என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    அதிக மாவு சத்து உணவு வேண்டாம்: மருத்துவம் அறிவோம்-91
    X

    அதிக மாவு சத்து உணவு வேண்டாம்: மருத்துவம் அறிவோம்-91

    • எல்லாவற்றையும் நொடியில் மாற்ற முடியாது.
    • சில நேரம் எதுவும் செய்யாது சற்று அமைதியாய் அமருங்கள்.

    நமக்கு சமுதாயத்தில் ஒரு மதிப்பு, மரியாதை, வேணுமா? அப்ப இதெல்லாம் அவசியம் செய்யணும்.

    * சொன்ன வார்த்தையை காப்பாற்றணும். ஒரு தடவை தட்டினாலும் போச்சு.

    * கொஞ்சமா பேசணும். நிறைய கவனிக்கணும். கேட்கணும்.

    * புரளி பேச்சு கூடவே கூடாது. மக்கள் நம்புபவராக இருக்க வேண்டும்.

    * நாம் தவறு செய்திருந்தால் ஒத்துக் கொள்ளும் பக்குவம் வேண்டும்.

    * நம் எல்லைகள் வரையறுக்கப்பட்டு இருக்க வேண்டும்.

    * மற்றவர்கள் கத்தும் போது நாம் அமைதியாக இருக்க வேண்டும்.

    * பிறருக்கு உதவும் போது பதிலுக்கு எதனையும் எதிர்பார்க்கக் கூடாது.

    * காரணமின்றி பேச வேண்டாமே.

    முயற்சி செய்து பாருங்களேன்!

    மேலும் நான் உபயோகமானவன். நான் உறுதியானவன். நான் என்னை முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன். சூரியனின் ஒரு சிறிய கதிர் நான். நான் தைரியமானவன். நான் விழிப்புணர்வு கொண்டவன். நான் என்னை நம்புகின்றேன். நான் வெற்றி பெறுவேன். நான் கட்டுப்பாடுகள் கொண்டவன். இப்படி என்றாவது உங்களைப் பற்றி நினைத்தது உண்டா? இனியாவது நினைத்துப் பாருங்கள்.

    அடிக்கடி ரொம்ப ரொம்ப யோசிக்கின்றீர்களா?

    * சரி. ஆனால் அதில் ஏதேனும் கிடைத்ததா?

    * மண்டை நிறைய ஸ்டிரெஸ் தான் கூடியது.

    * கடந்த காலத் தினை மனதில் திரும்ப திரும்ப ஓட விடக்கூடாது.

    * எல்லாவற்றையும் நொடியில் மாற்ற முடியாது.

    * இம் மாதிரி நேரங்களில் ஆழ்ந்து மூச்சை இழுங்கள்.

    * எதற்கும் அதிகமாக ரியாக்ட் செய்ய வேண்டாம்.

    * சில நேரம் எதுவும் செய்யாது சற்று அமைதியாய் அமருங்கள்.

    * விழிப்புணர்வோடு இருங்கள். அவ்வளவுதான்.

    உங்களுக்கு சோர்வு இருக்கா? சதைகளில் வலி இருக்கா? எலும்பு வலி இருக்கா? குறிப்பாக பின் முதுகு, கால்கள், இடுப்பு இவற்றில் வலி இருக்கா? எலும்பு முறிவு, தேய்மானம் இருக்கா? முடி கொட்டுதா? மனச்சோர்வு இருக்கா? எடை கூடுதா? காயங்கள் மெதுவா ஆறுதா? ஈறுகள் பாதிப்பு இருக்கா? சரியான தூக்கம் இல்லையா? மருத்துவரிடம் சென்று வைட்டமின் 'டி' குறைபாடு இருக்கின்றதா? என்று பரிசோதித்துக் கொள்ளலாமே.

    * ஒருவர் பிறர் மீது மற்றும் நிகழ்வுகள் மீது எப்போதும் குற்றம் குறை கூறாது இருந்தால்

    * பிறரை எப்போதும் எடை போடுபவராகவே இருந்தால்,

    * பிறர் மீது பழி சுமத்துபவராக இல்லாமல் இருந்தால்

    * பொய் சொல்லாதவராக இருந்தால்

    * சண்டை, வம்பு என இல்லாமல் இருந்தால்

    * தேவையில்லாத விஷயத்தில் தலையீடு செய்யாதவராக இருந்தால்

    * பிறரை காயப்படுத்துபவராக இல்லாது இருந்தால் அவர் வாழ்வில் வெற்றி பெற்றவர் ஆவார்.

