search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    மலரும் நினைவுகள் மீனா: தஞ்சாவூரு பொம்மை ஆனேன்...
    X

    மலரும் நினைவுகள் மீனா: தஞ்சாவூரு பொம்மை ஆனேன்...

    • சினிமா படப்பிடிப்பு என்றதால் அந்த கிராமத்து ஜனங்களும் எங்களை பார்க்க வருவார்கள்.
    • கோபுரத்தின் உச்சியில்தான் காட்சிகளை படமாக்கப் போகிறோம் என்றார்கள். கோபுரத்தை அண்ணாந்து பார்த்தேன். தலை சுற்றாத குறை தான்.

    தஞ்சாவூரு மண்ணு எடுத்து

    தாமிரபரணி தண்ணிய விட்டு

    சேத்து சேத்து செஞ்சதிந்த பொம்மை

    எத்தனையோ பொம்மை செஞ்சேன் கண்ணம்மா

    அடி அத்தனையும் உன்னைப் போல மின்னுமா?

    தந்தானே தந்தானே

    தந்தானக்குயிலே....

    -இந்த பாடலை இன்று கேட்டாலும் கைகள் தாளம் போடும். இது வெறும் பாடல் அல்ல. இந்த மண்ணின்-பெண்ணின் மகத்துவத்தை வைரமுத்து சார் வார்த்தைகளால் பொம்மை போல் வடித்து கேட்பவர் கண்களின் முன்பு ஆடவும் விட்டிருப்பார்.

    தஞ்சாவூர் பொம்மை தலையாட்டும்தான். அதற்காக என்னையும் ஒரு பொம்மையாக்கி தரையில் நின்று ஆட சொன்னால் பரவாயில்லை. கோபுரத்தின் உச்சி மீது ஏற்றி விட்டு ஆடும்மா என்றால் எப்படி ஆடுவது...?

    அப்படியும் ஆடினேன்... ஆட வைத்துவிட்டார் சேரன். பாரதி கண்ணம்மாவுக்கு பிறகு மீண்டும் சேரனின் 'பொற்காலம்' படத்தில் ஹீரோயினாக நடித்தேன்.

    படத்தில் 'மரகதம்' என்பது என் பெயர் படப்பிடிப்புக்காக மைசூரில் இருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் ஒரு சிறு கிராமத்தை தேர்வு செய்திருந்தார்கள். மொத்தமே சுமார் 50 வீடுகள்தான் அந்த கிராமத்தில் இருந்தது.

    அங்கேயே செட் போட்டு படப்பிடிப்பு நடந்தது. சினிமா படப்பிடிப்பு என்றதால் அந்த கிராமத்து ஜனங்களும் எங்களை பார்க்க வருவார்கள்.

    அந்த கிராமத்தில் பழமையான கோவிலும், அதன் பிரமாண்ட கோபுரமும் அழகாக இருந்தது. அதை பார்த்தால் படமாக்காமல் இருப்பாரா சேரன்...?

    'சிங்குச்சா சிங்குச்சா…

    செகப்பு கலரு சிங்குச்சா…

    பச்சை கலரு சிங்குச்சா…

    மஞ்சள் கலரு சிங்குச்சா… இந்த பாடல் பட்டி தொட்டியெல்லாம் ஆட வைத்த பாடல். ஆனால் அந்த பாடலுக்கு ஆடுவதற்கு நான் பட்டபாடு இருக்கிறதே.. அப்பப்பா..,

    அந்த கோவில் கோபுரத்தில் படமாக்க முடிவு செய்துவிட்டார். படக்குழுவினருடன் கோவில் கோபுரம் அருகே சென்றேன்.


    இந்த கோபுரத்தின் உச்சியில்தான் காட்சிகளை படமாக்கப் போகிறோம் என்றார்கள். கோபுரத்தை அண்ணாந்து பார்த்தேன். தலை சுற்றாத குறை தான்.

    பொதுவாக காட்சி களில் பின்னணியில் தான் கோபுரங்களை காட்டுவார்கள். சேரன் இப்படி கோபு ரத்தின் மீது நின்று ஆட வைத்து காட்சியாக்க நினைக்கிறாரே என்று மனதுக்குள் நினைத்து கொண்டேன். எனது தயக்கத்தை புரிந்து கொண்டு 'இதுவரை யாரும் இப்படி காட்சி வைத்ததில்லை. நன்றாக இருக்கும் பாருங்கள்' என்று என்னையும் உசுப்பேற்றினார். சரி. இந்த ரிஸ்க்கையும் எடுப்போமே என்று நானும் தயாரானேன்.

    கோபுரத்தின் மீது ஏறணுமே..? எப்படி ஏறுவது...? கோபு ரத்தின் சிற்பங்களை பிடித்து பிடித்து ஏற முடியாது. கடை சியில் கிரேன் கொண்டு வந்தார்கள். அதன் தொட் டிக்குள் ஏறிக்கொண்டேன்.

