்பும் உயர் சக்தி வடிவினை வணங்கி எளிய முறையில் பரிகாரங்கள் செய்யலாமே.

    இவை மருத்துவ, உளவியல் சிகிச்சைகளுக்கு மாற்றாக கூறப்படவில்லை என்பதனையும் நினைவில் கொள்ள வேண்டும்.

    இவை அனைத்தும் உடனே பலித்து விடும என்று கூறப்படவில்லை. உயர் சக்தியினை வேண்டும்போது அதற்கு பலன் இருக்கும். பரிகாரங்கள் மனம், உடலுக்கு பாதுகாப்பு தரும். உறுதியான மனமும், வலிவான உடலும் தந்து தடைகளை உடைத்து முன்னேறும், வெற்றி பெறும்.

    தியான முறையும், பிரார்த்தனை முறையும், பக்தி முறையும் அனைத்து மதங்களிலும் அறிவுறுத்தப்படுகின்றது. ஒளி மயமான உயர் சக்தியை ஒருவர் என்ன பெயர் கொண்டு அழைத்தாலும் சக்தி வந்திறங்கும். நம்மை நாம் முன்னேற்றிக் கொள்ள செலவில்லாது நாமே செய்யும் பரிகாரங்களும் ஒரு வழியே என்பதனை அறிவோமாக.

    Next Story
    ×