என் மலர்tooltip icon

    இந்தியா

    மகளிர் உலக கோப்பை வெற்றி.. ஜனாதிபதி திரௌபதி முர்மு வாழ்த்து
    X

    மகளிர் உலக கோப்பை வெற்றி.. ஜனாதிபதி திரௌபதி முர்மு வாழ்த்து

    • மற்ற வீராங்கனைகள் சீரான இடைவெளியில் அவுட் ஆகி வெளியேறினர்.
    • இந்த தருணம் பெண்கள் கிரிக்கெட்டை இன்னும் உயர்ந்த இடத்துக்கு அழைத்துச் செல்லும்"

    மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டி நவி மும்பையில் நடைபெற்றது. இதில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.

    முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 298 ரன்கள் எடுத்தது. ஷபாலி வர்மா 87 ரன்னும், தீப்தி சர்மா 58 ரன்னும், ஸ்மிருதி மந்தனா 45 ரன்னும் எடுத்தனர்.

    299 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இறங்கிய தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் லாரா வால்வார்ட் நிலைத்து நின்று விளையாடி 101 ரன்களில் அவுட் ஆனார். மற்ற வீராங்கனைகள் சீரான இடைவெளியில் அவுட் ஆகி வெளியேறினர்.

    45.3 ஓவர்களில் 246 ரன்கள் எடுத்து தென் ஆப்பிரிக்க அணி ஆட்டமிழந்தது. இதனால் இந்திய அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

    ஜனாதிபதி திரௌபதி முர்மு வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "2025 ஆம் ஆண்டு ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் ஒவ்வொரு வீராங்கனைக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்! அவர்கள் முதல் முறையாக அதை வென்று வரலாறு படைத்துள்ளனர்.

    இன்று அவர்களின் திறமைக்கும் செயல்திறனுக்கும் ஏற்ற பலனைப் பெற்றுள்ளனர். இந்த தருணம் பெண்கள் கிரிக்கெட்டை இன்னும் உயர்ந்த இடத்துக்கு அழைத்துச் செல்லும்" என்று தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×