என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    உடலில் சேரும் நச்சுவை தடுப்போம்...!
    X

    உடலில் சேரும் நச்சுவை தடுப்போம்...!

    • வாழ்க்கையே போர்தான். அதுவும் உடலையும், உள்ளத்தினையும் பாதுகாப்பது மிகப்பெரிய போர்.
    • ரத்த அழுத்தம் குறையும் போது ஆக்சிஜன் குறைபாடு காரணமாக இருதய பாதிப்பு ஏற்படலாம்.

    உடலில் நச்சு கூடும்போது உயிருக்கு ஆபத்து ஏற்படும். இங்கு நச்சு என்பது விஷம்அல்ல. தீயது செய்யும் எந்த உணவும் விஷம்தான். செரிமான மின்மை, உடல் உறுப்புகள் பாதிப்பு. கழிவுப் பொருட்கள் சரிவர வெளியேறாமை போன்றவையும் நச்சுத் தன்மை வாய்ந்தவைதான். இந்த நேரத்தில் உடல் காட்டும் அறிகுறிகளைப் பார்ப்போம்.

    * நோய் வாய் படுதல் * நோய் வாய் பட்டது போன்ற உணர்வு * வயிற்றுப் போக்கு. * வயிற்று வலி * மயக்கம், பலவீனம் *காய்ச்சல் * குளிர் (நடுங்குதல்) * பசியின்மை * தலைவலி ஆகியவை ஆகும்.

    இப்போது வெயில் கடுமையாய் இருக்கின்றது. பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை வெயிலில் செல்வதை தவிருங்கள் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. குடை, தொப்பி அணிதல், தேவையான நீர் பருகுதல், கறுப்பு கண்ணாடி அணிதல் இவை அவசியம் ஆகின்றது. உடலில் உஷ்ணம் அதிகரிக்கும் போது ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். வயதானோர் சர்க்கரை நோய் பாதிப்பு உடையோர், மற்ற உடல் நல பாதிப்பு உடையவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்.

    ரத்த அழுத்தம் குறையும் போது ஆக்சிஜன் குறைபாடு காரணமாக இருதய பாதிப்பு ஏற்படலாம். இப்படி தொடர் சங்கிலி போல் ஒன்றிலிருந்து அடுத்தது, அதில் இருந்து அடுத்தது என பாதிப்புகள் ஏற்படுகின்றன. அனைவருக்குமே ஏதோ ஒரு காரணத்தினால் உடலில் நச்சுத்தன்மை கூடலாம்.

    * தசைகளில் வலி * உடல் ஓய்ந்து விடுவது * எந்த முயற்சி செய்தும் உடல் எடை குறைவதில் கடினம் * குழப்பம் * தலைவலி * தூக்கமின்மை * எரிந்து விழும் தன்மை * சரும பாதிப்பு * உடல் துர்நாற்றம் * மலச்சிக்கல் இவைகளும் உடலில் நச்சுத்தன்மை கூடியுள்ளதன் வெளிப்பாடுகளே. கவனம் தேவை.

    * நம் மீது நமக்கு அன்பு இருக்க வேண்டும். நம்மை நாமே நன்றாக கவனித்துக் கொள்ளாமல் பிறர் நம்மை கவனிப்பார்கள் என்று எண்ணுவது தவறாகும்.

    * வாழ்க்கையே போர்தான். அதுவும் உடலையும், உள்ளத்தினையும் பாதுகாப்பது மிகப்பெரிய போர். அதனை கூச்சலின்றி, பிரச்சினை இன்றி அமைதியாய் வெற்றி பெறும் ஒரு வழி அவ்வப்போது உடல் நச்சினை நீக்குவதும் ஆகும்.

    இந்த வாழ்வெனும் பாதையில் நல்லதோடு தீயதும் வரும். நாம் தான் தீயதினே நீக்கி நடக்க வேண்டும்.

    வாழ்வினில் நடக்கும் துரோகங்கள் நிறையதான் உள்ளன. துரோகம் செய்தவரை மன்னித்து விடலாம். (இல்லையெனில் அது சுமை) ஆனால் நிகழ்வுகள் நாம் படித்த பாடம். அதனை மறக்க வேண்டாம்.

