என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    மனதை சரிபடுத்திக் கொள்ளுங்கள்!
    X

    மனதை சரிபடுத்திக் கொள்ளுங்கள்!

    • காலையில் பல் சுத்தம் செய்த பிறகு 2 கிளாஸ் நீர் அருந்துங்கள்.
    • நமக்குள் உருவாகும் கட்டுப்பாடு வலிவானது, அமைதியானது.

    சில விஷயங்களை நாம் சரியாக புரிந்து கொள்கிறோமா?

    * ஒவ்வொரு வீட்டிலும் பெற்றோர்கள் சீக்கிரம் எழுந்திரு, சீக்கிரம் எழுந்திரு என ஓயாது காலையில் சுப்ரபாதம் போல் பாடுவார்கள். எதற்காக சீக்கிரம் எழுந்திருக்க வேண்டும்? சுறு, சுறுப்பு எனலாம். நன்கு படிக்க முடியும் எனலாம். இப்படி எண்ணற்ற நன்மைகளைச் சொல்லலாம். ஒரு முக்கிய காரணம் என்னவென்றால் இதுவே தவிர்க்க முடியாத பழக்கம் ஆகிவிடும். தாமதமாக எழுந்தால் ஆரோக்கியம் மிக இளம் வயதிலேயே அவுட் ஆகிவிடும். டென்ஷன் கூடிக் கொண்டே போகும், எழுந்தவுடன் பல் தேய்த்து உடனே 10 நிமிடம் ஷவர் எடுத்துத்தான் பாருங்களேன்.

    * முன்பெல்லாம் தூங்கி எழுந்தவுடன் பாயை சுருட்டி, போர்வை மடித்து வைப்பார்கள். ஆனால் இன்று எல்லாமே கட்டில், மெத்தை என்றாகி விட்டது. தூங்கி எழுந்தது முதல் இரவு தூங்கும் வரை பலருக்கு அந்த கட்டில் தான் ஆபீஸ், படிப்பு, உணவருந்தும் மேஜை. எல்லாம் ஆரோக்யரீதியாகவும் சுகாதார ரீதியாகவும் மிக தவறானது. ஒருவரை விரைவில் படுத்த படுக்கையாக்கி விடும். கட்டில், மெத்தை என்றாலும் தூங்கி எழுந்தவுடன் நன்கு தட்டி மடித்து சுத்தமாக வையுங்கள், இது ஒரு நல்ல உணர்வினைத்தரும்.

    கமலி ஸ்ரீபால்


    * காலையில் பல் சுத்தம் செய்த பிறகு 2 கிளாஸ் நீர் அருந்துங்கள். இதனை வீட்டில் பெரியவர்கள் தினமும் சொல்வார்கள், ேயாகா வகுப்பு மருத்துவர்கள் அனைவரும் அறிவுறுத்துவர். இதில் சிலர் வெது வெதுப்பான நீர் குடிப்பர். சிலர் எலுமிச்சை சாறு கலந்து குடிப்பர். சிலர் 1 லிட்டர் நீர் கூடகுடிக்கின்றனர். சுத்தமான நீர் 2 கிளாஸ் அருந்தினாலே போதும். உடலில் சத்துகூடும். கழிவுகள் வெளியேறும். உடலில் சக்தி கூடும்.

    * சின்ன வேலைகளை ரொம்ப நேரம் தள்ளிப்ேபாடாதீங்க, அதுேவ டென்ஷன் ஆயிடும். உடனே செய்து விடுங்கள். எளிதாய் இருக்கும்.

    * முதல் நான் இரவே மறுநாள் வேலைகளை முறைப்படுத்திக்கொள்ள வேண்டும். அது படிப்போ. அலுவலக பணிேயா, சமையலோ எல்லாவற்றுக்கும் பொருந்தும்.

    * சில முறை ஆழ் மூச்சினை எடுங்கள். மனம் அமைதியாப் இருக்கும்.

    * முடியும் பொழுது என்றில்லாமல் கவனமாக ஒரு மணி நேரத்திற்கொரு முைற சில நிமிடங்கள் சுறு சுறுப்பாய் நடந்து பாருங்களேன்.

    * நல்ல தீர்வுகள் வரவில்லையா? மேலும் உழைப்போம். கெட்ட தீர்வுகளா? இதை மாற்ற மேலும் உழைப்போம். உழைப்ேப தீர்வு. நல்ல தீர்வா? அது தொடர மேலும் உழைப்போம்.

    செல்போன்: யாரும் இந்த காலத்தில் அதிகம் தலை நிமிர்ந்து இருப்பதில்லை. அப்படியொரு தன்னடக்கம் என்று நினைத்து விடாதீர்கள். கையை விட்டு ஒரு நிமிடம் கூட பிரியாத செல்போன் தான் காரணம். தலை குனிந்து, தோள்கள் முன் வந்து தொய்ந்து, காலப் போக்கில் முதுகும் சற்று வளைந்து இளம் வயதில் அதிக முதுமைத் தோற்றத்துடன் காணப்படுகின்றனர். இதனால் பல உள் உறுப்புகளுக்கு அழுத்தம் ஏற்படுகின்றது. பின்னர் பாதிப்பும் ஏற்படுகின்றது.


