என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    யோகா தரும் மாற்றம்!
    X

    யோகா தரும் மாற்றம்!

    • முதுகலை பட்டம் வரை இதன் ஆராய்ச்சி விஞ்ஞான ரீதியாகவும் சென்றுள்ளது.
    • அனைத்து இடங்களிலும் தரமான முறையில் யோகா பயிற்சி நிலையங்கள் உள்ளன.

    இன்றைய கால கட்டத்தில் விழிப்புணர்வு என்பது ஆரோக்கியத்தின் பல பிரிவுகளில் அறிவுறுத்தப்பட்டு அது வெற்றிகரமாகவும் செயல்பட்டு வருகின்றது. அந்த வகையில் 'யோகா' பயிற்சியும் உலகெங்கிலுமே அதிக முக்கியத்துவத்தினைப் பெற்றுள்ளது. சில குறிப்பிட்ட நோய்களுக்கு என்றே சில சிறப்பு யோகா பயிற்சிகளையும், முத்திரைகளையும் பயிற்சியாளர்கள் அளித்து வருகின்றனர். முதுகலை பட்டம் வரை இதன் ஆராய்ச்சி விஞ்ஞான ரீதியாகவும் சென்றுள்ளது.

    உடல் சீராக, மனம் அமைதிபட, ஆரோக்கியம் கூட, குறிப்பிட்ட பாதிப்புகளில் நிவர்த்தி கிடைக்க சிறுவர் முதல் முதியவர் வரை இன்று யோகா வாழ்வின் ஒரு அங்கமாகி விட்டது. இது நம் நாட்டின் சொத்து என நாம் பெருமைப்பட்டு கொள்ளலாம். 'பதஞ்சலி யோகா' என்பது யோகாவின் ஆணிவேராக பன்னெடுங் காலமாக உள்ளது.

    'பேச்சில்லாமல் சாதிக்கும் சக்தி கொண்டது யோகா' யோகா பயிற்சியால் வெளிப்படும் ஆற்றல்களே பேசாமல் பேசும். இந்த யோகாவில் அவர்கள் கூறும் நிலைகள்-

    * யமா- சத்யம், மூர்க்கத்தன்மை இருத்தல், தவறுகள் இல்லாது இருத்தல் என சுய ஒழுக்கத்தினை நரம்புகளில் ஏற்றுவதாக இருக்கும்.

    * இவை இருந்தாலே இன்று நாட்டில் காணப்படும். அநேக அராஜக சம்பவங்கள் இருக்காது.

    * நியமா-தூய்மை, புறத்தூய்மை, அகத்துய்மை.

    * ஆசனி- உடல் வலிமை, வளையும் தனமை, விழிப்புணர்வு

    * பிராணயாமா- மூக்கை கட்டுப்படுத்தி, மனதை கட்டுப்படுத்தி உலகையே ஒழுக்கத்தால் வெல்லக் கூடிய தன்மை.

    * பிரத்யாகரா-ஐம்புலன்களை அடக்குதல்.

    * சமாதி- பரமானந்த நிலை கொட்டி கொடுத்தாலும் கிடைக்காத நிலையினை யோகா மார்க்கம் கொண்டு சேர்த்து விடுகின்றது.

    யோகா பயில்பவர்களுக்கு ஸ்ட்ரெஸ், டென்ஷன் என்ற வார்த்தைகள் அகராதியில் இருந்து நீங்கி விடுகின்றது.

    இன்று அனைத்து இடங்களிலும் தரமான முறையில் யோகா பயிற்சி நிலையங்கள் உள்ளன.

    முறைப்படி கற்பதுதான் சிறந்தது. ெதாடர்ந்து பயிலும் போது,

    * மனச் சிதறல்கள், குழப்பம் இன்றி இருப்பார்கள்.

    * மூச்சின் மீது கவனத்தோடு இருப்பார்கள். இதனால் ஒவ்வொரு செயலிலும் விழிப்புணர்வு இருக்கும்.

    * உள்ளுணர்வு மிக சிறப்பாக இயங்கும். அதனால் எதிலும் தெளிவாக இருப்பர்.

    * பிறரை நாம் காயப்படுத்தாமலும், பிறரால் நாம் காயப்படாமலும் வாழ முடியும்.


    * தூய்மையான வாழ்க்கை என்பதுதான் வாழ்வின் சிறப்பு.