    கோபுர உச்சியை நோக்கி கிரேன் உயர் ந்தது. அந்த ரத்தில் நான் தனியாக நின்றது போல் இருந்தது. கோபுரத்தில் ஏறியதும் கீழே பார்த்தால் பயம்... ஆட வேண்டிய இடமோ ஒரு அடி அகலம் தான் இருக் கும்.... லேசாககால் தவறினால் அவ்வளவுதான்! தவறி விழுந்தால் பாதுகாக்க எந்த ஏற்பாடும் கூட கிடையாது.

    இப்படிப்பட்ட சூழ்நிலையில் சிங்குச்சா சிங்குச்சா என்று ஆட வேண்டுமென்றால் எப்படி இருக்கும்? அவருக்கும் ஆர்வ கோளாறு. எனக்கும் அந்த வயதில் ஆர்வக் கோளாறு. மனதில் தைரியத்தை வரவழைத்து கொண்டு ஆடினேன்.

    படம் வெளி வந்த போது சேரன் சொன்னது போலவே அந்த காட்சி நன்றாக இருந்தது. எல்லோராலும் பாராட்டப்பட்டது. காட்சி மட்டுமல்ல இந்த படத்தின் பல காட்சிகள் எனக்கு புதுப் புது அனுபவத்தை கொடுத்தன. படத்தில் நான் தறி நெசவு செய்பவள்.

    நகர வாசியான எனக்கு இந்த தொழில்கள் தெரியாது. பெண்கள் தறி நெய்வதை பார்க்கும் போதே ஆச்சரியமாக இருந்தது. அந்த காட்சியில் நடிக்க வேண்டு மென்றால் நெசவு பற்றி தெரிந்து கொள்ள வேண் டும் என்ப தற்காக அந்த கிரா மத்து பெண்க ளிடம் சென்று தறி நெய்யும் இடத்தில் அமர்ந்து பார்த்தேன். அவர்களின் கையும், காலும் ஒரே நேரத்தில் மின்னல் வேகத்தில் செயல் பட்டதை பார்த்து ஆச்சரியப்பட்டேன். தறி குழிக்குள் என்னை நிற்க வைத்து கற்று தந்தார்கள். காரின் ஆக்சி லேட்டர் போல் இரண்டு மிதி கட்டைகள்... ஒரே நேரத்தில் அபாய சங்கிலியை பிடித்து இழுப்பது போல் மேல் பகுதியில் உள்ள இழுவையை வலது கையால் இழுத்த படியே மிதிக்கும் கட்டையையும் மிதிக்க வேண்டும்.


    ஒவ்வொரு பக்கம் மிதிக்கும் போதும் நூலுடன் ஓடம் அங்கும் இங்கும் ஓடும். அதில் இருந்து வெளிவரும் நூல் தறியில் துணியாகி கொண்டிருக்கும். ஓடம் ஒவ்வொரு பக்கம் செல்லும் போது விழுதை பிடித்து முன்பக்கம் இழுத்து அடிக்க வேண்டும். அப்போதுதான் நூல் நன்றாக நெருங்கும், துணி நன்றாக இருக்கும். மிகவும் வித்தியாசமான தொழில். உடலின் அனைத்து பாகங்களுக்கும் பயிற்சியும் கிடைக்கும்.

    நான் அந்த காட்சியில் நடித்ததை பார்த்து உண்மையாகவே நெசவு தொழிலில் ஈடுபடும் பெ ண்களை போலவே இருந்ததாக எனக்கு கற்றுத் தந்த பெண்கள் பாராட்டி னார்கள். இந்த படத்தில் ஹீரோவாக வரும் முரளி மண் பாண்டம் செய்யக் கூடியவர்.

    அவர் என்னை நினைத்தபடி ஒரு பானையை செய்வார். அது கோணல் மாணலாக இருக்கும். ரொம்பவே வெயிட்டாகவும் இருந்தது. மண் பானையை இடுப்பில் வைத்து நடந்து செல்வதே கஷ்டம். அதிலும் இந்த மாதிரி குடத்தை தண்ணீருடன் இடுப்பில் எடுத்து செல்ல வேண்டும். கோணல் மாணலாக அந்த குடம் இடுப்பில் நிற்கவில்லை. இடுப்பில் வைத்திருக்கும் தண்ணீர் பானை நழுவி விழுந்து விட கூடாது. நடக்கும் போது நளினமும் இருக்க வேண்டும். அதற்கேற்ற முக பாவனையும் இருக்க வேண்டும்.

    மொத்தத்தில் இடுப்பில் தண்ணீர் பானையும் இருக்க வேண்டும். அதைப் பற்றிய சிந்தனை இல்லாமல் நடிப்பில் கவனம் இருக்க வேண்டும். இப்படிப்பட்ட சவால்களை சந்தித்ததால் தான் சாதிக்க முடிந்தது. மீனா சூப்பரா நடித்து இருக்கிறாள் என்ற பாராட்டையும் பெற முடிந்தது. (உங்கள் மீனாவின் அடுத்த அனுபவம் என்ன....? காத்திருங்கள் அடுத்த வாரம் வரை... பை... பை...) -தொட ரும்.

    Next Story
    ×