என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    திருச்செந்தூர் கோவிலில் அரங்கேற்றம் செய்யப்பட்ட கந்தபுராணம் சுருக்கம்
    X

    திருச்செந்தூர் கோவிலில் அரங்கேற்றம் செய்யப்பட்ட கந்தபுராணம் சுருக்கம்

    • சம்பந்த சரணாலயரின் பேச்சிலும் செயல்பாட்டிலும் தனிச்சிறப்பைக் கண்ட மன்னர் அவரை தெய்வமாகப் போற்றினார்.
    • சுவாமிகளும் சுருக்கமான நூலை இயற்றி அதற்குக் கந்தபுராணச் சுருக்கம் என்று பெயர் சூட்டினார்.

    திருநெல்வேலியில் சைவ வேளாளர் மரபில் தோன்றியவர் சம்பந்த சரணாலயர் ஆவார். திருநெல்வேலி சிந்துபூந்துறையில் உள்ள தருமபுர ஆதீன மடாலயத்தில் வெள்ளியம்பலவாண தம்பிரான் சுவாமிகளிடம், வடமொழி, தென்மொழி ஆகியவற்றை ஐயமின்றிக் கற்றுணர்ந்தவர். தருமபுர ஆதீனத்து ஆறாவது பட்டமாக விளங்கிய திருஞான சம்பந்த தேசிகரிடம் சைவ சந்நியாசம் மற்றும் ஞானோபதேசம் பெற்று அவரிடம் நீங்காத அன்பு கொண்டு விளங்கினார்.

    இதனால் இவர் சம்பந்த சரணாலயர் என்று அழைக்கப்பெற்றார். இவரது இயற்பெயர் மறைந்து சிறப்புப் பெயரே நிலைத்தது.

    புலமையாலும் ஒழுக்கத்தாலும் ஞானத்தாலும் சிறந்து விளங்கிய சம்பந்த சரணாலயரின் புகழ் தமிழ்நாட்டையும் கடந்து பல்வேறு இடங்களில் பரவியது. அந்த வகையில் இவரது பெருமையை அறிந்த மைசூர் மாமன்னர் மகாராஜா இரண்டாம் தொட்ட தேவராஜ உடையார் இவரோடு பழக விரும்பினார். அவர் விருப்பத்தின்பேரில் சுவாமிகள் மைசூர் சென்றார்.

    அங்கு மைசூர் மாமன்னரைச் சந்தித்தார். தமிழ்மொழிப் பற்றும் தெய்வப்பற்றும் மிக்க மன்னர், சம்பந்த சரணாலயரைத் தம்முடன் நீண்டநாள் தங்கும்படி கேட்டுக்கொண்டார். மன்னரின் அளவிடமுடியாத அன்பிற்குக் கட்டுப்பட்ட சுவாமிகள் அதற்குச் சம்மதித்தார். தினமும் கந்தபுராணத்தின் உரையை அவர் மூலமாக கேட்டு வந்த மன்னர், இப்புராணம் மிகவும் நீண்டதாக உள்ளதால், கந்தபுராணத்தைச் சுருக்கி, சுருக்கமாக ஒரு நூல் எழுதுமாறு கேட்டுக் கொண்டார். அதன்பேரில் சுவாமிகளும் சுருக்கமான நூலை இயற்றி அதற்குக் கந்தபுராணச் சுருக்கம் என்று பெயர் சூட்டினார்.

    கச்சியப்ப சிவாச்சார்யர் இயற்றிய கந்தபுராணம் சொற்பொருள் நயமும் பக்திச் சுவையும் மிகுந்தது. தமிழ்ப் புலவர்களாலும், முருகப் பெருமானின் அடியார்களாலும் விசேஷமாகப் போற்றப்படுகின்றது. கந்த சஷ்டி விழாவின் 6 நாட்களிலும் அதனைப் பாராயணம் செய்வது மரபு. கந்தபுராணம் 6 காண்டங்கள் 141 படலங்களுடன் 10,346 செய்யுட்கள் கொண்டது. கச்சியப்பர் பாடிய கந்தப் புராணத்தில் உள்ள வரலாறுகளை 1048 செய்யுட்களில் கந்தபுராணச் சுருக்கம் என்ற நூலை ஆறு பகுதிகளாக இயற்றியுள்ளார் சம்பந்த சரணாலயர்.

