என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    உடல் வலிகளுக்கு காரணமான மன உளைச்சல்!
    X

    உடல் வலிகளுக்கு காரணமான மன உளைச்சல்!

    • மன நல ஆலோசகர்களும், யோகா பயிற்சியாளர்களும் நம் உடல், மனம், ஆன்மா ஒன்றுக்கொன்று தொடர்பு உடையது என்பதனை அறிவுறுத்துவர்.
    • சில வேதனை, நிகழ்வுகள் காலம் செல்ல செல்ல அமைதி பெறும்.

    அடிக்கடி உடம்பு வலி அல்லது உடம்பில் ஏதோ ஒரு இடத்தில் வலி என்று நாம் கூறுகின்றோம். இந்த வலிகளுக்கு காரணம் பல இருக்கின்றன. இதற்கு உடல், மனம் உளைச்சல், வேதனை உணர்ச்சிகள் ஆகியவையும் காரணமாக இருக்கலாம்.

    மன அழுத்தம் தலைவலியினை ஏற்படுத்தலாம். தொடர் வேலை செய்து இராமல் தினமும் சிறிது நேரம் ஓய்வு எடுக்க வேண்டும்.

    தோள் பட்டை வலி- மிக அதிக கவலை உணர்ச்சிகளை சுமப்பது, அதிக பொறுப்பு சுமை இவை தோள்பட்டை வலியினை ஏற்படுத்தலாம்.

    கழுத்து வலி- பிறரை மன்னிக்க முடியாத கோப உணர்ச்சி, தன்னையே மன்னித்துக் கொள்ள முடியாத கோப உணர்ச்சி, ஆக்கப்பூர்வமான சிந்தனைகளில் கவனம் செலுத்த முடியாமை போன்றவை கழுத்து வலிக்கு காரணமாக இருக்கும் என்கின்றனர்.

    மேல் முதுகு வலி- யாரும் தன் மீது அன்பு செலுத்தவில்லை என்ற உணர்வு, யாருக்கும் தன்னை பிடிக்கவில்லை என்ற உணர்வு மேல் முதுகு வலியினை ஏற்படுத்துமாம்.

    கீழ் முதுகு வலி- பணத்தைப் பற்றி அதிகம் கவலைப்படுபவர்களுக்கு கீழ் முதுகு வலி ஏற்படுகின்றதாம்.

    முழங்கை வலி- சில மாறுதல்களை ஏற்க முடியாமல் அவதிப்படுபவர்களுக்கு முழங்கை வலி ஏற்பட வாய்ப்புகள் உண்டு என்கின்றனர்.

    கை வலி- தனிமை இதற்கு ஒரு காரணம்.

    இடுப்பு வலி- வாழ்க்கையின் பாதையில் சரியான முடிவுகளை எடுக்கத் தெரியாதவர்களுக்கு இடுப்பு வலி ஏற்படுகின்றதாம்.

    முட்டி வலி- எதனையும் தானே செய்து கொள்ள வேண்டும். யாரையும் எதற்கும் எதிர்பாராத வாழ்க்கை வேண்டும் என்ற ஒரு அடமும் இதற்கு ஒரு காரணமாம். எளிமை, பிறருக்கு உதவுதல் போன்றவை நன்மை பயக்கும் என்கின்றனர்.

    ஆடு தசை வலி- மனக் கசப்புகளை மறக்காது மனதில் வைத்திருப்பவர்களுக்கு ஆடு தசை வலி ஏற்படலாம். மனதில் நன்றியுணர்வு, ஆக்கப்பூர்வமான எண்ணங்கள் இவை நலன் அளிக்கும் என்கின்றனர்.

    பாத வலி- அதிக மனச்சோர்வு, அழிவுப் பூர்வமான எண்ணங்கள் உடையவர்களுக்கு ஏற்படுகின்றதாம். ஆக்கப் பூர்வமான எண்ணங்கள் உடையவர்களுடன் இருப்பது நல்லது என்று அறிவுறுத்தப்படுகின்றது.

    கணுக்கால் வலி- தன் மீதே ஒருவர் மிகக் கடுமையாக இருப்பவர்களுக்கு கணுக்கால் வலி ஏற்படலாம். ஒருவர் தன்னை நேசிக்கவும் பழக வேண்டும்.

    சரி, இதையெல்லாம் யார் சொன்னார்கள்? பொதுவில் மன நலமின்மை உடல் நலத்தினை பாதிக்கும் என்பது மருத்துவ ரீதியான கூற்றுதான்.

