search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    சந்திரகிரகணத்தில் பரிகாரம் செய்யும் ராசிகள்
    X

    சந்திரகிரகணத்தில் பரிகாரம் செய்யும் ராசிகள்

    • சூரியன், சந்திரன், பூமி, ராகு, கேது ஆகிய ஐந்தும் ஒரே நேர்க்கோட்டில் சந்திக்கும் போது கிரகணம் ஏற்படுகிறது.
    • ஆன்மா சுத்தி அடையும் போது அடைய முடியாத வெற்றியே கிடையாது.

    நவகிரகங்கள் ஒன்பது.மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிகள் பன்னிரண்டு. இதில் சூரியன் முதல் சனி வரையிலான ஏழு கிரகங்களுக்கும் சொந்த வீடு உண்டு. ராகு, கேதுக்கள் நிழல் கிரகம் என்பதால் அவர்களுக்கு சொந்த வீடு கிடையாது.

    சூரியனுடைய சுழற்சிப் பாதையும் சந்திரனுடைய சுழற்சிப் பாதையும் ஒரு குறிப்பிட்ட எல்லையில் சந்திக்கும். அப்படி வடதிசையில் ஏற்படும் சந்திப்பை ராகு என்றும்; அதே நேரத்தில் அதற்கு நேர் எதிரில் 180வது டிகிரியில் சமசப்தமமாக ஏற்படும் தென்திசை சந்திப்பு கேதுவாகும்.

    சூரியனும் சந்திரனும் பன்னிரு ராசிகளை வலமாகச் சுற்றி வரும்போது ராகு-கேது இடமாகச் சுற்றி வரும். அப்போது சூரியனும் சந்திரனும் ஒரே ராசியில் ஒரே டிகிரியில் சந்திக்கும்போது அமாவாசை. அதே நேரத்தில் அவர்களுடன் ராகு சேரும்போது, அதற்கு ஏழாவது ராசியில் 180 டிகிரியில் கேது வரும்போது சூரிய கிரகணம் ஏற்படும். அதேபோல் பவுர்ணமி அன்று சூரியனும் சந்திரனும் நேருக்கு நேர் எதிரில் 180வது டிகிரியில் வரும்போது, சந்திர கிரகணம் ஏற்படும். அதாவது சூரியன், சந்திரன், பூமி, ராகு, கேது ஆகிய ஐந்தும் ஒரே நேர்க்கோட்டில் சந்திக்கும் போது கிரகணம் ஏற்படுகிறது.

    சந்திரகிரகணம்

    மங்களகரமான சோபகிருது வருடம் ஐப்பசி 11-ம் நாள் சனிக்கிழமை (29.10.2023) அன்று 1.03 மணி முதல் 2.24 மணி வரை அசுவினி நட்சத்திரத்தில் நிகழும் ராகு கிரகஸ்த பகுதி சந்திர கிரகணம் இந்தியாவில் தெரியும். கிரகண தோஷமுள்ள நட்சத்திரங்கள். ரேவதி, அசுவினி, பரணி, மகம், மூலம்.

    சந்திர கிரகணம் என்பது நிலா பூமியின் பின்னால் கடந்து செல்லும் போது பூமியானது சூரியனின் கதிர்களை நிலவின் மீது படுவதிலிருந்து மறைத்து விடுவதால் ஏற்படுவதாகும்.

    சந்திர கிரகணம் முழுமையாக ஏற்பட்டால் பூரண சந்திர கிரகணம் என்றும் அரைகுறையாக ஏற்பட்டால் பகுதி சந்திர கிரகணம் என்றும் அழைக்கப்படுகிறது.

    கிரகண நேரத்தில் நியாயமான நீண்ட நாட்களாக நிறைவேறாத கோரிக்கை உடையவர்கள், ஜனன கால ஜாதகத்தில் கிரகண தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் கிரகண நேரத்தில் தியானம் , ஜபம் செய்தால் ஆன்ம பலம் கிடைக்கும். ஆன்மா சுத்தி அடையும் போது அடைய முடியாத வெற்றியே கிடையாது.