    தமது விருப்பப்படி சம்பந்த சரணாலயர் இயற்றிய சுந்தபுராணச் சுருக்கம் நூலை எங்கே அரங்கேற்றம் செய்யலாம் என்று மன்னர் கேட்ட போது சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூரில் அரங்கேற்றம் செய்வது மிகவும் சிறப்பு என்றார் சுவாமிகள். அதற்கான ஏற்பாடுகள் தயாரானது.

    அதற்கு முன்னதாக கந்தபுராணச் சுருக்கம் நூலின் பெருமையையும், மகிமையையும் அறிந்த மைசூர் மன்னர், சுவாமிகளுக்குக் காணிக்கையாகப் பொன்னும் மணியும் வழங்கினார். பற்றற்றவராக வாழ்ந்து வந்த சாமிகள், இவை எம் குரு மூர்த்திகளின் திருவடிகளுக்கு ஆகுசு என்று அதை வைத்துவிட்டார் மன்னரும் மீண்டும் பொன்னும் மணியும் அளிக்க இவை முருகப்பிரானுக்கு ஆகுக என்றார் மன்னர் விடவில்லை.

    மூன்றாவது முறையும் பொன் பொருள் கொடுத்தார். அவற்றை இவை அடியார்களுக்கு ஆகுக என்று வைத்துவிட்டார் சுவாமிகள். அவரின் வைராக்கிய சிறப்பைக் கண்ட மன்னர். சம்பந்த சரணாலய சுவாமிகளைச் சிவிகையில் எழந்தருளச் செய்து நகர்வலம் செய்விக்க விரும்பினார், அதை அறிந்த சுவாமிகள், குருநாதர் திருவுள்ளக் கருத்தறியாமல் இதனைச் செய்ய மாட்டேன் என்று கூறிவிட்டார். மன்னரும் தரும்புர ஆதீன பண்டார சனனதிகளைத் தொடர்பு கொண்டு, அவரது சம்மதம் பெற்று நகர்வலம் செய்வித்து மகிழ்ந்தார்.

    பிறகு தமது குருநாதரின் ஆசியடன் திருச்செந்தூர் முருகள் ஆலயத்தை அடைந்த சம்பந்த சரணாலயர் கந்த புராணச் சுருக்கம் நூலை அரங்கேற்றி மகிழ்ந்தார். தொடர்ந்து சில காலம் மைசூரில் இருந்த சுவாமிகள், அந்த நாட்டு மன்னரிடமும் மக்களிடமும் விடைபெற்று திருத்தல யாத்திரை புறப்பட்டார். குன்று தோறாடும் குமரன் தலங்களை வழிபட்டுத்துதித்தவர் தரும்பரத்தை அடைந்தார், தருமை ஆதீன குருமூர்த்திகள் இவரது பணியைப் பாராட்டி வாழ்த்தினார். அங்கே தங்கியிருந்த காலத்தில் அந்த ஆதீனத்தின் முதல் ஞானாசார்யராகிய ஸ்ரீலஸ்ரீ குருஞானசம்பந்தர் மீது கொரத்தினமாலை என்ற நூலை இயற்றினார் சுவாமிகள்.