    * பின் மண்டை, கழுத்தில் வலி ஏற்படுகின்றது.

    * இக்கருவிகளில் இருந்து வரும் நீல ஒளி செல்போனை அன்றாடம் நீண்ட நேரம் உபயோகப்படுத்துபவர்களுக்கு கண்ணுக்கு அழுத்தத்தினை ஏற்படுத்துகின்றது. பார்வை கோளாறுகளை உருவாக்கலாம். முறையான தூக்கமின்மையை ஏற்படுத்துகின்றது.

    * உடல் முன் பக்கமாக எப்போதும் குனிவதால் நுரையீரலில் அழுத்தம் ஏற்பட்டு அதன் செயல் திறன் 30 சதவீதம் குறைகின்றதாம்.

    * தண்டுவடத்தில் முறையற்ற வளைவு (கூன்), தண்டு வட பாதிப்பு, பின் முதுகு வலி ஏற்படுகின்றது.

    * தோளும் முன்பக்கம் வளைந்து, முட்டியும் வளைவதால் நரம்பு பாதிப்பு ஏற்படுகின்றது.

    * கழுத்து 60 டிகிரி வளைவதால் 60 பவுண்ட் அழுத்தம் கழுத்தில் ஏற்பட்டு கடுமையான கழுத்து வலி பிரச்சினை உருவாகின்றது.

    * கட்டை விரல் வலி, மணிகட்டு இறுக்கம் உண்டாகின்றது.

    * அதிக முதுகு வலி செல்போன், கம்ப்யூட்டர் இவைகளில் மிக அதிக நேரம் செலவழிப்பதால் ஏற்பட்டு ெதாய்ந்த தோற்றம், நடை முறையற்று இருத்தல் ஆகிய பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. பேச்சு, தோற்றம் இவை அனத்துமே பாதிக்கப்படுகின்றது.

    * மேலும் நினைத்ததையெல்லாம் அனைவரிடமும் பகிரும் குணம் கட்டுப்படும். நமக்குள் உருவாகும் கட்டுப்பாடு வலிவானது, அமைதியானது.

    * பகிரும் போது நல்லவை இருந்தால் யாரும் உங்களை பாராட்டப் போவதில்லை. தவறு இருந்தால் உங்களை மறக்கப் போவதும் இல்லை.

    * செல்போன் பொய் நண்பர்களை கொடுக்கலாம். இவர்கள் எதிரிகளை விட மோசமானவர்கள்.

    மனித மனதுக்கு கொஞ்சம் இருட்டான பகுதியும் இருக்கு-

    * உண்மையை விட அது அழகான பொய்களை விரும்புகின்றது.

    * உங்கள் மனமே சதா உங்களை குத்தி குடைந்து கொண்டே இருக்கலாம்.

    * ரொம்ப அதிகமாக யோசிப்பது தனக்கு தானே கொடுமை செய்து கொள்வது போல்தான். இதனை நிறைய பேர் செய்து கொள்கின்றனர்.

    * மகிழ்ச்சி என்ற ஒன்றினை பிடித்து அதன் பின்னாடியே ஓடு என்கிறோம். கிடைத்தவுடன் பாதுகாக்காது அழித்து விடுகின்றோம்.

    * நமக்கு இருக்கும் இதயத்தினை வேறொரு இதயத்தினை நம்பி நொறுக்கி விடுகின்றோம்.

    * வலி நமக்கு பழகி விட்டது. அதில் வாழ்வதும் பழகி விட்டது. வலியின்றி வாழ்வதும், வலி ஆற்றி வாழ்வதும் நமக்கு பழக்கம் இல்லாத ஒன்றாகி விட்டது.

    * நம் மனம் பாராட்டுதல்களை விட காயங்களை மிக துல்லியமாக ஞாபகம் வைத்து கதறுகின்றது.

    * நம் மீது பிறர் கவனம் ஈர்க்கப்பட வேண்டும் என்பதில் அதிக கவனம் செலுத்துகின்றோம்.

    * நம்மை சுற்றியுள்ள அநேகர் பொய்யான துணையாக நிற்பர். உள்ளே நாம் வீழ வேண்டும் என்று நினைப்பர். இது காலத்தின் சூழல்.

    * ஆழ் மனதில் வளர்ந்த மனிதன் கூட பயந்த குழந்தைதான்.

    * பல காயங்கள் நமக்கு ஆறுவதே இல்லை. அதோடு நாம் விந்தி விந்தி நடக்க கற்றுக் கொண்டு விடுகின்றோம்.

    * எல்லோருக்கும் அன்பும், கருணையும் தேவையில்லை என்பதனை உணருங்கள்.

    ஆரோக்கியம் என்பதற்கும் நாம் உட்கொள்ளும் உணவிற்கும் நேரடி தொடர்பு உண்டு என்று அறிவோம். கீழ்க்கண்ட உணவுப் பொருட்கள் நம் பழக்கத்தில் உள்ளதா? என்று பார்த்துக் கொள்வோம்.