    கொடிய தீராத கடன் பிரச்சினையால் அவதிப்படு பவர்கள் கிரகணம் விடும் நேரத்தில் தங்களால் முடிந்த தொகையை ஆன்லைனில் செலுத்தினால் வாட்டி வதைத்த கடன் பிரச்சினை விரைவில் தீரும். நடு இரவில் கிரகணம் சம்பவிப்பதால் பெரும்பான்மையாக எல்லோரும் தூங்கிக் கொண்டு இருப்பதால் உணவு கட்டுபாடு அவசியமில்லை.

    கர்பிணி பெண்கள் வெளியே செல்லக் கூடாது. உயிர் காக்க தேவையான நிலையில் அறுவை சிகிச்சை செய்யலாம் . மற்றவர்கள் ஒரு நாள் கழித்து அறுவை சிகிச்சை செய்யலாம்.

    இயன்றவர்கள் கிரகணம் நடந்து கொண்டு இருக்கும் போது காயத்திரி மந்திர ஜபம், ராம நாமப் பாராயணம் , திருக்கோளாற்றுப் பதிகம் பாராயணம் செய்யலாம் .

    பரிகார ராசிகள்

    ரேவதி, அசுவினி, பரணி, மகம், மூலம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் சாந்தி செய்து கொள்வது சிறப்பு.கிரகணம் முடிந்த பிறகு காலையில் நீராடிவிட்டு அருகில் உள்ள கோவிலுக்குச் சென்று வழிபாடு செய்து புதியதாக சமைத்த உணவை உண்ணலாம்.

    ஐப்பசி மாத பவுர்ணமியும் அன்னாபிசேகமும்

    ஜோதிடத்தில் சந்திரன் மனதை ஆள்பவன் சந்திரன்.

    நவகிரகத்தில் முதல் நிலை பெறுபவன் சூரியன் என்றாலும் சந்திரனை வைத்தே ராசியை குறித்தனர்.சூரியனிடமிருந்து ஒளியை கடன் வாங்கி சந்திரன் பிரகாசிக்கிறது இதை அறிவியலும் ஏற்றுக்கொள்கிறது. ஒளி கிரகங்களான சூரியன், சந்திரன் ஒரு ஜாதகத்தில் தந்தை, தாயை போன்றது. சூரியன் ஆத்ம பலத்தையும், சந்திரன் மனோ பலத்தையும் தருகிறார்கள்.

    இவ்வளவு சக்தி பெற்ற சூரிய, சந்திரனை வலுவிழக்க வைக்கும் ஆற்றல் ராகு, கேதுக்களுக்கு உண்டு. அமாவாசையில் பிறந்தவருக்கு சூரியன்+சந்திரன் சேர்க்கை இருக்கும். பவுர்ணமியில் பிறந்தவர்களுக்கு சூரியனுக்கு 7-ல் சந்திரன் இருக்கும். இவர்களோடு ராகு கேதுக்கள் நெருங்கி இணைந்து இருந்தால் மன சஞ்சலம் எளிதில் ஏற்படும். நிலையான முடிவெடுக்க முடியாமல் மனம் தடுமாறும்.


    இதே போல் சூரியன் நீசமாகி, ராகு, அல்லது கேது இணைந்தால் ஆன்ம பலமின்றி அடிமைதனமான வாழ்வும் அமையும். அது போல் சந்திரன் அஷ்டமாதிபதி நட்சத்திர சாரத்தில் அமர்ந்து ராகு கேதுக்கள் உடன் 8 டிகிரிக்குள் இணைவு பெற்றவர்கள் கண்டிப்பாக எந்த ஒரு விஷயத்திலும் முடிவெடுக்க கடுமையாக திணறுவர். ஒளி கிரகங்களான சூரியனும், சந்திரனும் ஒரு ஜாதகத்தில் வலுவற்று இருக்கும் நிலையில் அடுத்தவரை சார்ந்தோ அல்லது அவருடைய ஆதரவிலோ வாழ்க்கை அமையப் பெறும். அன்னை தந்தையின் ஆதரவும் முழுமையாக இருக்காது. மனநலப்பாதிப்பை கண்டிப்பாக உருவாக்கும். பணம், காதல், வேலை, குடும்பம், குழந்தை என இவற்றில் ஒன்றால் மனம் நிம்மதி இல்லாமல் வாடும்.