    அதனை யோகாவினால் பெற முடியும். இந்த ஒரு அணு ஆயுதம் போதும் 'யோகா எனும் ஆயுதம்' உலகமே சொர்க்கமாகும்.

    இன்றே, இப்போழுதே, இந்த நொடியே இதனை ஆரம்பிப்போமே.

    நம்மில் பலருக்கு கட்டுப்படாத வாய் இருக்கிறது. சுய கட்டுப்பாடு, தேவையில்லாமல் ஓட்டை வாய் போல் எதனையும், எவரிடமும் சொல்வது என்ற பழக்கங்கள் இருக்கும். நமக்கென்று இருக்க வேண்டிய வாய் கட்டுப்பாடுகள்- பிறரிடம் சொல்லக் கூடாத கட்டுப்பாடுகள்.

    * நம் பலவீனங்களைப் பற்றி பிறர் அறிய வேண்டுமா என்ன? (உதாரணம்) நான் சோம்பேறி, பணத்தை தண்ணீராய் செலவழிப்பேன். இதென்ன பெருமையா?

    * எனக்கு பிடித்தம் போக இவ்வளவு சம்பளம் வருகின்றது.

    * நான் சினிமா போல் கடுமையாய் போராடி காதலில் ஜெயித்தேன். (இது என்ன உலக மகா சாதனையா?)

    * உங்கள் பணப்பற்றாக்குறை

    * உங்கள் பாதுகாப்பின்மை

    * பிறரைப் பற்றிய உங்களது கருத்து

    * உங்கள் கோர்ட், வழக்கு பிரச்சினைகள்

    * உங்கள் கடந்த கால தவறுகள்

    * உங்கள் பான் கார்டு, ஆதார் போன்றவை

    * உங்கள் வருங்கால திட்டம்

    * உங்கள் குடும்ப பகை, உறவினர் எதிர்ப்பு

    * பிறர் உங்களை நம்பி பகிறும் ரகசியம்

    * உங்கள் குழந்தை கால கஷ்டங்கள்

    * உங்கள் சொத்து

    இவற்றினை உங்கள் பெற்றோர், மனைவி, பிள்ளைகள் இவர்களிடம் கூறலாம். ரெயில் சிநேகம், பஸ் நண்பர்கள் என பார்ப்பவர்களிடமெல்லாம் ஒப்புவிப்பவர்களை யோகா பயிற்சியில் சேர்க்கும் போது அமைதி, மன அடக்கம் ஏற்படலாம். தியானம் உதவலாம். யோகாவிற்கும், தியானத்திற்கும் எந்த பேதமும் இல்லை. உலக மக்கள் அனைவருக்கும் பொதுவானது.

    கமலி ஸ்ரீபால்

    யோகா பயிற்சியும் தியானமும்

    * தவறான அசுர குணங்களை அழித்து விடும். தானே நீங்கும். தூய அன்ேபாடு எப்போதும் இருக்கும் நிலையினைத் தரும்.

    * தனிமை வலிமை தரும்.

    * புறத்தூய்மை, அகத்தூய்மை இரண்டும் இருக்கும்.

    * எப்போதும் ஆரவாரமற்ற அமைதியான மகிழ்ச்சி இருக்கும்.

    * பிறரது தேவையற்ற பேச்சுகள் வெறி ஏற்றாது.

    * எப்போதும் குறை சொல்லிக் கொண்டே இருக்க மாட்டார்கள்.

    * நல்ல குறிக்கோள்களுக்காக வேலை செய்வர்.

    * எதனையும் தன் முழு முயற்சியோடு செய்வர்.

    * மனநிலை சீராக இருக்கும்.

    * விழிப்புணர்வோடு இருப்பர்.

    * நம்முன் இருக்கும் சக்தியினை நாம் உணர முடியும்.

    * உடல் ஒரு கோவில் என்று தெரியும்.

    * உடலுக்கு உடற்பயிற்சி, யோகா தேவை. மனதிற்கு-தியானம் அசையா நிலை தேவை. செய்வோமே.