    அதற்காக தானே செயல்படாமல் எந்த ஒரு அறிகுறியினையும் மருத்துவ பரிசோதனை செய்து மருத்துவரின் ஆலோசனை, மருந்து, சிகிச்சை இவற்றினை முறையாய் கடைபிடிக்க வேண்டும் என்பதே என்றென்றும் சரியான ஒன்று ஆகும். ஆக இதனையே அனைவரும் பின்பற்ற வேண்டும்.

    மன நல ஆலோசகர்களும், யோகா பயிற்சியாளர்களும் நம் உடல், மனம், ஆன்மா ஒன்றுக்கொன்று தொடர்பு உடையது என்பதனை அறிவுறுத்துவர்.

    மேற்கூறிய வலிகளும், மன நல பாதிப்பும் பற்றி ஒரு மன நல ஆய்வாளர் எழுதி யிருந்ததை படித்தேன். இதற்கு விஞ்ஞான ரீதியான ஆதாரம் இல்லைதான். ஆனால் பல மன வேதனைகள், கஷ்டங்கள் இல்லாதவர் என்பது அரிது. இதனையும் அறிந்து கொள்ளலாம் என்ற முறையில் இதனை பகிர்கின்றேன். மன நலத்தினை சீர்படுத்த முயற்சி எடுப்போமே. மற்றபடி எந்த உடல் நலபாதிப்பும் முறையான மருத்துவ சிகிச்சை பெற வேண்டியதே.

    சிந்தித்துப் பாருங்கள். நான் சொன்னது உண்மை என்பதனை உணருவீர்கள்.

    * கடந்த காலத்தினை மாற்றவே முடிவதில்லை. * வாழ்க்கைப் பயணத்தில் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் வேறு வேறு பாதை தான்.

    * ரொம்பவும் யோசித்தால் சோகம்தான் மிஞ்சும். * புன்னகையுங்கள். வெகு வேகமாய் பரவும் தன்மை கொண்டது.

    * மகிழ்ச்சி என்பது வெளியில் எங்கும் இல்லை. அவரவர் மனதினுள்தான் இருக்கின்றது.

    * எதனை நம் எண்ணங்களாய் இவ்வுலகிற்கு தருகின்றோமோ அதுவே அப்படியே நமக்குத் திரும்பி வரும்.

    * சில வேதனை, நிகழ்வுகள் காலம் செல்ல செல்ல அமைதி பெறும்.

    * பணம் பற்றாக்குறை அநேகர் வாழ்வில் பிரச்சனைதான். இதில் முதல் முக்கியத்துவம் எது என்பதில் கவனம் செலுத்தி அதனை சரி செய்துதான் அடுத்த முக்கியத்துவத்தினை பார்க்க முடியும்.

    * ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையினை வாழ்கின்றோமா? நம் வாழ்க்கைக்கு நாம் தான் பொறுப்பேற்று சரி செய்ய வேண்டும்.

    * அதிக பய உணர்வு இருக்கின்றதா? பல பயங்களையும் தனித்தனியே பிரித்து விடுங்கள். ஒவ்வொன்றாக கையாள வேண்டும். மொத்த பயத்திலும் மூழ்கி விட்டால் எழுந்திருப்பது கடினம் ஆகி விடும்.

    * சந்கேகம் ஏற்படுகின்றதா? அதில் தகுதியானவர்களிடம் அறிவுரை பெற்றால் தீர்வு மிக எளிதாகி விடும்.

    * வாழ்க்கைக்கு அர்த்தமே இல்லை என்று நொந்து போகிறீர்களா? தன்னால் இயன்ற சிறு சிறு உதவிகளை பிறருக்கு செய்து பாருங்கள்.

    கமலி ஸ்ரீபால்

    * ஒழுக்கமின்மை எதில் இருந்தாலும் சரி. 20 நாட்கள் கடும் தவம் போல் முயற்சி செய்து அதனை கண் காணாது விரட்டி விட வேண்டும். ஒழுக்கம் உள்ளே புகுந்து விடும்.

    * நன்றாக இருக்கும் மூளையை முயன்று கெடுத்துக் கொள்பவர்கள் பலர் உள்ளனர். அவர்கள் செய்வது என்ன தெரியுமா?

