search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஆதரவற்ற 600 பேர் உடல்களை தகனம் செய்த பெண்
    X

    பெண் சமூக சேவகர் வர்ஷா

    ஆதரவற்ற 600 பேர் உடல்களை தகனம் செய்த பெண்

    • கொரோனாவால் இறந்தவர்களின் உடல்கள் எங்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
    • பணம் மட்டுமின்றி பொருட்கள் உதவியும் எங்களுக்கு தொண்டு நிறுவனங்கள் மூலம் கிடைத்தது.

    திருப்பதி:

    லக்னோவைச் சேர்ந்த பெண் சமூக சேவகர் வர்ஷா (வயது 42). இவர் சிறுவயது முதலே பல்வேறு சமூக சேவைகளை செய்து வருகிறார்.

    கொரோனா காலத்தில் இறந்தவர்களின் உடலை கொண்டு செல்வதற்காக ஆம்புலன்சு ஏற்பாடு செய்தார். பின்னர் ஆதரவற்றவர்கள் மற்றும் கொரோனா காலத்தில் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்தார்.

    இவரது தலைமையில் 12 பேர் கொண்ட குழு உள்ளது. இந்த குழுவினர் கடந்த 3 ஆண்டுகளில் 600-க்கும் மேற்பட்ட ஆதரவற்றவர்களின் உடலை தகனம் செய்துள்ளனர். கொரோனா பாதிக்கப்பட்டு இறந்த 200 பேர் உடல்கள் இவர்கள் மூலம் அடக்கம் செய்யப்பட்டுள்ளன.

    வர்ஷாவின் சமூக சேவைகளுக்காக பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது அவர் உலகின் மதிப்புமிக்க போர்ப்ஸ் பத்திரிகை பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.

    கொரோனா பரவல் ஏற்பட்டபோது எனது நெருங்கிய நண்பர் இறந்து விட்டார். அவரது உடலை எடுத்துச் செல்வதற்காக உதவி கேட்டோம். ஆனால் நோய் பரவலுக்கு பயந்து ஆம்புலன்சு கொண்டுவர மறுத்தனர்.

    மேலும் சிலர் கொடுக்க முடியாத தொகையை கேட்டனர். இந்த சம்பவம் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியது. அடுத்த நாள் ஒரு ஆம்னி வேனை வாடகைக்கு எடுத்து டிரைவரை அமர்த்தினேன்.

    அதில் இறந்தவர்களை ஏற்றிச்செல்ல இலவச வாகனம் என்ற எழுதியபடி எனது நண்பர் பலியான ஆஸ்பத்திரிக்கு சென்றேன்.

    கொரோனாவால் இறந்தவர்களின் உடல்கள் எங்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

    முதல் நாளில் 5 உடலை தகனம் செய்தோம். தொடக்கத்தில் இது மிகவும் கடினமாக இருந்தது. காரணம் கவச உடை அணிந்து கொண்டு சுட்டெரிக்கும் வெயிலிலும் உடல்களை தகனம் செய்யும் பணியில் ஈடுபட்டோம்.

    சில நாட்கள் அதிக அளவில் உடல்களை அடக்கம் செய்ய நேர்ந்ததால் சுடுகாட்டிலேயே இரவு நேரங்களில் தங்கும் நிலை ஏற்பட்டது.

    தொடக்கத்தில் எனது சொந்த பணத்தை பயன்படுத்தினேன். பிறகு உத்தரபிரதேசத்தை சேர்ந்த அரசியல்வாதி ஒருவர் எங்களுக்கு ஆம்புலன்ஸ் ஒன்றை இலவசமாக வழங்கினார். அதன் மூலம் நோயாளிகளை மருத்துவமனைகளுக்கு அழைத்துச்செல்ல ஆரம்பித்தோம்.

    பணம் மட்டுமின்றி பொருட்கள் உதவியும் எங்களுக்கு தொண்டு நிறுவனங்கள் மூலம் கிடைத்தது. அதன் மூலம் தொடர்ந்து ஏழைகளுக்கு உதவி செய்து வருகிறோம்.

    ஆரம்பத்தில் நான் உடலை அடக்கம் செய்யும் பணியில் ஈடுபட்டபோது எனது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களிடம் நான் விளக்கி கூறியதும் எனது செயலை கண்டு மகிழ்ச்சி அடைந்தனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×