search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    இறை வழிபாட்டில் உணவு!
    X

    இறை வழிபாட்டில் உணவு!

    • காலையில் விளக்கேற்றி பழமோ அல்லது பாதாம், திராட்சை, முந்திரி வைத்து மதியத்தில் ஏதேனும் அன்னம், பாயாசம் போன்றவை வைக்கலாம்.
    • ஸ்ரீ முருக பிரானுக்கு துவரம் பருப்பு சேர்த்து கதம்ப சாதம், சாம்பார் சாதம் என பூஜைக்கு வைப்பர்.

    கமலி ஸ்ரீபால்நம்மிடையே பல நல்ல பண்புகள் உள்ளன. வீட்டிற்கு விருந்தாளிகள் வந்தால் வரவேற்று உபசரிப்போம். நேரம், காலம், நம் சக்திக்கு ஏற்ப அவர்களுக்கு தேவையானதைக் கொடுப்போம். குறைந்தபட்சம் டீ, காபி, மோர் போன்றவை கொடுப்போம். இதுவே திருமணம், வரவேற்பு, விழாக் காலங்களில் தடபுடலாக விருந்து அளிப்போம். நம் வீட்டில் அம்மா கூட அவரவருக்கு பிடித்த உணவு என ஸ்பெஷலாக செய்வார்.

    உணவு என்பது வாழ்வின் அவசியம். பிடித்த உணவு என்பது மனதிற்கு மகிழ்ச்சி தருவது. அது போலத்தான் நம் முன்னோர்கள் அன்றாட பூஜை, வழிபாட்டின் முக்கிய கட்டமாக அந்தந்த தெய்வத்திற்கேற்ப உணவினை படைத்து வந்தனர். பின்னர் அதனை பிரசாதம் என உண்டனர். இறைவனுக்கு படைக்கப்படும் உணவு என்பதால் அதனை சமைக்க அதிக கவனம் செலுத்தினர். இதனை மக்கள் உண்ணும்போது சுத்தமான, சத்தான உணவு மக்களுக்கு கிடைத்தது.

    இறைவனுக்கு உணவு அளிக்கும் வரை விரதம் இருந்து, பேசாது மனதினை ஒருமுகப்படுத்தி இறைவனையே நினைத்து செய்ததால் மனக்கட்டுப்பாடு இயற்கையாகவே அமைந்தது.

    பொதுவாக இறைவனுக்கு உணவு படைப்பது என்பது நம் நாட்டில் இடத்திற்கு இடம் மாறுபடும். தென் இந்தியாவில் வீடு, கோவில், இரண்டிலும் வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காய் என நைவேத்தியம் செய்வர். ஆனால் கடவுளின் விக்கிரகங்கள் மிக பெரிதாக இருக்கும்போது அதற்கேற்ற அளவில் வெண் பொங்கல், சர்க்கரைப் பொங்கல், புளி சாதம், எலுமிச்சை சாதம், வடை என பல விதங்களில் செய்வர். பொதுவில் விக்ரகங்களின் தோற்றத்திற்கேற்ற அளவில் உணவு கொடுக்க வேண்டும். பொதுவாக வீட்டில் படங்களை வைத்து வழிபடுவது சிறப்பு. அன்றாடம் வேலை வேலை என்று 7 மணிக்குள் ஓடும்போது படங்கள் இருந்தால் பால், முந்திரி, திராட்சை, பாதாம், கற்கண்டு என வைத்து விளக்கேற்றி வணங்கலாம். நல்ல நாள், கிழமைகளில் சிறப்பான உணவுகளை தயாரித்து வணங்கலாம். பொதுவில் 11 மற்றும் 12 மணிக்கு இறைவனுக்கு அன்னம் படைத்து வணங்கலாம். இன்றைய கால சூழ்நிலையில் இது சற்று கடினமான நிலையாகவே வேலைக்குச் செல்பவர்களுக்கு இருக்கின்றது.

    காலையில் விளக்கேற்றி பழமோ அல்லது பாதாம், திராட்சை, முந்திரி வைத்து மதியத்தில் ஏதேனும் அன்னம், பாயாசம் போன்றவை வைக்கலாம்.