    முருகப்பெரு மானுக்காகவே தமது வாழ்வை அர்ப்பணித்துக் கொண்ட சம்பந்த சரணாலயர் இயற்றிய கந்தபுராணச் சுருக்கம் நூல், தமிழ் இலக்கியத்தில் மிகச் சிறந்த அணிகலன்களில் ஒன்றாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறது. கருணை பொழியும் இருகடைக் கண்ணால் பார் புகழும் ஞான சம்பந்தன் எந்தை பரமன் என்று தமது குருநாதராகிய ஸ்ரீலஸ்ரீ திருஞான சம்பந்த தேகெரைத் துதிக்கும் சம்பந்தன் சரணாலயர் தமது குருவின் திருவருளாலேயே இந்த நூலை பாடியதாகச் சொல்றார் இவ்வளவு பெரிய நூலைச் சுருக்கி குன்றாமல் செய்வதற்குரிய தகுதி என்பால் இவ்லை எனக்கும் இதற்கும் எத்தனையோ தூரம் என்று அவர் கூறுவது அவரது தன்னடக்கத்தை காட்டுகிறது.

    ஒரு சமயம் சம்பந்த சரணாலயரின் கரிய உருவத்தைப் பார்த்த மன்னர், "அண்டங்காக்கை போல் உள்ளாரே". என்று நகைத்தார். அதற்கு சுவாமிகள், சற்றும் மனம் கோணாது புன்னகைத்து, "தாங்களே அண்டங்காக்கைக்குப் பிறந்தவர்", என்று சாதுரியமாகக் கூறினார். அதன் சொல் நயத்தையும் பொருள்நயத்தையும் கண்டு மன்னர் மகிழ்ந்தார். அண்டம் என்பது உலகையும், காக்கை என்பது காவல் புரிபவர் என்பதைக் குறிக்கும் என்பது இங்கு நினைவுகூரத்தக்கது. இதன்மூலம் சுவாமிகள் கரிய நிறம் கொண்டவர் என்பதையும், நுண்ணறிவு மிக்கவர் என்பதையும் அறிய முடிகிறது.

    சுவாமிகளின் அறிவாற்றலால் மனம் மகிழ்ந்த மைசூர் மன்னர், தமது சமஸ்தானத்திலேயே அவரைப் பலகாலம் வைத்திருந்து மரியாதை செய்துவந்தார். என்றாலும், சுவாமிகள் முற்றும் துறந்த முனிவர் என்பதால், என்றுமே மாதுகரி பிச்சை எடுத்து உண்பார். மாதுகரி பிச்சை என்பது சைவ சந்நியாசிகளுக்குரிய பிச்சைகளுள் ஒன்றாகும். பிறரை அணுகாமல், பலரிடம் சிறுகச் சிறுக அன்னம் வாங்கிப் புசிப்பது ஆகும். மாபெரும் சமஸ்தானத்தில் விருந்தினராக இருந்தபோதிலும், தமக்கென எந்தவிதப் பற்றுமின்றித் தம் வாழ்நாளை இறைவழிக்கே பயன்படுத்தி வந்தார்.

    சம்பந்த சரணாலயரின் பேச்சிலும் செயல்பாட்டிலும் தனிச்சிறப்பைக் கண்ட மன்னர் அவரை தெய்வமாகப் போற்றினார். அவரைச் சிலகாலம் தம்முடன் தங்கியிருக்க வேண்டினார். மன்னரின் விருப்பப்படி சம்பந்த சரணாலயரும் அங்கே தங்கினார். அவ்வாறு இருந்த காலத்தில் தமக்கென்று எதுவும் வேண்டாம் என்று சொல்லிவிட்டு தினமும் பிச்சை எடுத்து உண்ணுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இவரது வைராக்கியம் மன்னருக்குப் பெரும் வியப்பை ஏற்படுத்தியது. வெள்ளியம்பலவாண தம்பிரான் சுவாமிகளிடமும், துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகளிடமும் இவர் பயின்றவர் என்பதால், இவரது காலம் 17-ம் நூற்றாண்டின் இடைப்பகுதி என்று கருதப்படுகிறது.

    இதே போன்று திருச்செந்தூர் முருகன் நிகழ்த்திய மற்றொரு அற்புதத்தை அடுத்த வாரம் காணலாம்.

    Next Story
    ×