    நம் உடலில் பி.எச். அளவீடு 7-க்கு குறைந்தால் உடம்பில் ஆசிட் கூடுகின்றது. இது அதிக உடல் பாதிப்பினை ஏற்படுத்துகின்றது. உடலில் ஆசிட் அளவு மிகவும் குறைந்தாலும் அதுவும் உடல் நல பாதிப்பினை ஏற்படுத்தும் என்பதனை நினைவில் கொள்ள வேண்டும். ஆக இதனை சரியான அளவில் வைத்துக் கொள்வது அவசியமாகும்.

    'அசிடிடி' பிரச்சினை இன்று நாம் சர்வ சாதாரணமாக கேட்கும் ஒரு வார்த்தை ஆகி விட்டது. இந்த 'அசிடிடி'க்கு காரணங்கள் என்ன?

    * அதிக சர்க்கரை உணவு * உடல் பருமன் * புகை பிடித்தல் * சில மருந்துகள் * அதிக 'சிட்ரஸ்' உணவு * ஜீரண கோளாறுகள் * பொரித்த உணவுகள் * மது * அதிகம் சாப்பிடுதல் * மன உளைச்சல் * சாக்லேட் * வெங்காயம் * மசாலா உணவுகள்

    இப்படி பல காரணங்கள் உள்ளன.

    'அசிடிடி' அறிகுறிகள் என்னென்ன?

    * நெஞ்செரிச்சல்- இது மிக அதிகமாக கூறப்படும் ஒன்று.

    * படபடப்பு * வயிற்று பிரட்டல் * தொண்டையில் விழுங்குவதில் கடினம். * தூக்கமின்மை * ஆஸ்துமா போன்று மூச்சு வாங்குதல் போன்ற அறிகுறிகள் பொதுவில் வெளிப்படும். மேலும் சில அறிகுறிகளை மருத்துவர் ஆய்வு செய்வார்.

    * சிப்ஸ் அளவில் உணவினை அடிக்கடி எடுத்துக் கொள்ளலாம்.

    * அதிக எடையினை குறைக்க வேண்டும். * உணவு உண்டபின் நிமிர்த்து அமர வேண்டும். * புகை, மது இதனைத் தவிர்க்கவும. * மன உளைச்சல் தவிர்க்க வேண்டும் * இஞ்சி * எலுமிச்சை சாறு சிறிது சேர்த்த நீர், இளநீர்

    * வாழைப் பழம் உணவில் சேர்க்க வேண்டும். அசிடிடி மிகவும் அதிகரிக்கும் போது * மயக்கம் * தலைவலி * பசியின்மை * மிகுந்த சோர்வு * வாந்தி * பலவீனம் என்று இருக்கும்.

    நிரந்தர தீர்வு முயற்சியாக முறையான உணவு சரியான நேரத்தில் எடுத்துக் கொள்வது, உடற்பயிற்சி, கேக், மைதா உணவுகளை தவிர்ப்பது பலனைக் கொடுக்கும்.

    சுருக்கமான வரிகளில் யோகா பயிற்சியின் விரிவான பலன்களைப் பார்ப்போம்.

    * இளம் வயதிலேயே தரையில் அமரவும், எழுந்திருக்கவும் படாதபாடு படுபவர்கள் ஒரு மாதத்திற்குள்ளாக சுறு சுறுப்பாய் எளிதாய் இவைகளைச் செய்வார்கள்.

    * நடக்கும்போது தொய்ந்து, கோணல் மாணலாக நடக்கும் பலர் நிமிர்ந்து, கம்பீரமாய், ராஜநடை நடப்பர்.

    * யோகா பயிற்சி செய்பவர்களிடம் எரிச்சல் 'சுள்' என பேசுவது, சண்டைக்கு முன் நிற்பது போன்ற செயல்களை காணவே முடியாது.

    * பேச்சில் தடித்த, பண்பற்ற சொற்கள் இருக்காது. * சிறு கஷ்டங்களைக் கண்டு நடுங்கி வெடவெடக்க மாட்டார்கள். * நோயும் நீங்கும். ஆயுளும் கூடும். * நோய் எதிர்ப்பு சக்தி கூடும். * முறையான ஆழ்ந்த தூக்கம் இருக்கும். * தன்னை தாழ்த்திக் கொள்ள மாட்டார்கள். தாழ்வு மனப்பான்மை, பொறாமை இவை அறவே இருக்காது. கொஞ்சம் முயற்சித்தால் பின் வாழ்நாள் வரை தானே தொடரும். செய்வோமே.

    Next Story
    ×