search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    மலரும் நினைவுகள் மீனா: பாரதி கண்ணம்மா...
    X

    மலரும் நினைவுகள் மீனா: பாரதி கண்ணம்மா...

    • ழக்கமாக டைரக்டர்கள் வந்தால் கதையை ரத்தின சுருக்கமாக சொல்வார்கள் அவ்வளவுதான்.
    • டைரக்டரும் காட்சிகளை ரசித்து ரசித்து படமாக்கியதால் நானும் உற்சாகமாக நடித்தேன்.

    தமிழ் திரை உலகில் ஒரு வித்தியாசமான டைரக்டர் சேரன்!

    எது மாதிரியும் இல்லாத புதுமாதிரி என்பார்களே அதே போல் சேரன் புதுமாதிரி டைரக்டர். அவரது படங்களும் புது மாதிரியாக இருக்கும்.

    நான் கே.எஸ்.ரவிக்குமார் சார் டைரக்ஷனில் நட்டாமை படத்தில் நடித்து கொண்டிருந்தபோது அவரிடம் உதவி இயக்குனராக சேரன் பணியாற்றி கொண்டிருந்தார். அதனால் எங்களுக்குள் பார்த்து பழகிய பரிச்சயம் உண்டு. திடீரென்று ஒரு நாள் அவரிடம் இருந்து போன் கால் வந்தது. என்னை சந்திக்க வேண்டும் என்றார்.

    வீட்டுக்கு வாங்களேன் என்றேன். வீட்டுக்கு வந்தவரின் கையில் ஒரு பெரிய புத்தகம் வைத்திருந்தார். எப்படியும் 1000 பக்கங்களுக்கு மேல் இருக்கும்.

    அமர்ந்து பேச தொடங்கியதும், மேடம் நான் முதல் முதலாக ஒரு படம் இயக்கப் போகிறேன்...! என்றார்.

    ரொம்ப சந்தோசம். வாழ்த்துக்கள் என்றேன். உடனே அவர் நான் இயக்கப்போகும் படத்தில் நீங்கள் தான் ஹீரோயினாக நடிக்கனும் என்றார். திடீரென்று அவர் அப்படி சொன்னதும், புது டைரக்டர். கதை எப்படி இருக்கும்? எதுவும் புரியாமல் இருந்த என்னிடம் அவர் தனது கையில் வைத்திருந்த அந்த பெரிய புத்தகத்தை நீட்டினார். அதை வாங்கி கொண்டு 'இது என்ன'? என்றேன். கதை, காட்சிகள் எல்லாம் அதில் இடம் பெற்றுள்ளது என்றார். எனக்கு ரொம்ப ஆச்சரியமாக இருந்தது.

    வழக்கமாக டைரக்டர்கள் வந்தால் கதையை ரத்தின சுருக்கமாக சொல்வார்கள் அவ்வளவுதான்.

    ஆனால் இவர் என்ன இப்படி ஒரு பெரிய புத்தகத்தையே தந்திருக்கிறாரே என்று நினைத்து ஆச்சரியப்பட்டேன்.


    உடனே நீங்கள் படித்து பார்த்து விட்டு பதில் சொல்லுங்கள் என்று அவர் கூறி விட்டு கிளம்பி சென்றார். புத்தகத்தை விரித்து படிக்க தொடங்கினேன். அது வெறும் புத்தகம் அல்ல. படத்தின் முதல் காட்சி முதல் கடைசி காட்சி வரை ஒவ்வொரு காட்சியாக எழுதி இருந்தார்.

    அந்த காட் சிக்கான லொகேசன், நடிகர், நடிகை யின் கா ஸ்ட்யூம், பேச வேண்டிய வச னங்கள் ஒவ்வொரு காட்சி யிலும் இடம் பெற வேண்டிய பொரு ட்கள் வரை எல்லாமும் இடம் பெற்று இருந்தது. அதை படித்த போது கதை படித்தது போல் இல்லை. படத்தில் நடிக் கும் முன்பே முழு படமும் கண் முன் விரிந்தது போல் இருந்தது. எனக்கு மிக வும் பிடித்து இருந்தது. அவரிடம் 'ஓ.கே.' என்று சொல்லி விட்டேன்.

    குறிப்பிட்ட தேதியில் படப்பிடிப்பு தொடங்கியது. கோபி செட்டிப்பாளையம் பகுதியில் தான் முக்கால்வாசி படப்பிடிப்பு.

    நான் பாவாடை தாவணியில் தமிழ் பாரம்பரியம், குடும்ப கட்டுப்பாடோடு வளரும் பெண். பச்சை கலர் பாவாடை, சிவப்பு கலர் தாவணி, இரட்டை ஜடை போட்ட பின்னலுடன் தலையில் ரிப்பன் கட்டியிருப்பேன்.

