என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

சந்திர மேட்டின் ரேகை குறியீடு பலன்கள்
- சந்திர மேட்டில் வட்டம் காணப்பட்டால் அவர்களுக்கு நீர் மற்றும் நீர் சம்மந்தமான வியாதிகளால் ஆபத்து ஏற்பட இடம் உண்டு.
- உங்கள் முற்கால வாழ்க்கையை விட பிற்கால வாழ்க்கை அதிக நன்மைகளை செய்யும் விதமாக உள்ளது.
புத்தி ரேகைக்கு கீழ், விதி ரேகைக்கு முன் சுக்கிர மேட்டிற்கு நேர் மறுபுறம் அமைந்து இருக்கும் மேடு சந்திர மேடு எனப்படும். ஒருவரின் கற்பனை திறன், வாழ்வில் அவர் சந்திக்கும் மான அவமானங்கள், ஒருவரின் தனிப்பட்ட குணநிலை, மனோநிலை, ஞாபக சக்தி, மற்றவர்களை வசீகரித்து கட்டுப்படுத்தும் ஆற்றல் என அனைத்தையும் சந்திர மேட்டை கொண்டு அறியலாம்.
இந்த சந்திர மேட்டில் எந்தெந்த குறியீடுகள் எந்த மாதிரியான பலன்கள் தரும் என்பதை காண்போம் வாருங்கள்.
சந்திர மேட்டில் ஒரே ஒரு கோடு இருக்குமானால் அவர்களுக்கு கற்பனைத் திறன் அதிகரித்து காணப்படும். பல கோடுகள் இருப்பின் அழகை ஆராதிக்கும் இயல்பு காணப்படும். குறுக்கும், நெடுக்குமாக பல கோடுகள் இருப்பின் தேவை இல்லாத பயத்தை அவர்கள் மனதில் தரும். காதல் விவகாரங்களில் அவசர முடிவை எடுப்பதை கூடுமான வரையில் தவிர்க்கவும். மனைவி அல்லது பெண் வழியில் சொத்துக்கள் கிடைக்கப்பெறலாம். அயர்ச்சியை பார்க்காமல் உழைக்கக் கூடியவர்கள்.
சந்திர மேட்டில் பெருக்கல் குறி காணப்பட்டால் அது அவமானத்தை மற்றும் ஏமாற்றத்தை தர வல்லது. வாழ்க்கையில் வருமானத்தை விட செலவு அதிகம் இருக்கும். மனைவியினால் சில தொல்லைகள் ஏற்பட இடம் உண்டு.
சந்திர மேட்டில் நட்சத்திரம் காணப்பட்டால் அவர்களுக்கு பொது வாழ்வில் மதிப்பும், மரியாதையும்கூடும். ந. பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மை இருக்கும். மற்றவர்களின் மனதை கவரும் குணங்களுடன் இருப்பீர்கள். பிறர் உங்களின் வாக்கிற்கு கட்டுப்பட்டு இருப்பார்கள்.
சந்திரன் மேட்டில் பல கோடு காணப்பட்டால் அழகை வழிபடும் இயல்பு காணப்படும். பிறக்கும் பிள்ளைகள் எதிர்காலத்தில் படித்த அறிவாளிகளின் சமூகத்தில் பிரசித்தி பெற்று புகழுடன் இருப்பார்கள். நல்ல புத்தி கூர்மையுடன் விளங்குவீர்கள். எதிர்காலத்தில் ஆன்மீகத்தில் உங்களுக்கு நாட்டம் ஏற்பட்டு ஏதேனும் தெய்வ காரியத்தை கூட நீங்கள் எடுத்துச் செய்யலாம் அல்லது அதற்கு உதவலாம்.
சந்திரன் மேட்டில் குறுக்கு நெடுக்குக் கோடுகள் காணப்பட்டால் மனதளவில் தேவை அற்ற பயம் மற்றும் சந்தேக குணம் உங்களிடம் காணப்படும். எதிரிகள், விரோதிகள், அவதூறு பேசுபவர்கள் உங்களை சுற்றி அதிகம் இருக்கலாம். குடும்பம் அடிக்கடி இடமாற்றத்தை சந்திக்கும் படியாக இருக்கும். வாழ்வில் அலைச்சல் அதிகம் இருக்கும். திறமைகள் இருந்தும் கூட அவை வெளியில் வராமலே போகலாம். அதனால் உங்கள் திறமைகளை வெளிக்காட்டிக் கொள்ள வாய்ப்புகளை ஏற்படுத்துங்கள்.