    * கால்ஷியம் நிறைந்த உணவுகள்

    பால், தயிர், சீஸ், பன்னீர், பச்சை காய்கறிகள், கொட்டைகள், விதைகள், மீன், ஊட்டச்சத்து சேர்க்கப்பட்ட ஓட்ஸ், சோயா...

    வைட்டமின் டி சத்து- முட்டை மஞ்சள் கரு, மீன், ஊட்டச்சத்து சேர்க்கப்பட்ட பால், தயிர், கொட்டைகள், விதைகள், பருப்பு, எலும்பு சூப் போன்றவை ஆகும்.

    * காலையில் சாப்பிடாமல் அல்லது வெறும் காபி, டீ என்று ஒடுபவர்களுக்கு எத்தனை சொல்லியும் கேட்கவில்லையென்றால் மருத்துவர்கள் சாமர்த்தியமாய் கையாளும் விதம் ஒன்று உள்ளது.

    * உங்களுக்கு சீக்கிரம் முதுமை தோற்றம் வரும்

    * தலைமுடி ரொம்ப கொட்டும் * தோல் பொலிவு இழக்கும்.

    இப்படி பல காரணங்கள். ஆனால் உண்மை காரணங்களை சொல்லி விட்டால் போதும். ஒழுங்காய் காலை உணவினை எடுத்துக் கொள்வர். ஏனோ இது மாஜிக் போல் சிறுவர் முதல் முதியவர் வரை 'கிளிக்' ஆகும். தோற்றத்திற்கு அத்தனை முக்கியத்துவம் உள்ளது.

    ஓட்ஸ், ராகி, பழைய சாதம், ஏதேனும் பழம், ஸ்முதி என இப்படி சாப்பிட்டாலே போதுமே.

    * நடந்து கொண்டே இருங்கள்- இது செய்யும் நன்மைக்கு அளவே இல்லை. நாள் முழுவதும் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை 10 நிமிடமாவது நடக்க வேண்டும்.

    * தனியாக உடற் பயிற்சி செய்வது கஷ்டமா? ஒரு சிறிய குரூப் உடன் சேருங்கள். மற்றவர்களைப் பார்த்து நமக்கு புத்தி வரும்.

    * சத்தமில்லாத, சூடு இல்லாத அறையில், பளீர் என்று கண்ணை கூசும் வெளிச்சம் இல்லாத சூழலில் அமைதியாய் 7 அல்லது 8 மணி நேரம் உறங்குங்கள்.

    கமலி ஸ்ரீபால்


    * சிறு குழந்தைகளோடு சிறிது நேரம் விளையாடுங்கள்.

    * ஆக்கப்பூர்வமான சிந்தனை உள்ளவர்களோடு ஒரு சில மணி நேரமாவது இருங்கள்.

    * 2 அல்லது 3 டம்ளர் தண்ணீர் அருந்துகின்றீர்களா? என்று சோதித்துக் கொள்ளுங்கள்.

    * காலையில் எழுந்தவுடன் ஆக்கப்பூர்வமாக நினையுங்கள்.

    * சொந்தமாக கொஞ்சம் சமைத்துதான் பாருங்களேன்.

    * தினமும் முடிந்தவரை ஒரே நேரத்தில் தூங்கச் செல்லுங்கள்.

    * வெளியே கடைக்கு செல்லும் ேபாது நன்கு சாப்பிட்டு விட்டு செல்லுங்கள். எந்த நொறுக்கு தீனியும் வேண்டி இருக்காது.

    * வெளியில் சாப்பிடுவதனை வெகுவாய் குறைத்துக் கொள்ளுங்கள்.

    * அன்றைய நாளுக்கான அனைத்தையும் முதல் நாளே முறைப்படுத்திக் கொள்ளுங்கள்.

    * புகை, மது கூடாது.

    * 20 நிமிட பகல் குட்டி தூக்கம் நல்லதே.

    * மன நிம்மதியினை பாதிப்பவர்களை கிட்டவே சேர்க்க வேண்டாம்.

    * புன்னகையுங்கள்.

    * அதிக மாவு சத்து உணவு இன்றைய வாழ்க்கை முறைக்கு தீமையே.

    * அப்பளம், ஊறு காய், கூடுதல் உப்பு இவற்றினை நீக்கி விடுவோம்.

    * தினம் 20 அல்லது 30 நிமிடம் நடக்கலாமே.

