search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஆந்திராவில் 7 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த வாலிபர் கைது
    X

    ஆந்திராவில் 7 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த வாலிபர் கைது

    • திருமணமாகி விவாகரத்து பெற்று வரன் தேடும் வசதியான பெண்களை கண்டுபிடித்து காதல் வலை வீசினார் சிவசங்கர் பாபு.
    • சிவசங்கர் பாபுவை திருமணம் செய்த சில பெண்கள் தற்போது கர்ப்பம் அடைந்து உள்ளனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் அடப்பா சிவசங்கர் பாபு. இவர் ஐ.டி நிறுவனத்தில் வேலை செய்து வருவதாகவும் லட்சக்கணக்கில் சம்பளம் பெறுவதாகவும் திருமண தகவல் மையத்தில் பதிவு செய்திருந்தார்.

    திருமணமாகி விவாகரத்து பெற்று வரன் தேடும் வசதியான பெண்களை கண்டுபிடித்து காதல் வலை வீசினார். அவர்களின் நம்பிக்கையை பெரும் அளவிற்கு நைசாக பேசி மனதை மயக்குவார். இதை உண்மை என நம்பிய விவாகரத்து பெற்ற இளம்பெண்கள் 7 பேரை அடுத்தடுத்து திருமணம் செய்து லட்சக்கணக்கில் நகை, பணத்தை மோசடி செய்துள்ளார்.

    இளம்பெண்ணை திருமணம் முடித்த சில மாதங்களில் அவரிடமிருந்து நகை, பணத்தை வாங்கிக்கொண்டு அடுத்த பெண்ணை தேடி செல்வார்.

    ஒரே பெண்ணிடம் மட்டும் ரூ.30 லட்சம் பணம் மற்றும் ஏராளமான நகைகளை ஏமாற்றி வாங்கிச்சென்று அடகு வைத்தது தெரிய வந்தது. சிவசங்கர் பாபுவை திருமணம் செய்த சில பெண்கள் தற்போது கர்ப்பம் அடைந்து உள்ளனர்.

    அவரால் பாதிக்கப்பட்ட பெண்கள் ஆந்திரா மற்றும் தெலுங்கானா போலீஸ் நிலையங்களில் புகார் செய்தனர். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த சிவசங்கர் பாபுவை தேடிவந்தனர்.

    இந்த நிலையில் கச்சிபவுலி போலீசார் சிவசங்கர் பாபுவை கைது செய்தனர். மேலும் இதுபோல் பெண்களை ஏமாற்றி உள்ளாரா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×