பௌர்ணமி தினத்தில் அம்பாளை வழிபட்டு வாருங்கள் நன்மை உண்டு. சந்திர மேட்டில் சதுரம் காணப்பட்டால் செல்வங்களை சேமிக்கும் குணமும் அத்துடன் அவற்றை பாதுகாக்கும் குணமும் சேர்ந்தே காணப்படும். பூமி சம்மந்தமான பொருள்களால் நீங்கள் லாபத்தை பெறுவீர்கள். பெரிய மனிதர்களின் ஆதரவு இருக்கும். உங்களுக்குப் பிறக்கும் பிள்ளைகள் எதிர்காலத்தில் படித்த அறிவாளிகளின் சமூகத்தில் பிரசித்தி பெற்று புகழுடன் இருப்பார்கள்.
சந்திர மேட்டில் முக்கோணம் காணப்பட்டால் கவிதை எழுதுவதில் ஆர்வம் இருக்கும். கலைத்திறமை மேம்படும். மற்றவர்களின் மனதை கவரும் குணங்களுடன் நீங்கள் இருப்பீர்கள். மனைவி அல்லது பெண் வழியில் சொத்துக்கள் கிடைக்கப்பெறலாம் புண்ணியகாரியங்களில் உங்களுக்கு பற்றுதல் இருக்கும். எதிர்காலத்தில் நீங்கள் தெய்வ காரியங்களில் கூட ஈடுபடுவீர்கள்.
சந்திர மேட்டில் வட்டம் காணப்பட்டால் அவர்களுக்கு நீர் மற்றும் நீர் சம்மந்தமான வியாதிகளால் ஆபத்து ஏற்பட இடம் உண்டு. நீங்கள் நீர் நிலைகளில் இறங்கும் சமயத்தில் அதிக கவனத்துடன் இறங்குதல் நலம். தாராள மனது உடையவர்களாக இருப்பீர்கள்.
இதனால் அதிகம் ஏமாற்றப்படலாம். வருமானத்தை விட செலவு அதிகம் இருக்கும். எனினும் பிற்காலத்தில் ஓரளவு செல்வ நிலையை அடைவீர்கள்.
சந்திர மேட்டில் வலை காணப்பட்டால் வாழ்வில் அதிக ஏமாற்றத்தை நீங்கள் சந்திப்பீர்கள். பிறகு தெளிவு பெற்று ஞானம் பெறுவீர்கள். உங்கள் வாழ்க்கை ஒரு சக்கரம் போலவே இருக்கும். நன்மை, தீமைகள் மாறி - மாறி வந்து கொண்டே இருக்கும். ஆயுள் தீர்க்கம் உண்டு
சந்திர மேட்டில் புள்ளி அல்லது கரும் புள்ளி காணப்பட்டால் காதல் விஷயங்களில் அவசர முடிவும் அதனால் தோல்வியும் ஏற்பட இடம் உண்டு.
சந்திர மேட்டில் சூரியனின் சின்னம் காணப்பட்டால் உழைப்பை நம்பாமல் அதிகம் அதிர்ஷ்டத்தை நம்பி வீணாய் போவார்கள். எடுப்பார் கைப்பிள்ளையாக இருப்பார்கள். இதனால் தவறான முடிவுகளை எடுத்து துன்பம் அடைவார்கள். நீங்கள் யூகங்களின் அடிப்படையில் செயல்படுவதை முடிந்தவரையில் தவிர்ப்பது நல்லது. உங்கள் நலம் விரும்பும் பெரியோர்களின் ஆலோசனைப் படி செயல் பட்டாலே வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை அடைவீர்கள். உத்யோகத்தில் நிறைய வேலை மாற்றங்களை சந்தித்தாலும் கூட வாழ்வில் சோர்வு அடைய மாட்டீர்கள். இதனால் உங்கள் முற்கால வாழ்க்கையை விட பிற்கால வாழ்க்கை சுபமாக இருக்கும்.
அ.ச.இராமராஜன்
சந்திர மேட்டில் சந்திரனின் சின்னம் காணப்பட்டால் அவர்களிடம் சுயநலம் அதிகம் இருக்கும். எப்போதும் தவறான முடிவுகளை எடுக்கும் தன்மை அவர்களிடம் காணப்படும். ரிஸர்வ்ட் டைப் என்று உங்களை சொல்லலாம். எனினும் நீங்கள் அதிகம் உணர்ச்சிவசப் படக்கூடியவர்கள். இதனால் சில காரியங்களில் நீங்கள் தவறான முடிவுகளை கூட எடுக்க நேரிடலாம். அதனால் எப்போதுமே நீங்கள் நிதானமாக செயல்படுவது உங்களுக்கு நல்லது.