    அமாவாசை, பவுர்ணமி காலங்களில் இதன் தாக்கம் அதிகம் இருக்கும். பூரண பவுர்ணமி காலத்தில் கடல் பொங்கும், சீற்றமாகும். இத னால்தான் மன நலம் பாதித்தோர் இந்த நாட்களில் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்.

    சூரியன் பாதிக்கப்பபட்டோர் தினசரி சூரிய நமஸ்காரம் செய்வது நல்லது. சந்திரன் பாதிப்படைந்தோர் கிரிவலம் வர பிரச்சினை குறையும். பவுர்ணமி அன்று பூரண உபவாசம் இருந்த பின் மாலையில் சந்திர உதயத்திற்கு பின் வீட்டில் பூஜை செய்து, அபிராமி அம்மனையும், அண்ணாமலையாரையும் வழிபட்ட பின் சந்திரனுக்கு பச்சரிசி சாதம் படைத்து அதை பால் ஊற்றி சாப்பிட சந்திரதோஷம் குறையும்.

    ஐப்பசி மாதம் சிவன் கோவிலில் நடைபெறும் அன்னாபிசேக பூஜையில் கலந்து கொண்டு அங்கு வழங்கப்படும் அன்ன பிரசாதத்தை சாப்பிட்டால் சந்திர தோஷம் நீங்கும்.

    ஐப்பசி மாத பவுர்ணமியில் சிவாலயங்களில் உள்ள லிங்கத்திருமேனிக்கு அன்னத்தால் அபிசேகம் செய்யப்படுகிறது.

    தானங்களில் போதும் என்ற மனதி ருப்தியை தருவது அன்னதானம் மட்டுமே. உடல் இயக்கத்திற்கு காரணமானதுமான அன்னத்தை உலகுக்கெல்லாம் உணவு அளிக்கும் சிவபெருமானுக்கு ஐப்பசி பவுர்ணமியில் அபிசேகம் செய்து நன்றி தெரிவிக்கப்படும்.

    அன்னாபிஷேகத்தை கண்டு தரிசனம் செய்தால் அனைத்து பாவங்கள் விலகும். புண்ணியம் கிட்டும்.

    ஐப்பசி 11, சனிக்கிழமை (28.10.2023) அன்று ஆனந்தம் தரும் அன்னாபிஷேகம் சிவன் கோவிலில் நடைபெறும். எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருள் அன்னத்தின் வடிவில் இருப்பதாக கூறப்பட்டு உள்ளது. உலகத்திற்கே படியலக்கும் அந்த ஆண்டவனுக்கே அமுது படைக்கும் விழா தான் அன்னாபிஷேகம். அன்று அன்னாபிஷேகம் செய்து வழிபட்டால் உலகிற்கே பஞ்சம் வராது என்பது உண்மை.இந்த அன்னாபிஷேகத்தை தரிசித்து பிரசாதத்தை ஏற்றுக் கொண்டவர்க ளுக்கு என்றுமே அன்ன ஆகாரத்திற்கு கவலையே இல்லை.

    ஆலய வழிபாட்டில் பவுர்ணமியன்று ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு நட்சத்தி ரத்திற்கு உரிய பொருளால் சிவபெருமானை வழிபடுவது விசேஷமானதாகும். ஐப்பசி மாதம் அஸ்வினி நட்சத்திரத்திற்குரிய அன்னத்தால் வழிபடுவது சிறப்பானது. ஐப்பசி மாதப் பவுர்ணமி அன்று சந்திரன் தனது சாபம் முழுமையாகத் தீர்ந்து பதினாறு கலைகளுடன் முழுப் பொலிவுடன் திகழ்வதால் ஐப்பசி அனனாபிசேகம் மேலும் சிறப்பு பெறுகிறது.