    பெரும்பாலும் கிராமத்து லொகேஷன். ஆனாலும் அந்த காலம் வெயில் காலம். கடுமையான வெயில் வறுத்தெடுத்தது. சில காட்சிளில் காலில் செருப்பு போடாமல் நடிக்க வேண்டும். கொதிக்கும் வெயிலில் கால் சூட்டில் தவிப்பேன்.

    சேரனை பொறுத்தவரை ஒவ்வொரு காட்சியையும் ரசித்து ரசித்து படமாக்குவார். எனக்கு ஜோடி பார்த்திபன் சார். அவரை பற்றி சொல்லவே வேண்டியதில்லை. நினைத்த மாத்திரத்தில் கவிதை மழையை கொட்டுவார். கவிதையிலேயே வர்ணித்து வான் உயரத்தில் நம்மை தூக்குவார். திடீரென்று அதே கவிதையில் டம்மென்று கீழே போட்டு விடுவார்.

    நான் அதனாலேயே அவரை பார்த்ததும் சார், கவிதை யெல்லாம் வேண்டாம். ஆளை விடுங்கள் என்று கிண்டல் செய்வேன்.

    என்னுடைய பிறந்த நாளுக்காக கண்ணா... மீனா...? என்ற நாலே வரியில் ஒரு கவிதை. அதில் கண் படத்துடன் பிரமாண்டமாக பிரேம் போட்டு எனக்கு பரிசளித்தார். அது எங்கள் வீட்டின் முன்னறையில் இடம் பெற்றுள்ளது.

    ஷூட்டிங்கை பொறுத்த வரை தொடங்குவது தெரி யும். அதன் பிறகு எப்போது முடியும்? எப்போது தூங்க செல்கிறோம் என்ற கணக்கே கிடையாது.

    அந்த அளவுக்கு இரவு பகலாக ஓய்வு இல்லாமல் படப்பிடிப்பு நடந்தது. டைரக்டரும் காட்சிகளை ரசித்து ரசித்து படமாக்கியதால் நானும் உற்சாகமாக நடித்தேன். ஒவ்வொரு காட்சி யையும் ரசித்து நடித்தேன்.

    பகலில் வெயிலிலும், இரவில் தூக்க மில்லாமலும் நடித்ததால் என் முகத்தில் அடிக்கடி பரு (பிம்பிள்) வந்து கஷ்டப்படுத்தியது.


    கண்ணாடி முன்னால் நின்று பார்க்கும் போது முகத்தில் பெரிய அளவில் பரு வந்திருக்கும் . அதை பார்த்ததும் எனக்கு கஷ்டமாக இருக்கும். அய்யோ நாளை அழகான காட்சி... இந்த பிம்பிளோடு நடித்தால் நல்லா இருக்காதே என்று மேக்கப் மேனை நீங்கள் என்ன செய்வீர்களோ, எனக்கு முகத்தில் இருக்கும் பிம்பிள் வெளியே தெரியக்கூடாது என்பேன். அவரும் என்னவெல்லாமோ போட்டு மறைக்க போராடுவார். ஆனாலும் பிம்பிள் லேசாக தெரியும். அந்த படத்தில் ஆரம்பத்தில் வரும் காட்சிகளில் எனது வலது கன்னத்தில் பிம்பிள் இருப்பது நன்றாகவே தெரியும்.

    என்னை ஒழுங்காக தூங்கவிடாமலும், சாப்பிட விடாமலும் ஓய்வே தராமல் நடிக்க வைத்ததால் தான் இப்படி பிம்பிள் வருகிறது என்று படக்குழுவினரிடம் அடிக்கடி கூறுவேன்.

    எனது குடும்பம் கட்டுப்பாடான ஜமீன்தார் குடும்பம். ஜமீன்தாருக்கு விசுவா சமான வேலைக்காரர் பாத்தி ரத்தில் பார்த்திபன். எங்களுக்குள் காதல். அதை சொன்னால் வீட்டில் ஏற்பார்களா? குடும்ப கவுரவம் என்ன ஆகும்? என்று வெளியே சொல்லா மலே தற்கொலை செய்து கொள்வேன். அதே சிதையில் இருந்து பார்த்திபன் உயிரை மாய்த்து கொள்வது போல் 'கிளைமாக்ஸ்' காட்சி. 'கண்ணம்மா வளர்ந்தாள்...

    மீண்டும் கண்ணம்மாவை பற்றிய ருசிகர தகவல்களுடன் அடுத்த வாரம் சந்திக்கிறேன்...

    (தொடரும்...)

    Next Story
    ×