    மக்கள் மாறுவார்கள், காலம் நிறைய மாற்றம் தரும். ஆனால் வாழ்க்கை சென்று கொண்டேதான் இருக்கும். நாம் எதையும் மறுத்தாலும் அதனுடன் பயணிக்கத்தான் வேண்டும். யாரையும் அண்டி கெஞ்சாது வாழும் வாழ்க்கை இருந்தால் அவர் அதிர்ஷ்டசாலி.

    யாருக்காகவும் உங்களை சுருக்கி கொள்ள வேண்டாமே.

    நமக்கென்று பேச பரந்து விரிந்த உலகம் இருக்கின்றதே. எது உங்கள் நிம்மதியை குலைக்கிறதோ அது தேவையே இல்லை. யாரும் இது தான் நீங்கள் என எல்லை வகுத்து எடை போடும்படி எளிதாய் இருக்க வேண்டாம். தனிமை மிகப் பெரிய பலம் (உறுதியான மனம் இருந்தால்). யாரிடமும் எதையும் எதிர்பார்க்கக் கூடாது.

    நாம் முன்னேறுவது, நம்மை சரிசெய்து கொள்வது நமக்காக மட்டுமே. நாம்தான் நமக்கு சிறந்த நண்பன். நாமே நமக்கு சிறந்த நலம் விரும்பி. வந்ததும் தனியாகத்தான் போவதும் தனியாகத்தான். மருந்து சாப்பிடுவதில் எந்த சந்தோஷமும் இல்லை. ஆகவே எப்போதும் மகிழ்ச்சியாக இருப்போம்.

    காய்ச்சி ஆறிய நீர் குடியுங்கள், பகலில் 30 நிமிட ஓய்வு, கனமில்லாத அதாவது அதிக கொழுப்பு, உப்பு, மசாலா என்று இல்லாத எளிய உணவு உண்ணுதல், தினம் 10 ஆயிரம் அடிகள் நடத்தல், காலையில் வெறும் வயிற்றில் நீர் குடித்தல், உணவுக்கு பிறகு 30 நிமிட நிதான நடை, படபடப்பின்மை, 15 நிமிட தியானம், தேவையான சூரிய வெளிச்சம் இவைேய நிறைவான, மகிழ்ச்சியினை தந்து விடும்.

    சாப்பிட்டவுடன் நிறைய நீர் குடிப்பது என்பது சரியல்ல. அதாவது சாப்பிட்டவுடன் மிக அதிக அளவு நீர் வேண்டாம். சிறிது நேரம் சென்று குடிக்கலாம்.

    கமலி ஸ்ரீபால்

    * கண்ட நேரத்தில் காபி, டீ என குடிப்பது கூடாது.

    * உணவு, பழம் இரண்டையும் சேர்த்து உண்ணக் கூடாது.

    * பிளாஸ்டிக் கப், டப்பாக்களை அதிகம் பயன்படுத்துவது கூடாது. அவை உடல்நலத்தினை பாதித்து மகிழ்ச்சியைக் குறைக்கும்.

    * தினம் 10 நிமிடம் முன்னோக்கி நடக்காமல் பின்னோக்கி நடந்து பழகுங்கள். மூட்டுகள் வலுப்பெறும்.

    * எலுமிச்சை சாறு + இஞ்சி சாறு கலந்த நீர் அல்லது மோர் குடியுங்கள்.

    * குளிர்ந்த ஷவர் குளியல் நல்லது.

    * வெறும் காலில் சுத்தமான புல்வெளியில் 10 நிமிடங்கள் நடக்கலாம்.

    நிறங்களுக்குக் கூட நம் உடலை ஆக்கப்பூர்வமாகவோ, அழிவுப் பூர்வமாகவோ பாதிக்கும் திறன் உண்டு என்று ஆய்வுகள் கூறுகின்றனவாம். அதனையும் தெரிந்து கொள்வோமே.

    சிகப்பு நிறம்:

    * அட்ரினல் சுரப்பி, நரம்புகளை தூண்ட வல்லது.

    * அதிகம் இந்த நிற சூழலில் இருந்தால் ஸ்ட்ரெஸ் ஏற்படுமாம்.

    * கோபம், ெவறுப்பு கூட அதிகரிக்குமாம்.

    * சக்தி தரும் நிறம்.

    * உடலின் செயல்பாட்டுத் திறனைக் கூட்ட வல்லது.

    * மூச்சு கூடும். ரத்த அழுத்தம் கூடலாம்.