    அக்டோபர் (ஐப்பசி) மாதத்தில்தான் நிலவு, பூமிக்கு மிக அருகில் வந்து தனது முழு ஒளியையும் பூமியை நோக்கி வீசுகிறது. அதனால் நவகிரகங்களில் சந்திரனுக்கு உரிய தானியம் அரிசியை அன்னாபிஷேகம் செய்வது வழிபடுவது சிறப்பு.இந்த அபிஷேகம் இரண்டு நாழிகை நேரம், அதாவது கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் அப்படியே வைக்கப்பட்டிருக்கும். அந்தச் சமயத்தில் யசூர் வேத பாராயணமும், ஸ்ரீ ருத்திரம் போன்ற மந்திரங்களின் பாராயணமும் நடைபெறும். இரண்டு நாழிகை நேரம் முடிந்த உடன் அன்னத்தை அகற்றி விடுவார்கள். பின்னர் ஐந்து வகைப் பொருட்கள் கொண்டு அபிஷேகம் நடைபெறும்.

    அன்னாபிஷேகப் பலன்கள்

    சோறு கண்ட இடம் சொர்க்கம் என்று ஒரு பழமொழி உண்டு. அது பொதுவாக, எந்த வேலையும் செய்யாமல் சாப்பிட்டு வெட்டியாக காலம் கழிப்பவரைக் அவ்வாறு கூறுவார்கள். ஆனால் உண்மைப் பொருள் அதுவல்ல. சோறாகிய அன்னம் கொண்டு நடக்கும் அன்னாபிஷேகத்தைக் கண்ட வர்களுக்கு சொர்க்கம் நிச்சயம் என்பதே காலப் போக்கில் இவ்வாறு மாறிவிட்டது.

    வியாபாரத்தில் பிரச்சினை இருப்பவர்களும், நஷ்டமடைந்தவர்களும் அன்னாபிஷேகத்தை தரிசித்துப் பிரசாதத்தை உண்டால் வியாபாரம் நிமிரும். மாணவர்கள் உண்டால் கல்வி ஆர்வம் கூடும்.

    வீட்டில் லிங்கம் வைத்திருந்தும் நித்ய வழிபாடுகள் செய்ய இயலாதவர்கள் வருடத்தில் ஒரு நாள் அன்னாபிஷேகம் செய்து பிரசாதம் உண்டால் சிவபூஜை செய்யாததால் ஏற்படும் தோஷம் விலகும்.

    நீண்ட நாட்களாக குழந்தைப் பேறு இல்லாத தம்பதிகள் அன்னாபிஷேகத்தைக் கண்டு பிரசாதம் உண்டால் குழந்தை பிறக்கும். இந்த அன்னத்தை உண்பவர்களுக்கு என்றைக்குமே உணவுக்கு தட்டுப்பாடு என்பதே வராது. வீட்டில் எப்போதும் தானியங்கள் மிகுந்து இருக்கும்.

    வருடம் முழுவதும் நல்ல விளைச்சல் இருக்கும், ஊர் செழிக்கும், கலைகள் வளரும், மக்கள் மகிழ்ச்சியோடு இருப்பார்கள் என்பது நம்பிக்கை. மேலும் சுய ஜாதகத்தில் சந்திரன் ராகு, சந்திரன் கேது சேர்க்கையால் ஏற்படும் மன சஞ்சலம், பய உணர்வு, ஆரோக்கிய குறைபாடு சீராகும்.தோற்றப் பொலிவும், தன்னம்பிக் கையும் கூடும்.

    எனவே வருடத்தின் ஒரு நாள் மட்டுமே கிட்டும் அன்னாபிசேக காட்சியை வழிபடுவதுடன் ஆலயங்களில் அன்று நடைபெறும் அன்னதானத்திற்கு உதவுவதும் நன்மையை அதிகரிக்கும். அன்று நள்ளிரவில் பவுர்ணமி முடியும் நேரத்தில் கிரகணம் சம்பவிக்க உள்ளதால் கோவிலில் அன்னாபிசேகம் நடைபெறும் நேரத்தை முன்கூட்டியே அறிந்து கொண்டு பயன் பெறவும்.

    Next Story
    ×