    * வெளி உலகமே பார்க்காது ஒரு அறைக்குள்ளேயே அடைந்து காலம் தள்ளுபவர்கள் அநேகர் உள்ளனர். குறிப்பாக வயதானவர்கள் இப்படி இருப்பர். இவர்கள் எப்பொழுதும் சோர்ந்து, வலுவிழந்து, மனதில் மகிழ்ச்சி இன்றி இருப்பார்கள். இதற்கு ஒரு முக்கிய காரணம் சிறிது நேரம் கூட அன்றாடம் சூரிய ஒளியில் அவர்கள் இருக்க மாட்டார்கள். ரூமில் மின்சார விளக்கு உதவியிலேயே அனைத்து வேலைகளையும் செய்வர். இப்படி சூரிய ஒளியே படாத உடலும், மூளையும் கெட்டுப் போகும்.

    * சிலர் வாயைத் திறந்தாலே அழிவுப் பூர்வமான எண்ணங்களின் வாடை மட்டுமே இருக்கும். தவறான வார்த்தைகள், அழிவுப் பூர்வமான எண்ணங்களால் துர்நாற்றங்களை வீசி மற்றவர்களின் நல்ல ஆக்கப்பூர்வ அலைகளை அழித்து விடுவர். இவர்களிடமிருந்து ஓட்டம் பிடிப்பதே நல்லது. இவர்களது மூளை அதிக பாதிப்பினை பெற்று இருக்கும்.

    * இளம் வயதினர் இசை கேட்கின்றேன் என்ற பெயரில் காதில் 'ஹெட்போன்' வைத்து மண்டையை உடைக்கும் சத்தத்தில் இசை கேட்டுக் கொண்டிருப்பர். இப்படி தொடர்ந்து செய்பவர்களின் மூளை பாதிக்கப்பட்டு செயல்திறன் குன்றி இருக்கும்.

    * எந்த ஒரு வீட்டு நிகழ்ச்சியோ, பொது நிகழ்ச்சியோ, இப்படி எதிலும் தலை கூட காட்டாமல் வீட்டினுள் பதுங்கி இருக்கும் மக்கள் உள்ளனர். இவர்கள் சிந்தனை, செயல் எல்லாமே மாறுபட்டு, பாதிக்கப்பட்டு இருக்கும்.

    * செல்போனை குடைந்து கொண்டே இருக்கின்றவர்கள் சோம்பலுடன் இருப்பதோடு உற்றார், உறவினரை ஒதுக்குவது போன்ற பழக்கங்களுக்கு ஆளாகின்றனர். அன்றாடம் குளிப்பது கூட இவர்களுக்கு பெரிய சுமை ஆகின்றது.

    * அதிக சர்க்கரை உணவு ஒன்று போதும். ஒரு மனிதனின் உடல், மனம், வாழ்க்கை என அனைத்தையும் கெடுத்து விடுகின்றது.

    * காலை எழுந்தது முதல் மூட்டை புளி போல் இருந்த இடத்தினை விட்டு அசையாது இருப்பவர்கள் உள்ளனர். உட்கார்ந்த இடத்திலேயே சாப்பாடு, தட்டிலேயே கை கழுவுதல், அப்படியே டி.வி., போன் பார்த்தல், அப்படியே படுத்துக் கொள்ளுதல் என்று காலம் தள்ளுவார்கள். இவர்களது மூளையும் அப்படியே மழுங்கி விடுகின்றது.

    * நாள் முழுக்க தூங்குவது, தோன்றும் நேரத்தில் எழுவது சாப்பிட்டவுடன் மலை சாய்வது போல் சாய்ந்து விடுவது என்று இருப்பவர்களுக்கு மூளை செயல்பாடு மிக அதிக பாதிப்படையும்.

    * இவற்றினை அறிந்து கொள்வதே நம்மிடம் ஏதேனும் இத்தகு பழக்கங்கள் இருக்குமாயின் அதனை சரி செய்து மூளையினை பாதுகாத்துக் கொள்ளத்தான்.

    * எது நமக்கு தேவைக்கு மிஞ்சி, அதிகமாக இருக்கின்றதோ அதெல்லாம் விஷம்தான். * உணவு, உடை, தூக்கம், அதிகாரம், சோம்பல், பயம், கோபம் இப்படி எதுவாயினும் அது எல்லைக் கோட்டினை தாண்டி விட்டால் அவை விஷம்தான் என்ப தனை அறிவோமாக.

    * நம் வாழ்க்கைக்கு நாம்தான் ஒரு குறிக்கோளினை உருவாக்கி கொள்ள வேண்டும்.

    * விடா முயற்சி என்பது அந்த குறிக்கோளை அடைவதற்காக வேண்டும்.

    * முயற்சியினால் அடைய முடியாதது இல்லை என்பதே வாழ்க்கை. 'முறையாய் வாழ்வோம்'

    Next Story
    ×