    கோவில்களில் அபிஷேகம், ஆறு கால பூஜை செய்து தினம் தோறும் சிறப்பான உணவுகளை வைத்து வழிபடுபவர்.

    பிள்ளையாருக்கு இட்லி, கொழுக்கட்டை, சுண்டல் போன்றவை வைத்து வழிபடுவது தென்னகத்தில் வழிபடும் முறை.

    மோதி லட்டு எனப்படும் லட்டு வைத்து கணேஷ் பகவானை வழிபடுவது வடஇந்திய முறை.

    தென்னகத்தில் அநேக கோவில்களில் சிவபிரானுக்கு வெண் பொங்கல் அளித்து வழிபடும் முறை உள்ளது. நெய், மிளகு, சீரகம், முந்திரி, கருவேப்பிலை என நல்ல நறுமணத்தோடு இறைவனுக்கு அளிப்பது வழக்கம்.

    இதே வழக்கம் பெருமாள் கோவிலிலும் இருக்கும். வட இந்தியாவில் சிவபிரானுக்கு 'கீர்' எனப்படும் பால் பாயாசம் செய்வார்கள்.

    பொதுவாக சிவபிரான் யோக நிலையில் இருப்பதாக பேசப்படுவதால் அவரது உணவு எளிதாகக் கூட இருக்கும்.

    ஆனால் பெருமாளுக்கோ தடபுடலான உணவுகள் இடம் பெறும்.

    அம்பாளுக்கு கேரள முறைப்படி செய்யப்படும் பாயாசம் மிக சிறப்பானதாக கூறப்படுகின்றது. தேங்காய் பால், தேங்காய் துண்டுகள் சேர்த்து செய்யப்படும் இந்த பாயாசம் செய்யவே கூடுதல் நேரம் பிடிக்கும்.

    ஸ்ரீ ராம பிரானுக்கு பானகம், நீர் மோர் போன்றவை என்றால் ஸ்ரீ கிருஷ்ண பிரானுக்கு நெய், அப்பம், வெண்ணை முக்கிய பங்கு வகிக்கும்.

    ஸ்ரீ முருக பிரானுக்கு துவரம் பருப்பு சேர்த்து கதம்ப சாதம், சாம்பார் சாதம் என பூஜைக்கு வைப்பர்.

    மகா விஷ்ணுவுக்கு லட்டு, சர்க்கரை பொங்கல் என மஞ்சள் நிறமான உணவுகளை படைப்பர்.

    சரஸ்வதி அம்பாளுக்கு வெண்மையான வெண்பொங்கல் சிறப்பு ஆகும்.

    பிள்ளையாருக்கு கொழுக்கட்டை, லட்டு, இனிப்பு வகைகள் சேரும்.

    முருக பிரானுக்கு பழங்கள், கற்கண்டு, தேன், ஏலக்காய் சேர்த்த பஞ்சாமிர்தம் தனி சிறப்பு ஆகும்.

    துர்க்கை, காளி இவர்களுக்கு வெல்லம் சேர்த்த உணவு, காய்கறிகள் சேர்த்த உணவு செய்வார்கள்.

    காளிக்கு- எலுமிச்சை சாதம், மசால் வடையும் மிகச் சிறப்பு என்பர்.

    வாராகி அம்மனுக்கு மாதுளை, வேக வைத்த சர்க்கரை வள்ளி கிழங்கு பிடித்த உணவாகும்.

    மகாலட்சுமி என்றாலே குங்குமப்பூ, ஏலக்காய் பச்சை கற்பூரம் சேர்த்த பாயாசங்கள் சிறப்பு.

    பொதுவில் அம்மன் வழிபாட்டில் பாயாசம் என்பது அவசியமான ஒன்று.

    ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு வடைமாலை, தயிர் சாதம், சிறப்பு. கால பைரவருக்கு உப்பில்லாத தயிர் சாதம் விசேஷம். சனி, ராகு, கேது இவர்களுக்கு கறுப்பு உளுந்து, கறுப்பு எள், கொள்ளு, நல்ல எண்ணெய் சேர்த்த உணவு வகைகளை வைத்து வழிபடலாம்.

    இப்படி உணவு வகைகளாக கூறப்பட்டுள்ளதே என்று நினைக்கலாம்.

