என் மலர்tooltip icon

    2025 - ஒரு பார்வை

    REWIND 2025: இந்த ஆண்டின் சர்ச்சையான கேட்ச்சுகள்
    X

    REWIND 2025: இந்த ஆண்டின் சர்ச்சையான கேட்ச்சுகள்

    • ஆஷஸ் தொடரில் 2 கேட்ச்சுகள் சர்ச்சையானது.
    • இந்திய வீரர் அபிஷேக் சர்மா கேட்ச் அவுட் ஆனது சர்ச்சையானது.

    2025-ல் கிரிக்கெட்டில் நடந்த சர்ச்சையான கேட்ச்களில் குறித்த தகவலை இந்த செய்தியின் மூலம் பார்க்கலாம். அதில் முக்கியமாக இந்தியா A மற்றும் பாகிஸ்தான் ஷஹீன்ஸ் அணிக்கு இடையேயான 2025 ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார் போட்டியில் நடந்தது.

    இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் மாஸ் சதகத் அடித்த பந்தை பவுண்டரி லைன் அருகே ஃபீல்டிங் செய்துகொண்டிருந்த நேஹல் வதேரா மற்றும் நமன் திர் ஆகியோர் இணைந்து ஒரு அற்புதமான ரிலே கேட்சைப் பிடித்தனர். ஆனால், மூன்றாவது நடுவர் ரீப்ளேக்களை நீண்ட நேரம் ஆய்வு செய்து, இறுதியில் 'நாட் அவுட்' என்று அறிவித்தது, இந்திய வீரர்களுக்குப் பெரும் அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தியது.


    மூன்றாவது நடுவர் அந்தப் பந்துக்கு சிக்ஸர் வழங்கவும் இல்லை. மாறாக, அதை ஒரு 'டாட் பால்' என்று அறிவித்து, ஸ்கோர் கார்டில் பதிவு செய்தார். இந்த கேட்ச் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்தியாவுக்கு எதிரான 2025 ஆசிய கோப்பை சூப்பர் ஃபோர் போட்டியில், பாகிஸ்தான் வீரர் ஃபக்கர் ஜமான்-இன் சர்ச்சைக்குரிய அவுட், பூதாகரமாகியது.

    போட்டியின் மூன்றாவது ஓவரில் இந்த விவாதம் வெடித்தது. ஹர்திக் பாண்ட்யா பந்து வீசிய அந்த ஓவரில், ஃபக்கர் ஜமான் பந்தை அடிக்க முயன்றார். பந்து எட்ஜ் ஆகி சென்றது. அதை விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் 'கேட்ச்' பிடித்தார். பந்து தரையில் பட்டதா இல்லையா என்ற சந்தேகத்தில், கள நடுவர்கள் மூன்றாவது நடுவரின் உதவியை நாடினர்.

    நடுவரின் தீர்ப்பில் அதிருப்தி அடைந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி), தொலைக்காட்சி நடுவர் தவறான தீர்ப்பை வழங்கியதாகக் கூறி, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐசிசி) அதிகாரப்பூர்வ புகார் அளித்துள்ளது.

    ஆஷஸ் தொடரின் போது இங்கிலாந்து வீரர் ஜேமி ஸ்மித் கேட்ச் சர்ச்சையானது. ஸ்னிக்கோ (Snicko) தொழில்நுட்பத்தின் தவறான பயன்பாட்டால் பந்து பேட்டில் படாமலேயே 'ஸ்னிக்கோ'வில் சிக்னல் கிடைத்தது. இதனால் அவர் அவுட் என அறிவிக்கப்பட்டார், இது தொழில்நுட்பத்தின் நம்பகத்தன்மை குறித்த கேள்வியை எழுப்பியது.


    இதே தொடரின் போது ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் கேரி, 72 ரன்கள் எடுத்திருந்தபோது, ஜோஷ் டங்லேவின் பந்தில் பேட்டின் விளிம்பிள் பட்டதாக இங்கிலாந்து முறையிட்டது. ஆனால் தொலைக்காட்சி நடுவர், ஸ்னிக்கோ பதிவின்படி, பந்து பேட்டிலிருந்து விலகிச் செல்வதைக் காட்டி, 'நாட்-அவுட்' என கூறினார். கேரி, "சிறிய இறகு போன்ற விளிம்பு" பட்டதை உணர்ந்ததாகப் பின்னர் ஒப்புக்கொண்டார். இது பெரும் சர்ச்சையானது.


    இந்தியா vs தென்னாப்பிரிக்கா 2025 5-வது டி20: அபிஷேக் ஷர்மா டிஸ்மிஸல் (அல்ட்ரா எட்ஜ் சர்ச்சை) அகமதாபாத்தில் நடந்த போட்டியில், இந்திய தொடக்க வீரர் அபிஷேக் ஷர்மா (34 ரன்கள்) கார்பின் போஷ் பந்தில் கேட்ச் பிடிக்கப்பட்டதாகக் கருதப்பட்டது. பவுலர் பெரிய அளவில் அப்பீல் செய்யாத நிலையில் விக்கெட் கீப்பர் குயின்டன் டி காக் அப்பீல் செய்தார்.

    இதற்கு நடுவர் அவுட் கொடுத்தார். உடனே அபிஷேக் சர்மா ரீவ்யூ எடுத்தார். முடிவில் அல்ட்ரா எட்ஜ் ஒரு சிறிய ஸ்பைக்கைக் காட்டியது. ஸ்னிகோ போன்ற தொழில்நுட்பங்களின் ஸ்பைக்குகள் தவறானவை என்று பலர் விமர்சித்தனர். இது அதிர்ஷ்டமற்ற டிஸ்மிஸல் என்று கருதப்பட்டது.

    Next Story
    ×