    *அத்திப்பழம் *ஆளி விதை *தயிர்-மோர் *சியாவிதை *பசலை கீரை *மீன் *தேங்காய் *தேங்காய் நீர் *ஓட்ஸ் *நாவல் பழம் *தக்காளி *வெள்ளரி *பூசணி விதை *வெண் பூசணி *சுரைக்காய் *ஆரஞ்சு *பச்சைமிளகாய் *பாதாம் *கொய்யா *பேரிச்சை *முள்ளங்கி *மாதுளை *சன்னா

    குறைந்தபட்சம் இவையெல்லாம் உங்கள் உணவில் சேர்க்கப்படுகின்றதா? கொஞ்சம் கவனிப்போம்.

    அமிலத்தன்மை உள்ள உணவுகளைத் தவிர்த்து காரத்தன்மை உணவை உண்ணும்போது தன்னால் ஆரோக்கியம் கூடும் தானே.

    * இப்படி கூட 2 அல்லது 3 மாதங்கள் முயற்சி செய்யலாமே?

    இளம் வயதினர், வாலிப வயதில் இருப்பவர்கள் இத்தகு உடற்பயிற்சிகளையும் செய்யலாமே?

    * மலை ஏறுதல் *7000 அடிகள் அன்றாடம் நடத்தல் *ஸ்கொயட்ஸ் போன்ற உடற்பயிற்சிகள் செய்யலாம்.

    * தேவையான புரதம், ஆரோக்கிய கொழுப்பு, தாது உப்புகள் இவற்றினை ஊட்ட சத்து நிபுணர் ஆலோசனைபடி எடுத்துக் கொள்ளுதல்.

    * காய்கறிகள், பழங்கள், முட்டை, மோர், தயிர் இவற்றினை உணவில் சேர்த்துக் கொள்ளுதல்.

    மேலும் பிறர் மீது சதா குற்றம், குறை கூறாது இருத்தல் இவை நிச்சமயாய் 2 மாதத்தில் உங்களை முன்னேற வைக்கும்.

    * தேவைக்கு மீறி பேசாது இருத்தல்.

    * எதற்கெடுத்தாலும் அடுத்தவர் மீது சார்ந்து இருத்தல் என்பது நமக்கும் பிறருக்கும் பாரம். இந்த சவுக்கிய வளையத்தில் இருந்து வெளிவர வேண்டும்.

    * பிறர் நம்மை அறிவாளி, புத்திசாலி, ஆற்றல் மிக்கவர் என்று கூறும் முன்பு நம்மைச் சுற்றி எத்தகைய மனிதர்கள் உள்ளனர் அல்லது எத்தகைய மனிதர்களைச் சுற்றி நாம் உள்ளோம் என்பதனை கவனியுங்கள். ஆக இந்த இரண்டு இடத்திலும் அறிவும், உறுதியும், நல்ல எண்ணங்களை கொண்டவர்களும் இருக்க வேண்டும்.

    * வாழ்க்கையில் பாதுகாப்பு என்ற ஒரு நிகழ்வு வேண்டி எப்போதும் ஒரு பொந்துக்குள் மறைந்து வாழ முடியாது. சில சவாலான, துணிச்சலான செயல்களை எதிர்கொள்ளத்தான் வேண்டும். இது தலைவர்களுக்கும், வியாபாரம் செய்பவர்களுக்கும் மிக அவசியம்.

    * நல்ல நிகழ்வுகளில் இருந்தும், வெற்றி நிகழ்வுகளில் இருந்தும் கற்றுக் கொள்ளுங்கள்.

    * உங்கள் நண்பர்கள், நீங்கள் நம்புபவர்கள் அசைக்க முடியாத நம்பும் தன்மை உடையவர்களாக இருக்க வேண்டும். இல்லையெனில் அவர்களின் ஆளுமை நம்மை சிந்திக்க விடாது, விழுங்கி விடும்.

    * நிறைய படியுங்கள். அன்றாட செய்திகள், நிகழ்வுகள், கண்டுபிடிபபுகள் என நன்கு படியுங்கள். அறிவுதான் ஒருவரின் மிகப்பெரிய சொத்து.

    * படுக்காத தலை முடி, உடல் மூடிய ஆடை, சுத்தமான ஆடை, இவை யெல்லாமே ஆரோக் கியத்தின் வெளிப்பாடுதான்.

    மேற்கூறியவைகள் கூட ஆரோக்கியம் என்ற தலைப்பின் கீழ் வருமா? என்று நினைக்கின்றீர்களா? இது வாழ்வின் ஆரோக்கியம். நமக்கு நாமேதான் தேவையான அக்கறையினை கொடுக்க வேண்டும். உங்கள் முயற்சிகளை, மாற்றங்களை எழுதுங்கள். படியுங்கள். உங்களை நீங்களே செதுக்கிக் கொள்ளுங்கள்.

    Next Story
    ×