    கமலி ஸ்ரீபால்

    பக்தி மார்க்கத்தில் ஒரு வழிதான் கடவுளை நறுமணம் கொண்ட பூக்களால் அலங்கரித்து, விளக்கேற்றி, தூப, தீப வழிபாடுகள் செய்து பிரத்யேகமான உணவுகள் படைத்து வழிபடுவது என்பதாகும். நாம் எந்த முறையினை தேர்ந்தெடுக்கின்றோமோ அதனை முழுமையாய் அறிந்து முடிந்தவரை அதன்படி செயல்பட முனைவோமே.

    கடவுளுக்கு எந்த உணவும் தேவை என்பது கிடையாது.

    அவர் சர்வ வல்லமை படைத்தவர்.

    நாம் உண்ணும் அனைத்தும் அவர் வாங்கி கொடுத்ததே. நம் நன்றியினை காட்டும் விதமாகத்தான் இவ்வாறு செய்கின்றோம்.

    இது பக்தி மார்க்க இறைவழிபாடு, இல்லறத்தில் இருந்து இறை வழிபாடு செய்வோரின் கூற்று. இதில் அவர்களுக்கு ஒரு மகிழ்ச்சி. அவருக்கு படைத்து நாம் அதனை எடுத்துக் கொள்வதில் ஒரு ஆத்ம திருப்தி.

    தயிரில் தேன் கலந்து அளிப்பது என்பது முந்தைய காலத்தில் இருந்தது. பின்னர் தேன், தயிர், நெய், பால், நாட்டு சர்க்கரை என கலந்து கொடுத்தனர். பெண் தெய்வங்களுக்கு நெல்லிக்காய், எலுமிச்சை, மிளகாய் என கூட அளிக்கப்பட்டுள்ளது.

    மேலை நாடுகளில் சாக்லேட்களை அவர்கள் வணங்கும் தெய்வத்தின் முன்பு வைத்து வணங்குவர். கிராமங்களில் வெறும் வெல்லம் கூட வைத்து வழிபட்டு இருக்கின்றனர்.

    உக்கிர தெய்வங்கள், குல தெய்வங்கள், கிராம தெய்வங்கள், இவர்களுக்கு அசைவ உணவினை படைக்கும் வழக்கமும் உண்டு.

    மனித வாழ்க்கை என்றாலும் அல்லது உலகில் எந்த ஜீவராசியாக இருந்தாலும் உயிர் வாழ உணவு என்பது மிக முக்கியமானது.

    அதனால்தான் உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க இடம் இந்த மூன்றும் மிக அவசியம் என்கின்றோம்.

    ஆதிகால மனிதன் உணவிற்கும் இன்று நாம் உண்ணும் உணவிற்கும் உள்ள வித்தியாசங்கள் எவ்வளவு?

    'பசி வந்தால் பத்தும் பறந்திடும்' என்பர். இந்த பத்து என்ன? மானம், தான் பிறந்து வளர்ந்த பரம்பரை, படித்த படிப்பு, திறமை, அறிவு, தானம், தவம், முயற்சி, ஆளுமை, அன்பு இவை அனைத்தினையும் மனிதன் இழப்பான். எத்தனை கொடுமையானது பசி. பசிக்கு பணக்காரன், ஏழை என கிடையாது.

    சரி. உணவு என்று சொல்லி மூன்று வேளை கஞ்சி என்பதும், சரியானதே அதுவும் பசியின் பிரிவில் தான் வரும்.

    அறுசுவை கொண்ட உணவே மனிதனை மனிதனாக உருவாக்கும் பசி. பசியோடு ருசி எனப்படும் சுவையும் மிக அவசியம்.

    அனைவரும் நினைத்துப் பாருங்கள். ஒரு வேளை உணவில் சிறிது சுவை குன்றினாலும் வீட்டில் பேயாட்டம் ஆடுபவர்கள் எத்தனை பேர் உள்ளனர். நாக்குக்கு என்றும் அடிமை ஆகக் கூடாது என்றாலும் பதமான, இதமான உணவு என்பது அனைவருக்கும் அவசியம்.

    உங்களின் ஒளி சக்தியினை அறிய ஐம்புலன்களின் கட்டுப்பாடும் அவசியமே.

    Next Story
    ×