என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
சஞ்சய் ரதோட்டுக்கு மந்திரி பதவி வழங்கியது ஏன்?: ஷிண்டே விளக்கம்
- சஞ்சய் ரதோட் இளம்பெண் தற்கொலை வழக்கு சர்ச்சையில் சிக்கி மந்திரி பதவியை இழந்தவர்.
- தானாஜி சாவந்த்திற்கு மாநிலம் முழுவதும் பல இடங்களில் கல்வி நிலையங்கள் உள்ளன.
மும்பை
ஷிண்டே தரப்பில் மந்திரி பதவி ஏற்ற சஞ்சய் ரதோட், உத்தவ் தாக்கரே ஆட்சியின்போது இளம்பெண் தற்கொலை வழக்கு சர்ச்சையில் சிக்கி மந்திரி பதவியை இழந்தவர். அவருக்கு மந்திரி பதவி வழங்கப்பட்டதற்கு ஆளும் கட்சியிலேயே எதிர்ப்பு கிளம்பி உள்ளது. மாநில பா.ஜனதா துணை தலைவர் சித்ரா வாக் கண்டனம் தெரிவித்ததோடு, சஞ்சய் ரதோடுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுவேன் எனவும் அறிவித்து உள்ளார்.
ஆனால் உத்தவ் தாக்கரே ஆட்சியின் போதே சஞ்சய் ரதோட் குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டு விட்டதால் அவருக்கு பதவி வழங்கப்பட்டு இருப்பதாக முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே நியாயப்படுத்தி உள்ளார்.
இதேபோல ஏக்நாத் ஷிண்டே அதிருப்தி அணியை உருவாக்கியபோது முதலில் ஆதரவு தெரிவித்த தானாஜி சவாந்துக்கு மந்திரி பதவி வழங்கப்பட்டு உள்ளது. தானாஜி சாவந்த் 2014 - 2019 வரையிலான பா.ஜனதா- சிவசேனா கூட்டணி ஆட்சியில் மந்திரியாக இருந்தவர் ஆவார். ஆனால் கடந்த முறை அவருக்கு மந்திரி பதவி வழங்கப்படவில்லை.
இதன் காரணமாக அவர் உஸ்மனாபாத்தில் கட்சி கூட்டங்களை புறக்கணித்து வந்தது குறிப்பிடத்தக்கது. பணக்கார எம்.எல்.ஏ. வாக கருத்தப்படும் இவர் 2019-ம் தேர்தலின் போது வேட்பு மனுவில் தனக்கு ரூ.206 கோடி சொத்து இருப்பதாக தெரிவித்து இருந்தார். தானாஜி சாவந்த்திற்கு மாநிலம் முழுவதும் பல இடங்களில் கல்வி நிலையங்கள் உள்ளன.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்