    * பல் தேய்ப்பது, பிளாஸ் எனப்படும் முறையில் பற்களை சுத்தம் செய்வது பற்களுக்கு மட்டு மல்ல இருதய பாதுகாப்பிற்கும் நல்லது.

    * குறைந்த அளவில் டி.வி. பாருங்கள்.

    * 10 நிமிடமாவது தியானம் செய்யக் கூடாதா?

    * எல்லா கோபங்களையும், ஏமாற்றங்களையும் ஒரு பேப்பரில் எழுதுங்கள். பின் அதனை கிழித்து விடுங்கள். மனதின் சுமை நீங்கி விடும்.

    * ஒவ்வொரு உணவிலும் காய்கறிகள் இருக்க வேண்டும்.

    * கடவுள், பிரபஞ்சம், நமக்கு வாழ்வில் உதவியவர்களுக்கு நன்றி சொல்லுங்கள்.

    * நிமிர்ந்து இருங்கள்.

    * ஒமேகா 3 நன்கு சேர வேண்டும். ஆளி விதை கூட சிறந்ததே.

    * இருக்கும் இடம், மேஜை, பீரோ இவற்றினை சுத்தமாய் முறையாய் வைத்திருங்கள்.

    * ஆரோக்கியமான உணவுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுங்கள்.

    * குறிப்பிட்ட நேரத்தில் காலை எழுந்து பழங்குகள்.

    * நொறுக்கு தீனியினை பழம், காட்டேஜ் சீன் என மாற்றுங்கள்.

    * சோடா, அதிகம் சர்க்கரை சேர்த்த பானங்கள் வேண்டாமே.

    * மூளைக்கும் பயிற்சி கொடுங்கள். செஸ், குறுக்கெழுத்து போட்டி இவை உதவும்.

    * பிறரையும், உங்களையும் மன்னிக்க கற்றுக் கொள்ளுங்கள்.

    * 80 சதவீதம் வயிறு நிறைவுடன் சாப்பிடுவதை நிறுத்தி விடுங்கள்.

    * இயற்கையோடு அதிகம் ஒன்றி இருங்கள்.

    * முழு தானிய உணவிற்கு மாறி விடுங்கள்.

    வயிறு-குடல்: சாப்பிட்ட வுடன் பல நேரங்களில் வயிறு உப்பிசம் தெரிகின்றதா?

    * நன்கு தூங்கினால் கூட சோர்வாகவே இருக்கின்றதா?

    * நீங்கள் மட்டும் இல்லை. நிறைய பேர் இப்படி இருக்கின்றார்கள்.

    இது உங்கள் வயிறு, குடல் சம்பந்தப்பட்ட பிரச்சினை. வயிறும், குடலும் நமது சக்திக்கான மறைவான சாவி. ஆரோக்கியம் இதன் அடிப்படையில் வெகுவாக உள்ளது. ஆரோக்கியமான குடல்-உணவுப் பாதை என்றால்

    * உணவு நன்கு செரிக்க வேண்டும். * சத்துக்கள் உறிஞ்சப்பட வேண்டும்.

    * உடலில் சக்தி இருக்க வேண்டும். * நோய் எதிர்ப்பு சக்தி வேண்டும்.

    * வீக்கம், உப்பிசம் இன்றி இருக்க வேண்டும்.

    ஆனால் குடல் ஆரோக்கிய மற்று இருக்கும் போது....

    * உப்பிசம், குழப்பம், சரியான ஜீரணமின்மை, ஏதாவது கொரித்து கொண்டே இருக்க வேண்டும் என்ற வேகம், சரும பாதிப்பு, அடிக்கடி நோய் வாய்படுதல், மனநிலை மாறுபடுதல் என இருக்கும்.

    இவர்கள் வாழைப்பழம், பச்ச பயிறு, ஓட்ஸ், கொழுப்பில்லா தயிர், பிளாக் விதை, இட்லி போன்ற ஆவியில் வேக வைத்த உணவுகள், தேவையான அளவு நீர் இவற்றினை எடுத்துக் கொள்ளலாம். சில மருந்துகள், எப்போதும் மன உளைச்சலுடன் இருப்பது ஒவ்வாத உணவுகள் இவைகளை நாமே தவிர்த்து விடலாம். இருப்பினும் மருத்துவ ஆலோசனை அவசியம் என்பதனை நினைவில் கொள்ள வேண்டும்.

    Next Story
    ×