    மஞ்சள் நிறம்:

    * சொடோனின் எனும் மகிழ்ச்சி ஹார்மோன் சுரக்கும்.

    * மகிழ்ச்சி தரும்.

    * உடன் செயல்பாட்டுத் திறன் கூடும்.

    * ஆனால் சிறு குழந்தைகள் மஞ்சள் நிற அறையில் அதிகம் அழுவார்களாம்.

    ஊதா நிறம்:

    * ஆன்மீக நாட்டம் அதிகம் இருக்கும்.

    * ஆழ்சிந்தனைகளும் இருக்கும்.

    * மன இறுக்கமான சோகமான உணர்ச்சிகள், உணர்வுகள், எண்ணங்கள் ஏற்படலாம்.

    க்ரே நிறம் (சிமெண்ட் நிறம்): எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தும்.

    வெள்ளை நிறம்:

    * அமைதி தரும்.

    * வெற்றியின் ஆரம்பம் எனலாம்.

    நீலநிறம்: அமைதி தரும். நிதானம் இருக்கும். அதிக நேரம் இந்நிற சூழலில் இருந்தால் மனச்சோர்வு ஏற்படும். பசி இருக்காது.

    பச்சை நிறம்: கண்ணுக்கு குளிர்ச்சி. உடலுக்கு இதம். பார்வை திறன் கூடுமாம். சுத்தம், சாந்தம் இருக்கும்.

    ஆரஞ்சு நிறம்: மூளை செயல்திறன் கூடும். பசியை தூண்டும். மூளைக்கு ஆக்சிஜன் செல்வது கூடுமாம்.

    பிங்க் (அ) ரோஸ் நிறம்: கோபம், படபடப்பு இருக்காது. மென்மை தன்மை இருக்கும்.

    கறுப்பு நிறம்: ஆழ்ந்து சிந்தித்தல். கறுப்பு நிறம் அணிபவரை ஒல்லியாகக் காட்டும்.

    ஆக எதிலும் ஒரு அர்த்தம். கருத்து இருக்கின்றது என்பதனை அறிய முடிகின்றது.

    (இன்றைய கால கட்டத்தில் அநேகர் 80-90 வயதினைக் கடந்து வாழ முடிகின்றது. மருத்துவம், உணவு முறை, விழிப்புணர்வு இவை முக்கிய காரணமாகின்றது. இருப்பினும் சிலவற்றினை அவர்கள் நினைவில் கொள்வது உடல் நோய் வாய் படாது இருக்க உதவும்.

    குறைத்துக் கொள்ள வேண்டியவை

    உப்பு, சர்க்கரை, மைதா (வேண்டவே வேண்டாம்). பால் சார்ந்த உணவுகள், பதப்படுத்திய உணவுகள்.

    தேவையான உணவுகள்: காய்கறி, பருப்பு வகைகள், கொட்டை வகைகள், முட்டை, பழங்கள், தேவையான அளவு சிறிதளவு -மருத்துவர் பரிந்துரைக்கும் எண்ணெய்.

    கவலைப்படக் கூடாதவை- * வயது * கடந்த காலம் * சில உடல் நல பிரச்சினைகள் (உடல் பிரச்சினைகளுக்கு கவனிப்பு கொடுங்கள். கவலை வேண்டாம்)

    தேவை- * குடும்ப உறவுகள் * நண்பர்கள் * ஆக்கப் பூர்வ சிந்தனைகள் * சுத்தமான சூழ்நிலை இத்தோடு- அதிக நேரம் வெளிச்சம் இல்லாத அறையில் இருக்க வேண்டாம்.

    * அதிகமான அதாவது அறிவுப்பூர்வமான செய்திகளை படித்து, கேட்டு, தலையில் ஏற்றிக் கொள்ள வேண்டாம்.

    * அதிக தனிமை மன வலிமை அற்றவர்களுக்கு வேண்டாம். * காது, மண்டை பிளக்கும் அளவு சத்தமான இசை வேண்டாம்.

    * இடிப்புளி போல் அசையாது ஒரே இடத்தில் காலை முதல் இரவு வரை அமர்ந்திருக்க வேண்டாம்.

    * போன், டி.வி.யில் வாழ்வினை செலவழிக்க வேண்டாம். * இனிப்பு உணவில் ஊற வேண்டாம். இவையும் ஒருவருக்கு அநேக நன்மைகளைப் பயக்கும்.

    Next Story
    ×