என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
2019 பிஎம்டபுள்யூ எக்ஸ்5 அறிமுகம்
Byமாலை மலர்8 Jun 2018 12:20 PM GMT (Updated: 8 Jun 2018 12:20 PM GMT)
பிஎம்டபுள்யூ 2019 எக்ஸ்5 அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
புதுடெல்லி:
பிஎம்டபுள்யூ நிறுவனத்தின் 2019 எக்ஸ்5 அறிமுகம் செய்யப்பட்டது. நான்காம் தலைமுறை எக்ஸ்5 எஸ்யுவி மாடலில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருக்கும் புதிய பிஎம்டள்யூ மாடல் பிரிமீயம் எஸ்யுவி மாடலின் 20-வது ஆண்டு விழாவை முன்னிட்டு வெளியிடப்படுகிறது.
பக்கவாட்டுகளில் கிரீஸ் லைன்கள் முந்தைய மாடல்களை விட மிக நேர்த்தியாக மாற்றப்பட்டுள்ளது. எனினும் ஒட்டுமொத்த தோற்றம் தற்போதைய மாலை போன்றே காட்சியளிக்கிறது. புதிய மாடல் முந்தைய மாடலை விட நீலமாகவும், அகலமாகவும், உயரமாக இருக்கிறது.
இதன் வீல்பேஸ் 42 மில்லிமீட்டர் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது, குளோபல் வேரியன்ட் 20 இன்ச் 5-ஸ்போக் கொண்ட வீல்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. எனினும் இந்த ஆப்ஷன் இந்தியாவில் வெளியிடப்படும் மாடலில் இருக்காது என கூறப்படுகிறது.
பின்புறம் வடிவமைப்பு முற்றிலும் மாற்றப்பட்டு, புதிய டெயில் லேம்ப் மற்றும் பம்ப்பர்களை கொண்டுள்ளது. இதன் ஸ்பாயிலர் மற்றும் ஷார்க்-ஃபின் ஆன்டெனா புதிய மாடலில் மிகவும் அழகாக காட்சியளிக்கிறது.
உள்புற டேஷ்போர்டு அதிநவீன வடிவமைப்பு கொண்டிருக்கிறது. மேலும் புதிய பிஎம்டபுள்யூ எக்ஸ்5 புத்தம் புதிய 'லைவ் காக்பிட் புரோஃபஷனல்' யூனிட் கொண்டிருக்கும் முதல் மாடல் என்ற பெருமையை பெற்றிருக்கிறது. இதில் 12.3 இன்ச் ஹெச்டி டிஸ்ப்ளேக்களும் அடங்கும், இவை இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகும்.
இந்த சிஸ்டம் 20 ஜிபி இன்டெர்னல் மெமரி, யுஎஸ்பி, ப்ளூடூத் கனெக்டிவிட்டி, ரியல்-டைம் வெயிக்கில் டேட்டாவை இயக்கும் வசதி வழங்கப்படுகிறது. இத்துடன் கனெக்ட்டெட் பேக்கேஜ் புரோஃபஷனல் அம்சம் வழங்கப்பட்டிருப்பதால், ரிமோட் சேவைகள், கான்சியர்ஜ், நேரலை டிராஃபிக் மற்றும் பல்வேறு இதர தகவல்களை வழங்குகிறது.
புதிய பிஎம்டபுள்யூ எக்ஸ்5 மாடலில் Xடிரைவ்40i ட்ரிம் வேரியன்ட் ஆக அறிமுகம் செய்யப்படும். இதில் 3.0 லிட்டர் ஸ்டிரெயிட்-சிக்ஸ் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்படுகிறது. இந்த இன்ஜின் 340 பிஹெச்பி மற்றும் 500 என்எம் டார்கியூ செயல்திறன் கொண்டுள்ளது. இந்தியாவில் இந்த மாடலில் தற்போதைய 3.0 லிட்டர் ஸ்டிரெயிட்-சிக்ஸ் டீசல் இன்ஜின் வழங்கப்படுகிறது, இந்த இன்ஜின் 265 பிஹெச்பி பவர், 620 என்எம் டார்கியூ வழங்குகிறது. இந்த இன்ஜின்கள் 8-ஸ்பீடு ZF ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் கொண்டுள்ளது.
2019-ம் ஆண்டின் முதல் காலாண்டில் சர்வதேச சந்தையில் புதிய பிஎம்டபுள்யூ எக்ஸ்5 அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து இந்தியாவில் இந்த மாடல் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ.80 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X