சந்திர மேட்டில் செவ்வாயின் சின்னம் காணப்பட்டால் அதிக சிந்தனை தடுமாற்றத்தை தரும். மனக்குழப்பத்தை இந்த அமைப்பு தந்து விடும் நன்மை தீமைகள் அறியாது, லாப நஷ்டங்களை அறியாது எண்ணின மாத்திரத்தில் எதையும் செய்து விட்டு அலைச்சல் முதலியவற்றை நீங்கள் அடையலாம். எனவே நிதானமாக யோசித்து செயல்படுங்கள்.
சந்திர மேட்டில் புதனின் சின்னம் காணப்பட்டால் அதிக தெய்வ பக்தி கொண்டவர்கள். உங்கள் வாழ்க்கையில் ஏற்றமும், இறக்கமும் அதிகம் காணப்பட்டாலும் கூட அதைப் பற்றி எல்லாம் நீங்கள் அலட்டிக் கொள்ளாமல் உங்கள் வாழ்க்கைப் படியில் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறுவீர்கள்.
சந்திர மேட்டில் குருவின் சின்னம் காணப்பட்டால் அவர்களிடம் தைரியம் அதிகம் காணப்படும். எதையும் கற்றுக் கொள்ளும் ஆர்வம் இருக்கும்.. உங்கள் பிள்ளைகளுடன் எதிர்காலத்தில் கருத்து வேறுபாடுகள் வராமல் பார்த்துக் கொள்ளவும். பணத்தை சிக்கனமாக செலவு செய்து வாழ்க்கை வசதிகளை நீங்கள் பெருக்கிக் கொள்வீர்கள்.
சந்திர மேட்டில் சுக்கிரனின் சின்னம் காணப்பட்டால் பெண் மோகம், உலகியல் பற்று அதிகம் காணப்படும். சந்திர மேட்டில் சனியின் சின்னம் காணப்பட்டால் தான் செய்ததே சரி என்ற எண்ணம் இருக்கும். தவறுகளைக் கூட சரி என்று வாதிடுவார்கள். இதனால் வாழ்க்கையில் நீங்கள் நிறைய இழப்புகளை சந்திக்க இடம் உண்டு. எனினும் போராடி வெற்றி காணிப்பீர்கள். உங்கள் வாழ்வில் அலைச்சல் அதிகம் இருக்கும். திறமைகள் இருந்தும் கூட அவை வெளியில் வராமலே போகலாம். அதனால் உங்கள் திறமைகளை வெளிக்காட்டிக் கொள்ள வாய்ப்புகளை ஏற்படுத்துங்கள். விநாயகரை வழிபட்டு வாருங்கள். இனி வரும் காலங்களில் வெற்றி உண்டு.
சந்திர மேட்டில் ராகுவின் சின்னம் காணப்பட்டால் அபார நம்பிக்கை காணப்படும். இந்த அபார நம்பிக்கையால் சில இடங்களில் நீங்கள் சறுக்கல்களையும் கூட சந்திக்க இடம் உண்டு. எனவே கவனமுடன் இருங்கள். உங்கள் வாழ்க்கையின் பிற்பகுதியில் கண் சம்மந்தமான பிரச்சனைகள் வந்து போக இடம் உண்டு. அதனால் கண்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள். சூரிய நமஸ்க்காரம் செய்வது தங்களுக்கு நன்மை பயக்கும்.
சந்திர மேட்டில் கேதுவின் சின்னம் காணப்பட்டால் பொறுமை இல்லாமல் அவசர முடிவுகளை எடுத்து சிரமம் அடைவார்கள். உங்களிடம் கோபமும், பிடிவாத குணமும் கலந்து இருக்கும். இதனால் அவசரத்தில் நீங்கள் சில தவறான முடிவுகளையும் கூட எடுக்க நேரிடலாம். அதனால் கோபத்தை விட்டு நீங்கள் நிதானமாக செயல்பட்டால் வாழ்க்கையில் நீங்கள் பல வெற்றிகளை அடைவீர்கள். உங்கள் முற்கால வாழ்க்கையை விட பிற்கால வாழ்க்கை அதிக நன்மைகளை செய்யும் விதமாக உள்ளது.
செல்பேசி- 9965799409






